|
|
''விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப் |
|
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன, |
|
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல் |
|
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை |
5 |
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு'' என |
|
வீளை அம்பின் விழுத் தொடை மழவர் |
|
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து |
|
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் |
|
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர் |
10 |
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் |
|
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் |
|
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் |
|
வெருவரு தகுந கானம், ''நம்மொடு |
|
வருக'' என்னுதிஆயின், |
15 |
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார் |
| உரை |
|
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து, |
|
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி |
|
ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின், |
|
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி, |
5 |
வால் நிணப் புகவின், கானவர் தங்கை |
|
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண் |
|
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின், |
|
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப! |
|
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக் |
10 |
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை |
|
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள் |
|
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை |
|
இருங் கவுட் கடாஅம் கனவும், |
|
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே. |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார் |
|
உரை |
|
''குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர், |
|
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை |
|
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி, |
|
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப, |
5 |
கார் தலைமணந்த பைம் புதற் புறவின், |
|
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் |
|
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில், |
|
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு |
|
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ, |
10 |
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று |
|
வான் கொள் தூவல் வளி தர உண்கும்; |
|
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?'' எனக் |
|
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி! |
|
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி |
15 |
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் |
|
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த |
|
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத் |
|
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே. |
|
''பிரிவிடை ஆற்றாளாயினாள்'' எனக் கவன்ற
தோழிக்குத், தலைமகள், ''ஆற்றுவல்'' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் |
|
உரை |
|
வானம் வாய்ப்பக் கவினி, கானம் |
|
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென, |
|
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை, |
|
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல |
5 |
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் |
|
செய்கை அன்ன செந் நிலப் புறவின்; |
|
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத் |
|
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க, |
|
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை |
10 |
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த |
|
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு |
|
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை |
|
கடுமான் தேர் ஒலி கேட்பின், |
|
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே. |
|
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார் |
|
உரை |
|
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க, |
|
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப் |
|
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, |
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, |
|
5 |
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி, |
|
பேதுற்றிசினே காதல்அம் தோழி! |
|
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி, |
|
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ, |
|
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம் |
10 |
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர், |
|
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை, |
|
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த |
|
கழுவுள் காமூர் போலக் |
|
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. - பரணர் |
|
உரை |
|
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு |
|
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, |
|
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி |
|
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட் |
5 |
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து, |
|
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி, |
|
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ, |
|
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று, |
|
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய, |
10 |
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, |
|
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் |
|
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற |
|
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத் |
|
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி, |
15 |
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, |
|
மழை பட்டன்ன மணல் மலி பந்தர், |
|
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி, |
|
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின், |
|
''உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி! |
20 |
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, |
|
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர் |
|
உறு வளி ஆற்றச் சிறு வரை திற'' என |
|
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், |
|
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, |
25 |
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென |
|
நாணினள் இறைஞ்சியோளே பேணி, |
|
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி, |
|
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த |
|
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே. |
|
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார் |
|
உரை |
|
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட |
|
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ, |
|
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் |
|
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே |
5 |
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் |
|
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண், |
|
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று |
|
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற் |
|
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், |
10 |
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் |
|
தீ இல் அடுப்பின் அரங்கம் போல, |
|
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும், |
|
தோளா முத்தின் தெண் கடற் பொருநன் |
|
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் |
15 |
நல் எழில் நெடு வேய் புரையும் |
|
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே. |
|
''தலைமகன் பிரியும்'' எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- உறையூர் |
|
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி! |
|
குவளை உண்கண் தெண் பனி மல்க, |
|
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை |
|
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின் |
5 |
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி, |
|
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை, |
|
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில், |
|
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் |
|
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது, |
10 |
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ, |
|
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு |
|
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும் |
|
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு |
|
நின்னொடு தெளித்த நல் மலை நாடன் |
15 |
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி, |
|
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள், |
|
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட் |
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி |
|
|
நல் நிறம் மருளும் அரு விடர் |
20 |
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச்
சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப்
பன்றி நாகன் குமரனார் |
|
உரை |
|
துஞ்சுவது போல இருளி, விண் பக |
|
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு |
|
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ, |
|
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு, |
5 |
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்; |
|
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை |
|
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை, |
|
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை, |
|
தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து |
10 |
வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை; |
|
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல், |
|
காமர் துணையொடு ஏமுற வதிய; |
|
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் |
|
பரப்பியவைபோற் பாஅய், பல உடன் |
15 |
நீர் வார் மருங்கின் ஈரணி திகழ; |
|
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்! |
|
யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர் |
|
கருவிக் கார்இடி இரீஇய |
|
பருவம் அன்று, அவர், ''வருதும்'' என்றதுவே. |
|
பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - இடைக்காடனார் |
|
உரை |
|
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் |
|
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த |
|
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, |
|
என்றூழ் விடர குன்றம் போகும் |
5 |
கதழ் கோல் உமணர் காதல் மடமகள் |
|
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி, |
|
''நெல்லின் நேரே வெண் கல் உப்பு'' எனச் |
|
சேரி விலைமாறு கூறலின், மனைய |
|
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய |
10 |
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு, |
|
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும் |
|
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு |
|
எவ்வம் தீர வாங்கும் தந்தை |
|
கை பூண் பகட்டின் வருந்தி, |
15 |
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே. |
|
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார் |
|
உரை |
|