|
|
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர் |
|
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி |
|
வருவர் வாழி, தோழி! அரச |
|
யானை கொண்ட துகிற் கொடி போல, |
5 |
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி |
|
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர, |
|
மழை என மருண்ட மம்மர் பல உடன் |
|
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை |
|
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் |
10 |
அத்தக் கேழல் அட்ட நற் கோள் |
|
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப, |
|
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி, |
|
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட |
|
புண் தேர் விளக்கின், தோன்றும் |
15 |
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
|
உரை |
|
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி |
|
சிதலை செய்த செந் நிலைப் புற்றின் |
|
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி, |
|
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல் |
5 |
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி |
|
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும் |
|
பனி இருஞ் சோலை, ''எமியம்'' என்னாய், |
|
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே; |
|
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்; |
10 |
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; |
|
கழியக் காதலர்ஆயினும், சான்றோர் |
|
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்; |
|
வரையின் எவனோ? வான் தோய் வெற்ப! |
|
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் |
15 |
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார், |
|
தொன்று இயல் மரபின் மன்றல் அயர, |
|
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி, |
|
நொதுமல் விருந்தினம் போல, இவள் |
|
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே. |
|
இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர் கிழார் |
|
உரை |
|
நன்று அல் காலையும் நட்பின் கோடார், |
|
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின், |
|
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன் |
|
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி, |
5 |
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர் |
|
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின் |
|
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து, |
|
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற, |
|
நல்காது துறந்த காதலர், ''என்றும் |
10 |
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி |
|
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர் |
|
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர் |
|
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் |
|
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் |
15 |
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல் |
|
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி |
|
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர், |
|
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர் |
|
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர் |
20 |
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி, |
|
சேயர்'' என்றலின், சிறுமை உற்ற என் |
|
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க, |
|
அழாஅம் உறைதலும் உரியம் பராரை |
|
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப் |
25 |
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு, |
|
மெய் இவண் ஒழியப் போகி, அவர் |
|
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே! |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கல்லாடனார் |
|
உரை |
|
''கேளாய், எல்ல! தோழி! வேலன் |
|
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய |
|
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின், |
|
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு, |
5 |
அரவு நுங்கு மதியின், ஐயென மறையும் |
|
சிறு புன் மாலையும் உள்ளார் அவர்'' என, |
|
நப் புலந்து உறையும் எவ்வம் நீங்க, |
|
நூல் அறி வலவ! கடவுமதி, உவக்காண் |
|
நெடுங் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை, |
10 |
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் |
|
வானக மீனின் விளங்கித் தோன்றும், |
|
அருங் கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த் |
|
திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின், |
|
அரி மதர் மழைக் கண், அமை புரை பணைத் தோள், |
15 |
அணங்கு சால், அரிவையைக் காண்குவம் |
|
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே. |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ....... |
|
உரை |
|
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப் |
|
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும் |
|
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல் |
|
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக; |
5 |
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் |
|
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும் |
|
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள் |
|
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் |
|
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய |
10 |
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச் |
|
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று |
|
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை, |
|
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை, |
|
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி |
15 |
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை, |
|
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு, |
|
நம் நீத்து உறையும் பொருட்பிணிக் |
|
கூடாமையின், நீடியோரே. |
|
பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் |
|
உரை |
|
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை |
|
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர் |
|
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின், |
|
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர! |
5 |
பெரிய நாண் இலைமன்ற; ''பொரி எனப் |
|
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல், |
|
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல், |
|
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை, |
|
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை |
10 |
வைகுபுனல் அயர்ந்தனை'' என்ப; அதுவே, |
|
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து |
|
அலர் ஆகின்றால் தானே; மலர்தார், |
|
மை அணி யானை, மறப் போர்ச் செழியன் |
|
பொய்யா விழவின் கூடற் பறந்தலை, |
15 |
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் |
|
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி, |
|
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர் |
|
ஓடுபுறம் கண்ட ஞான்றை, |
|
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே. |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர் |
|
உரை |
|
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும், |
|
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள், |
|
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை |
|
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி, |
5 |
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர, |
|
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப் |
|
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண், |
|
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச் |
|
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே |
10 |
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து; |
|
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள், |
|
தன் ஓரன்ன தகை வெங் காதலன் |
|
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட, |
|
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல் |
15 |
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம் |
|
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும் |
|
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர், |
|
வாணன் சிறுகுடி வடாஅது |
|
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே? |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - ......... |
|
உரை |
|
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன், |
|
தேம் கமழ் இணர வேங்கை சூடி, |
|
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ, |
|
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து, |
5 |
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட, |
|
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள, |
|
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப் |
|
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய |
|
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள் |
10 |
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும். |
|
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள் |
|
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல் |
|
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்; |
|
அளியள்தான், நின் அளி அலது இலளே! |
|
செறிப்பு அறிவுறீஇ, ''இரவும் பகலும் வாரல்'' என்று வரைவு கடாஅயது.- கபிலர் |
|
உரை |
|
''நுதலும் தோளும், திதலை அல்குலும், |
|
வண்ணமும், வனப்பும், வரியும், வாட |
|
வருந்துவள், இவள்'' எனத் திருந்துபு நோக்கி, |
|
''வரைவு நன்று'' என்னாது அகலினும், அவர் வறிது, |
5 |
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை, |
|
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப, |
|
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள, |
|
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் |
|
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் |
10 |
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து, |
|
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை, |
|
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை, |
|
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு |
|
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப, |
15 |
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள |
|
மறப் புலி உழந்த வசி படு சென்னி |
|
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி, |
|
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை |
|
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை, |
20 |
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே? |
|
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார் |
|
உரை |
|
நெடு வேள் மார்பின் ஆரம் போல, |
|
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும் |
|
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப, |
|
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின் |
5 |
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு |
|
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே |
|
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் |
|
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது, |
|
அழல் தொடங்கினளே பெரும! அதனால் |
10 |
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி |
|
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ, |
|
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது, |
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ |
|
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை |
15 |
அன்றில் அகவும் ஆங்கண், |
|
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே? |
|
தோழி, பகற்குறிக்கண் தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. - நக்கீரனார் |
|
உரை |
|