|
|
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற, |
|
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து, |
|
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை, |
|
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி, |
5 |
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி |
|
எருவைச் சேவல் கரிபு சிறை தீய, |
|
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை, |
|
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி |
|
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின் |
10 |
பிரியின் புணர்வதுஆயின் பிரியாது, |
|
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ் |
|
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும் |
|
மனைமுதல் வினையொடும் உவப்ப, |
|
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே. |
|
பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.- பெருந்தேவனார் |
|
உரை |
|
''வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல், |
|
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் |
|
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள் |
|
இன்னா இசைய பூசல் பயிற்றலின், |
5 |
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் |
|
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம் |
|
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச் |
|
சிலையுடை இடத்தர் போதரும் நாடன் |
|
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு |
10 |
அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?'' என |
|
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால் |
|
சேர்ந்தன்று வாழி, தோழி! ''யாக்கை |
|
இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள் |
|
ஆய்மலர் உண்கண் பசலை |
15 |
காம நோய்'' எனச் செப்பாதீமே. |
|
தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி,''அறத்தொடு நிற்றும்'' என, தலைமகள் சொல்லியது. - நொச்சிநியமங் கிழார் |
|
உரை |
|
அறியாய், வாழி தோழி! இருள் அற |
|
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக் |
|
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய, |
|
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய், |
5 |
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, |
|
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு |
|
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில் |
|
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை |
|
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின், |
10 |
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் |
|
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும் |
|
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும், |
|
''இல்லோர்க்கு இல்'' என்று இயைவது கரத்தல் |
|
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் |
15 |
பொருளே காதலர் காதல்; |
|
''அருளே காதலர்'' என்றி, நீயே. |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார் |
|
உரை |
|
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப, |
|
வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற் |
|
காரும் ஆர்கலி தலையின்று. தேரும் |
|
ஓவத்தன்ன கோபச் செந் நிலம், |
5 |
வள் வாய் ஆழி உள் உறுபு உருள, |
|
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத் |
|
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய, |
|
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி, |
|
படு மணி மிடற்ற பய நிரை ஆயம் |
10 |
கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர் |
|
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க, |
|
மனைமனைப் படரும் நனை நகு மாலை, |
|
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் |
|
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப் |
15 |
புன் காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர் |
|
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி, |
|
''முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்! |
|
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி, |
|
வருகுவைஆயின், தருகுவென் பால்'' என, |
20 |
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி, |
|
திதலை அல்குல் எம் காதலி |
|
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே. |
|
வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் |
|
உரை |
|
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின், |
|
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை, |
|
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின், |
|
விளி முறை அறியா வேய் கரி கானம், |
5 |
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் |
|
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து யாம் |
|
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ, |
|
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு |
|
கண்படை பெறேன், கனவ ஒண் படைக் |
10 |
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் |
|
பொருது புண் நாணிய சேரலாதன் |
|
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென, |
|
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் |
|
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர், |
15 |
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண் |
|
காதல் வேண்டி, எற் துறந்து |
|
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே. |
|
புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார் |
|
உரை |
|
நகை ஆகின்றே தோழி! நெருநல் |
|
மணி கண்டன்ன துணி கயம் துளங்க, |
|
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
5 |
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய |
|
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப, |
|
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும் |
|
தண் துறை ஊரன் திண் தார் அகலம் |
|
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய, |
10 |
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் |
|
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு, |
|
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு |
|
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று, |
|
''இம் மனை அன்று; அஃது உம் மனை'' என்ற |
15 |
என்னும் தன்னும் நோக்கி, |
|
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே. |
|
பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
|
உரை |
|
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை |
|
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி, |
|
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது, |
|
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து, |
5 |
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக் |
|
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ் |
|
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர, |
|
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும் |
|
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை, |
10 |
யாமே எமியம்ஆக, தாமே |
|
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின் |
|
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர் |
|
வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ |
|
கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
15 |
முதுநீர் முன்துறை முசிறி முற்றி, |
|
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் |
|
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து, |
|
பானாட் கங்குலும் பகலும் |
|
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே? |
|
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.- நக்கீரர் |
|
உரை |
|
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ, |
|
மன் உயிர் மடிந்த பானாட் கங்குல், |
|
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது, |
|
வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத் |
5 |
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை, |
|
கூதிர், இல் செறியும் குன்ற நாட! |
|
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ் |
|
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற, |
|
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே |
10 |
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும் |
|
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை |
|
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி, |
|
மனைமரம் ஒசிய ஒற்றிப் |
|
பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே. |
|
சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் |
|
உரை |
|
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப் |
|
பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும் |
|
வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது |
|
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை, |
5 |
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் |
|
மரம் செல மிதித்த மாஅல் போல, |
|
புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை, |
|
நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள் |
|
படி ஞிமிறு கடியும் களிறே தோழி! |
10 |
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல், |
|
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து, |
|
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை, |
|
இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த |
|
தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம் |
15 |
தாம் பாராட்டிய காலையும் உள்ளார் |
|
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு |
|
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப் |
|
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகன் |
|
உரை |
|
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க, |
|
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை |
|
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, |
|
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு |
5 |
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, |
|
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் |
|
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம் |
|
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய; |
|
''ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை, |
10 |
கோதை ஆயமொடு வண்டல் தைஇ, |
|
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி'' எனக் |
|
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற் |
|
கொற்றச் சோழர் குடந்தை வைத்த |
|
நாடு தரு நிதியினும் செறிய |
15 |
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே. |
|
தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற் கீரத்தனார் |
|
உரை |
|