|
|
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் |
|
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம் |
|
நயன் இல் மாக்கள் போல, வண்டினம் |
|
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர, |
5 |
மை இல் மான் இனம் மருள, பையென |
|
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப, |
|
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு |
|
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன, |
|
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை, |
10 |
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக, |
|
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக் |
|
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது, |
|
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து |
|
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி, |
15 |
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து, |
|
இது கொல் வாழி, தோழி! என் உயிர் |
|
விலங்கு வெங் கடு வளி எடுப்பத் |
|
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே? |
|
பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது - அந்தியிளங்கீரனார் |
| உரை |
|
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம் |
|
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள், |
|
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் |
|
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி, |
5 |
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை |
|
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண், |
|
ஆறே அரு மரபினவே; யாறே |
|
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய; |
|
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க, |
10 |
''அஞ்சுவம் தமியம்'' என்னாது, மஞ்சு சுமந்து, |
|
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன், |
|
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய, |
|
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை |
|
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த |
15 |
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் |
|
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை, |
|
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி, |
|
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக |
|
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த |
20 |
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின் |
|
ஆனா அரும் படர் செய்த |
|
யானே, தோழி! தவறு உடையேனே. |
|
தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார் மகனார் கடலனார் |
|
உரை |
|
பின்னொடு முடித்த மண்ணா முச்சி |
|
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ; |
|
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு |
|
ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க, |
5 |
வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய், |
|
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர |
|
''என் ஆகுவள்கொல், அளியள்தான்?'' என, |
|
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் |
|
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி |
10 |
இருவேம் நம் படர் தீர வருவது |
|
காணிய வம்மோ காதல்அம் தோழி! |
|
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் |
|
மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின், |
|
ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப் |
15 |
பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி |
|
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர் |
|
சென்ற தேஎத்து நின்றதால், மழையே. |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் குறித்த பருவ வரவு கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. - எருமை வெளியனார் |
|
உரை |
|
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து, |
|
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த, |
|
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை, |
|
குருதி உருவின் ஒண் செம் மூதாய் |
5 |
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப, |
|
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ |
|
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய், |
|
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில், |
|
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை |
10 |
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ, |
|
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி'' என, |
|
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் |
|
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல் |
15 |
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற் |
|
கல்லாக் கோவலர் ஊதும் |
|
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே! |
|
தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார் |
|
உரை |
|
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர் |
|
பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின் |
|
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது, |
|
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல் |
5 |
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை, |
|
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர் |
|
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும் |
|
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த |
|
கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல், |
10 |
செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய், |
|
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர் |
|
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து, |
|
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது |
|
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும் |
15 |
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும் |
|
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?'' என- |
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன |
|
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்; |
|
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்; |
20 |
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி |
|
ஆனா நோயை ஆக, யானே |
|
பிரியச் சூழ்தலும் உண்டோ, |
|
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?'' |
|
''பொருள்வயிற் பிரிவர்'' என வேறுபட்ட தலைமகட்கு, ''பிரியார்''எனத் தோழி சொல்லியது. - மதுரைப்போத்தனார் |
|
உரை |
|
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க, |
|
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென |
|
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு |
|
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை |
5 |
அவை புகு பொருநர் பறையின், ஆனாது, |
|
கழறுப என்ப, அவன் பெண்டிர்; ''அந்தில், |
|
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன், |
|
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல், |
|
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என, |
10 |
ஆதிமந்தி பேதுற்று இனைய, |
|
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும் |
|
அம் தண் காவிரி போல, |
|
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே. |
|
''தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்'' என்று கழறக் கேட்ட பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - பரணர் |
|
உரை |
|
''நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர், |
|
துன் அருங் கானம் துன்னுதல் நன்று'' எனப் |
|
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச் |
|
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற |
5 |
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும் |
|
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ், |
|
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார், |
|
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின், |
|
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த |
10 |
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர, |
|
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும் |
|
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப் |
|
புல் அரை இத்திப் புகர் படு நீழல் |
|
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை, |
15 |
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை, |
|
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன் |
|
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த |
|
திருந்துஇலை எஃகம் போல, |
|
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே. |
|
தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.- மருதன் இள நாகனார் |
|
உரை |
|
''நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, |
|
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின், |
|
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து, |
|
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல் |
5 |
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ, |
|
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல், |
|
தேம் பிழி நறவின் குறவர் முன்றில், |
|
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் |
|
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென |
10 |
வாடை தூக்கும் வருபனி அற்சிரம், |
|
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர் |
|
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?'' என, |
|
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும், |
|
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட! |
15 |
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை |
|
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று |
|
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு, |
|
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி, |
|
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது, |
20 |
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி, |
|
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய, |
|
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி |
|
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த |
|
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே? |
|
களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார் |
|
உரை |
|
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர் |
|
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து, |
|
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில், |
|
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய |
5 |
வன் புலம் துமியப் போகி, கொங்கர் |
|
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் |
|
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள் |
|
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் |
|
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப, |
10 |
''வல்லாங்கு வருதும்'' என்னாது, அல்குவர |
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை |
|
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை, |
|
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக் |
|
கொடு வில் எயினர் கோட் சுரம் படர, |
15 |
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை, |
|
கல் பிறங்கு அத்தம் போகி, |
|
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே. |
|
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் |
|
உரை |
|
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் |
|
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின் |
|
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப! |
|
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை |
5 |
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த |
|
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும். |
|
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை |
|
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின் |
|
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப, |
10 |
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ, |
|
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் |
|
தண் நறும் பைந் தாது உறைக்கும் |
|
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே. |
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார் |
|
உரை |
|