|
|
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் |
|
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின், |
|
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை |
|
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு, |
5 |
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் |
|
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக் |
|
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை |
|
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள |
|
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை |
10 |
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த |
|
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர் |
|
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் |
|
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம் |
|
மை எழில் உண்கண் கலுழ |
15 |
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே? |
|
பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார் |
|
உரை |
|
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் |
|
கோடை அவ் வளி குழலிசை ஆக, |
|
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை |
|
தோடு அமை முழவின் துதை குரல் ஆக, |
5 |
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, |
|
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, |
|
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து, |
|
மந்தி நல் அவை மருள்வன நோக்க, |
|
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில் |
10 |
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் |
|
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து, |
|
செருச் செய் யானை செல் நெறி வினாஅய், |
|
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை, |
|
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர் |
15 |
பலர்தில், வாழி தோழி! அவருள், |
|
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, |
|
ஓர் யான் ஆகுவது எவன்கொல், |
|
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே? |
|
தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. - கபிலர் |
|
உரை |
|
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச் |
|
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, |
|
கறை அடி மடப் பிடி கானத்து அலற, |
|
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து, |
5 |
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து, |
|
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி, |
|
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர், |
|
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும் |
|
கல்லா இளையர் பெருமகன் புல்லி |
10 |
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும், |
|
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ, |
|
எய்த வந்தனவால்தாமே நெய்தல் |
|
கூம்பு விடு நிகர் மலர் அன்ன |
|
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே. |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார் |
|
உரை |
|
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில் |
|
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி, |
|
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ, |
|
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர |
5 |
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை |
|
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி, |
|
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய, |
|
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும் |
|
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின் |
10 |
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே, |
|
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி, |
|
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு |
|
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும் |
|
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் |
15 |
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து, |
|
வினைவயின் பெயர்க்கும் தானை, |
|
புனைதார், வேந்தன் பாசறையேமே! |
|
தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. - மதுரை எழுத்தாளன் |
|
உரை |
|
''நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும், |
|
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், |
|
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர் |
|
அறவர்அல்லர் அவர்'' எனப் பல புலந்து, |
5 |
ஆழல் வாழி, தோழி! ''சாரல், |
|
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி, |
|
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை |
|
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும் |
|
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை, |
10 |
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை |
|
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை |
|
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து, |
|
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார், |
|
வருதும், யாம்'' எனத் தேற்றிய |
15 |
பருவம்காண் அது; பாயின்றால் மழையே. |
|
தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் |
|
உரை |
|
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை |
|
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால் |
|
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி |
|
மனை விளக்குறுத்து, மாலை தொடரி, |
5 |
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை; |
|
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் |
|
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென, |
|
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர், |
|
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் |
10 |
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர, |
|
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று |
|
வால் இழை மகளிர் நால்வர் கூடி, |
|
''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப் |
|
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என, |
15 |
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி |
|
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க, |
|
வதுவை நல் மணம் கழிந்த பின்றை, |
|
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து, |
|
''பேர் இற்கிழத்தி ஆக'' எனத் தமர் தர, |
20 |
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல், |
|
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து |
|
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ, |
|
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப, |
|
அஞ்சினள் உயிர்த்தகாலை, ''யாழ நின் |
25 |
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை'' என, |
|
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின், |
|
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர, |
|
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து, |
|
ஒய்யென இறைஞ்சியோளே மாவின் |
30 |
மடம் கொள் மதைஇய நோக்கின், |
|
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே. |
|
வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர் கிழார் |
|
உரை |
|
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம், |
|
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும் |
|
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை, |
|
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி, |
5 |
குடுமி நெற்றி நெடு மரச் சேவல் |
|
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது, |
|
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் |
|
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி, |
|
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென, |
10 |
குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம், |
|
நனி நீடு உழந்தனைமன்னே! அதனால் |
|
உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற |
|
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச் |
|
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி, |
15 |
தாழ் இருங் கூந்தல் நம் காதலி |
|
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே. |
|
வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரைப் பேராலவாயார் |
|
உரை |
|
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை |
|
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப் |
|
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும் |
|
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி, |
5 |
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய |
|
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம் |
|
நடுங்கு துயர் களைந்த நன்னராளன் |
|
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து |
|
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக் |
10 |
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் |
|
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து, |
|
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் |
|
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி, |
|
கொடு விரல் உளியம் கெண்டும் |
15 |
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே? |
|
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- ஈழத்துப் பூதன் தேவனார் |
|
உரை |
|
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின், |
|
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை, |
|
உருத்து எழு குரல குடிஞைச் சேவல், |
|
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய |
5 |
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண், |
|
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து |
|
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர் |
|
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய, |
|
களரி பரந்த கல் நெடு மருங்கின், |
10 |
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர் |
|
மை படு திண் தோள் மலிர வாட்டி, |
|
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய |
|
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த |
|
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து, |
15 |
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர், |
|
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் |
|
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது, |
|
மெல்லென் சேவடி மெலிய ஏக |
|
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து |
20 |
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள், |
|
இடு மணற் பந்தருள் இயலும், |
|
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே? |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரைக்காஞ்சிப் புலவர் |
|
உரை |
|
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி |
|
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும் |
|
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை, |
|
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ, |
5 |
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள் |
|
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின், |
|
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின், |
|
''நீங்குக'' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ? |
|
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது |
10 |
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர், |
|
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர், |
|
கருங் கட் கோசர் நியமம் ஆயினும், |
|
''உறும்'' எனக் கொள்குநர்அல்லர் |
|
நறு நுதல் அரிவை பாசிழை விலையே. |
|
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை மருதன் இளநாகனார் |
|
உரை |
|