|
|
''நோற்றோர்மன்ற தாமே கூற்றம் |
|
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்'' எனத் |
|
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர் |
|
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து |
5 |
ஆழல் வாழி, தோழி! தாழாது, |
|
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால் |
|
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ, |
|
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் |
|
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு, |
10 |
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் |
|
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான் |
|
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி |
|
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும், |
|
பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது |
15 |
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி |
|
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின் |
|
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த |
|
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே. |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் |
| உரை |
|
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன |
|
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய், |
|
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள், |
|
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன |
5 |
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு |
|
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி |
|
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப, |
|
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின், |
|
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று |
10 |
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல, |
|
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல் |
|
ஆகம் அடைதந்தோளே வென் வேற் |
|
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி |
|
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக் |
15 |
கடவுள் எழுதிய பாவையின், |
|
மடவது மாண்ட மாஅயோளே. |
|
அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் |
|
உரை |
|
கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி, |
|
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு |
|
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல் |
|
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி, |
5 |
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி |
|
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப, |
|
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல் |
|
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண், |
|
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி, |
10 |
கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து, |
|
மன்று நிறை பைதல் கூர, பல உடன் |
|
கறவை தந்த கடுங் கால் மறவர் |
|
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ |
|
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை |
15 |
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை |
|
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள், |
|
''வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண் |
|
சேக் கோள் அறையும் தண்ணுமை |
|
கேட்குநள்கொல்?'' எனக் கலுழும் என் நெஞ்சே. |
|
தலைமகள் புணர்ந்துடன் செல்ல, செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.- கருவூர்க் கண்ணம்புல்லனார் |
|
உரை |
|
களையும் இடனால் பாக! உளை அணி |
|
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா |
|
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய, |
|
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி, |
5 |
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் |
|
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக, |
|
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல |
|
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின், |
|
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர, |
10 |
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, |
|
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு |
|
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ, |
|
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன், |
|
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் |
15 |
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை |
|
புலம்பு கொள் மாலை கேட்டொறும் |
|
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் |
|
உரை |
|
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் |
|
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம் |
|
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் |
|
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்; |
5 |
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற் |
|
பாடிச் சென்ற பரிசிலர் போல |
|
உவ இனி வாழி, தோழி! அவரே, |
|
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச் |
|
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும் |
10 |
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி, |
|
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் |
|
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, |
|
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை |
|
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன |
15 |
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி, |
|
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் |
|
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; ''பணைத் தோள், |
|
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை, |
|
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு |
20 |
அரியவால்'' என அழுங்கிய செலவே! |
|
வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார் |
|
உரை |
|
''இம்மை உலகத்து இசையொடும் விளங்கி, |
|
மறுமை உலகமும் மறு இன்று எய்துப, |
|
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச் |
|
சிறுவர்ப் பயந்த செம்மலோர்'' எனப் |
5 |
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் |
|
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி! |
|
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு |
|
வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின் |
|
இயன்ற அணியன், இத் தெரு இறப்போன் |
10 |
மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து, |
|
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும் |
|
பூங் கண் புதல்வனை நோக்கி, ''நெடுந் தேர் |
|
தாங்குமதி, வலவ!'' என்று இழிந்தனன். தாங்காது, |
|
மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப் |
15 |
புல்லி, ''பெரும! செல் இனி, அகத்து'' எனக் |
|
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், ''தடுத்த |
|
மாநிதிக் கிழவனும் போன்ம்'' என, மகனொடு |
|
தானே புகுதந்தோனே; யான் அது |
|
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, ''இவற் |
20 |
கலக்கினன் போலும், இக் கொடியோன்'' எனச் சென்று |
|
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு |
|
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப் |
|
பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான், |
|
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய |
25 |
பழங் கணோட்டமும் நலிய, |
|
அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே. |
|
பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - செல்லூர்க் கோசிகன் கண்ணனார் |
| உரை |
|
யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி |
|
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது |
|
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன், |
|
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை, |
5 |
அரம் போழ் நுதிய வாளி அம்பின், |
|
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார், |
|
நெல்லி நீளிடை எல்லி மண்டி, |
|
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர் |
|
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் |
10 |
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் |
|
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் |
|
மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர் |
|
கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன |
|
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை, |
15 |
''உரு இல் பேஎய் ஊராத் தேரொடு |
|
நிலம் படு மின்மினி போல, பல உடன் |
|
இலங்கு பரல் இமைக்கும்'' என்ப நம் |
|
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே! |
|
பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நோய்பாடியார் |
|
உரை |
|
''அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத் |
|
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய, |
|
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம் |
|
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை |
5 |
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை |
|
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என, |
|
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே; |
|
பின்னும் கேட்டியோ?'' எனவும் அஃது அறியாள், |
|
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை |
10 |
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் |
|
வருவர்ஆயின், ''பருவம் இது'' எனச் |
|
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின் |
|
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக, |
|
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து |
15 |
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் |
|
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப, |
|
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம் |
|
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன் |
|
வெண் கோட்டு யானை விளி படத் துழவும் |
20 |
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் |
|
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே. |
|
தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - ஊட்டியார் |
|
உரை |
|
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த் |
|
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல |
|
வண்ணம் வாடிய வரியும், நோக்கி, |
|
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின் |
5 |
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச் |
|
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப் |
|
பராரை நெல்லி அம் புளித் திரள் காய் |
|
கான மட மரைக் கணநிரை கவரும் |
|
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று, |
10 |
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் |
|
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த |
|
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம் |
|
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல் |
|
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம் |
15 |
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண் |
|
அம்புடைக் கையர் அரண் பல நூறி, |
|
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன் |
|
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத் |
|
தலை நாள் அலரின் நாறும் நின் |
20 |
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே. |
|
''பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்'' எனக் கவன்ற தலைமகட்கு, ''வருவர்'' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் |
|
உரை |
|
கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென, |
|
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக் |
|
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி, |
|
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் |
5 |
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே |
|
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற, |
|
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே |
|
வதுவை கூடிய பின்றை, புதுவது |
|
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் |
10 |
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப் |
|
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் |
|
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும் |
|
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி |
|
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை, |
15 |
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த |
|
பல் வீழ் ஆலம் போல, |
|
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. |
|
தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் |
|
உரை |
|