|
|
வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப, |
|
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் |
|
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப, |
|
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து, |
5 |
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, |
|
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் |
|
ஓதைத் தெள் விளி புலம்தொறும் பரப்ப, |
|
கோழிணர் எதிரிய மரத்த, கவினி, |
|
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில், |
10 |
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய், |
|
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த |
|
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ |
|
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர் |
|
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன |
15 |
அம் கலுழ் மாமை கிளைஇய, |
|
நுண் பல் தித்தி, மாஅயோளே? |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து சொல்லியது. - குன்றியனார் |
|
உரை |
|
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக் |
|
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச் |
|
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண், |
|
தளிர் ஏர் மேனி, மாஅயோயே! |
5 |
நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச, |
|
கோடை நீடிய பைது அறு காலை, |
|
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும் |
|
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல் |
|
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி, |
10 |
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை, |
|
பல்லோர் உவந்த உவகை எல்லாம் |
|
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை |
|
ஓங்கித் தோன்றும் உயர் வரை |
|
வான் தோய் வெற்பன் வந்தமாறே |
|
தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- கபிலர் |
|
உரை |
|
கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை |
|
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி, |
|
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி |
|
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய, |
5 |
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி, |
|
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது |
|
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய், |
|
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே |
|
கொய் அகை முல்லை காலொடு மயங்கி, |
10 |
மை இருங் கானம் நாறும் நறு நுதல், |
|
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை |
|
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும் |
|
அளியரோ அளியர்தாமே அளி இன்று |
|
ஏதில் பொருட்பிணிப் போகி, தம் |
15 |
இன் துணைப் பிரியும் மடமையோரே! |
|
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரையாசிரியர் நல்லந்துவனார் |
|
உரை |
|
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும் |
|
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே; |
|
முரண் செறிந்திருந்த தானை இரண்டும் |
|
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர் |
5 |
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது, |
|
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய |
|
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி, |
|
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி, |
|
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு |
10 |
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், |
|
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென, |
|
கண்டது நோனானாகி, திண் தேர்க் |
|
கணையன் அகப்பட, கழுமலம் தந்த |
|
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி |
15 |
அழும்பில் அன்ன அறாஅ யாணர், |
|
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை, |
|
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை, |
|
தண் குடவாயில் அன்னோள் |
|
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே! |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற் கீரத்தனார் |
|
உரை |
|
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் |
|
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப, |
|
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து, |
|
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு, |
5 |
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் |
|
காடு இறந்தனரே, காதலர். மாமை, |
|
அரி நுண் பசலை பாஅய், பீரத்து |
|
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே, |
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
10 |
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி, |
|
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் |
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே, |
|
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, |
|
ஆதிமந்தி போல, பேதுற்று |
15 |
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார், |
|
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல், |
|
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய |
|
உடை மதில் ஓர் அரண் போல, |
|
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே! |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் |
|
உரை |
|
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான் |
|
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து, |
|
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி, |
|
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய |
5 |
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை |
|
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர! |
|
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று, |
|
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல், |
|
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து, |
10 |
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம் |
|
கூறேம். வாழியர், எந்தை! செறுநர் |
|
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும் |
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் |
|
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் |
15 |
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க; |
|
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ? |
|
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர் நன் முல்லையார் |
|
உரை |
|
அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப |
|
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து |
|
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை |
|
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து, |
5 |
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி |
|
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து, |
|
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும் |
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு, |
|
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின் |
10 |
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின், |
|
குறு நடைப் புறவின் செங் காற் சேவல் |
|
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும் |
|
புலம்பொடு வந்த புன்கண் மாலை, |
|
''யாண்டு உளர்கொல்?'' எனக் கலிழ்வோள் எய்தி, |
15 |
இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன் |
|
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச் |
|
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின் |
|
வேய் புரை பணைத் தோள், பாயும் |
|
நோய் அசா வீட, முயங்குகம் பலவே. |
|
தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார் |
|
உரை |
|
''அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள், |
|
''பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு, |
|
நனி பசந்தனள்'' என வினவுதி. அதன் திறம் |
|
யானும் தெற்றென உணரேன். மேல் நாள், |
5 |
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு |
|
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி, |
|
''புலி புலி!'' என்னும் பூசல் தோன்ற |
|
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ் |
|
ஊசி போகிய சூழ் செய் மாலையன், |
10 |
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன், |
|
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி, |
|
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு, |
|
''யாதோ, மற்று அம் மா திறம் படர்?'' என |
|
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு, |
15 |
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி, |
|
நாணி நின்றனெமாக, பேணி, |
|
''ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் |
|
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப் |
|
பொய்யும் உளவோ?'' என்றனன். பையெனப் |
20 |
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, |
|
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச் |
|
சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே. |
|
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து, |
|
அவன் மறை தேஎம் நோக்கி, ''மற்று இவன் |
25 |
மகனே தோழி!'' என்றனள். |
|
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே. |
|
செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது. - தங்கால் முடக் கொற்றனார் |
|
உரை |
|
''கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள் |
|
அளியும், அன்பும், சாயலும், இயல்பும், |
|
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்'' என, |
|
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த |
5 |
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி, |
|
குறுக வந்து, குவவுநுதல் நீவி, |
|
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள் |
|
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப, |
|
பல் கால் முயங்கினள்மன்னே! அன்னோ! |
10 |
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி, |
|
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய |
|
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் |
|
காடு உடன்கழிதல் அறியின் தந்தை |
|
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர், |
15 |
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, |
|
கோதை ஆயமொடு ஓரை தழீஇ, |
|
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள் |
|
ஆடுவழி ஆடுவழி, அகலேன்மன்னே! |
|
உடன்போயின தலைமகளை நினைந்து, செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது. - வண்ணப்புறக் கந்தரத்தனார் |
|
உரை |
|
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி, |
|
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்; |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்; |
|
மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப, |
5 |
பகலும் நம்வயின் அகலானாகிப் |
|
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன், |
|
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி, |
|
''வாராதோர் நமக்கு யாஅர்?'' என்னாது, |
|
மல்லல் மூதூர் மறையினை சென்று, |
10 |
சொல்லின் எவனோ பாண! ''எல்லி |
|
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் |
|
துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்'' என, |
|
கண் நிறை நீர் கொடு கரக்கும், |
|
ஒண் நுதல் அரிவை, ''யான் என்செய்கோ?'' எனவே. |
|
தோழி பாணனுக்குச் சொல்லியது. - கருவூர்ப் பூதஞ்சாத்தனார் |
|
உரை |
|