|
|
அம்ம வாழி, தோழி! ''இம்மை |
|
நன்று செய் மருங்கில் தீது இல்'' என்னும் |
|
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்? |
|
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த |
5 |
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர் |
|
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல் |
|
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி, |
|
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து |
|
அடி புதை தொடுதோல் பறைய ஏகி, |
10 |
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், |
|
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு, |
|
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல, |
|
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று |
|
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை, |
15 |
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர், |
|
தண் கார் ஆலியின், தாவன உதிரும் |
|
பனி படு பல் மலை இறந்தோர்க்கு |
|
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே! |
|
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் |
|
உரை |
|
உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக் |
|
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென; |
|
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு |
|
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா, |
5 |
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி |
|
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட; |
|
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது, |
|
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென |
|
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்; |
10 |
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப, |
|
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன், |
|
காவலர் அறிதல் ஓம்பி, பையென |
|
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து, |
|
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து, |
15 |
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி! |
|
இன்று எவன்கொல்லோ கண்டிகும் மற்று அவன் |
|
நல்காமையின் அம்பல் ஆகி, |
|
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் |
|
இருஞ் சூழ் ஓதி ஒண் நுதற் பசப்பே? |
|
இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன் |
|
உரை |
|
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த |
|
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின், |
|
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி, |
|
காமர் சேவல் ஏமம் சேப்ப; |
5 |
முளி அரில் புலம்பப் போகி, முனாஅது |
|
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து, |
|
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி, |
|
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை, |
|
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும் |
10 |
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின் |
|
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என, |
|
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக |
|
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு |
|
தானே சென்ற நலனும் |
15 |
நல்கார்கொல்லோ, நாம் நயந்திசினோரே? |
|
தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொற்றது.- காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் |
|
உரை |
|
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து |
|
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் |
|
வென் வேல் இளையர் இன்புற, வலவன் |
|
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின் |
5 |
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா |
|
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர், |
|
வாங்குசினை பொலிய ஏறி; புதல |
|
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன |
|
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி, |
10 |
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய, |
|
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக் |
|
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் |
|
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை |
|
இனிது செய்தனையால் எந்தை! வாழிய! |
15 |
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் |
|
ஆய் தொடி அரிவை கூந்தற் |
|
போது குரல் அணிய வேய்தந்தோயே! |
|
வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகனார் |
|
உரை |
|
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை |
|
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென |
|
நல் வரை நாடன் தற்பாராட்ட |
|
யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து, |
5 |
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி, |
|
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள், |
|
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின் |
|
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு, |
|
பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச் |
10 |
சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி |
|
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார், |
|
கனை எரி நடந்த கல் காய் கானத்து |
|
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர் |
|
தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து, |
15 |
வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம் |
|
முகை தலை திறந்த வேனிற் |
|
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - தாயங்கண்ணனார் |
|
உரை |
|
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து, |
|
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன், |
|
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப் |
|
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் |
5 |
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை |
|
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது |
|
செய்யாம்ஆயினும், உய்யாமையின், |
|
செறிதொடி தெளிர்ப்ப வீசி, சிறிது அவண் |
|
உலமந்து வருகம் சென்மோ தோழி! |
10 |
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் |
|
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும் |
|
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும் |
|
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே. |
|
தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி வங்கனார் |
|
உரை |
|
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து, |
|
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த |
|
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு |
|
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று |
5 |
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், |
|
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், |
|
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு |
|
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட |
|
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு |
10 |
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் |
|
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர் |
|
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து, |
|
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து |
|
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து, |
15 |
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு |
|
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் |
|
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி, |
|
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர் |
|
மாலை இன் துணைஆகி, காலைப் |
20 |
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப, |
|
மண மனை கமழும் கானம் |
|
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே. |
|
தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் |
|
உரை |
|
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு |
|
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம் |
|
வரைமுதல் சிதறிய வை போல், யானைப் |
|
புகர் முகம் பொருத புது நீர் ஆலி |
5 |
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப, |
|
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் |
|
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி, |
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும் |
10 |
இருளிடைத் தமியன் வருதல் யாவதும் |
|
அருளான் வாழி, தோழி! அல்கல் |
|
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின் |
|
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல், |
|
காயா மென் சினை தோய நீடிப் |
15 |
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் |
|
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி |
|
கை ஆடு வட்டின் தோன்றும் |
|
மை ஆடு சென்னிய மலைகிழவோனே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார் |
|
உரை |
|
பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ் |
|
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி, |
|
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே |
|
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக் |
5 |
காடு கால்யாத்த நீடு மரச் சோலை |
|
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை, |
|
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் |
|
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச் |
|
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென, |
10 |
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர், |
|
கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு |
|
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப் |
|
பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் |
|
அறன் இல் வேந்தன் ஆளும் |
15 |
வறன் உறு குன்றம் பல விலங்கினவே. |
|
இடைச் சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- கடுந்தொடைக் காவினார் |
|
உரை |
|
அன்னை அறியினும் அறிக; அலர்வாய் |
|
அம் மென் சேரி கேட்பினும் கேட்க; |
|
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி, |
|
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி, |
5 |
கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல் |
|
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும், |
|
சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும், |
|
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது |
|
இருந்தனமாக, எய்த வந்து, |
10 |
''தட மென் பணைத் தோள் மட நல்லீரே! |
|
எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்; |
|
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும் இக் |
|
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?'' |
|
என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு, |
15 |
இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி, |
|
''இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த |
|
கொழு மீன் வல்சி'' என்றனம், இழுமென. |
|
''நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ |
|
காணாமோ?'' எனக் காலின் சிதையா, |
20 |
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் |
|
என்னே குறித்த நோக்கமொடு, ''நன்னுதால்! |
|
ஒழிகோ யான்?'' என அழிதகக் கூறி, |
|
யான் ''பெயர்க'' என்ன, நோக்கி, தான் தன் |
|
நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி |
25 |
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே. |
|
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - போந்தைப் பசலையார் |
|
உரை |
|