|
|
அம்ம வாழி, தோழி! கைம்மிகக் |
|
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் |
|
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; |
|
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது |
5 |
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, |
|
மழை கால்நீங்கிய மாக விசும்பில் |
|
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, |
|
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; |
|
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, |
10 |
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய |
|
விழவு உடன் அயர, வருகதில் அம்ம! |
|
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி, |
|
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின் |
|
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் |
15 |
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, |
|
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர் |
|
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து, |
|
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் |
|
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு |
20 |
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; |
|
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் |
|
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் |
|
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன |
|
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப் |
25 |
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை |
|
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர, |
|
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை, |
|
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய |
|
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே. |
|
''பிரிவிடை ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் |
| உரை |
|
இலமலர் அன்ன அம் செந் நாவின் |
|
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த, |
|
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல் |
|
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் |
5 |
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற |
|
குறையோர் கொள்கலம் போல, நன்றும் |
|
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி |
|
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற |
|
கறை அடி யானை நன்னன் பாழி, |
10 |
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க் |
|
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி |
|
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் |
|
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து |
|
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின், |
15 |
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய, |
|
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச் |
|
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை |
|
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல், |
|
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர, |
20 |
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து, |
|
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை |
|
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து, |
|
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை |
|
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப, |
25 |
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்; |
|
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் |
|
உரை |
|
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக் |
|
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின், |
|
நீடு சினை வறிய ஆக, ஒல்லென |
|
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும் |
5 |
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு, |
|
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச் |
|
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும் |
|
''வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய! |
|
சேறும்'' என்ற சிறு சொற்கு இவட்கே, |
10 |
வசை இல் வெம் போர் வானவன் மறவன் |
|
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும், |
|
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன் |
|
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன் |
|
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த |
15 |
தண் கமழ் நீலம் போல, |
|
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே. |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி சாத்தனார் |
|
உரை |
|
''''வருதும்'''' என்ற நாளும் பொய்த்தன; |
|
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா; |
|
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை |
|
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை |
5 |
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், |
|
அருள் கண்மாறலோ மாறுக அந்தில் |
|
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்'' எனச் |
|
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும், |
|
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு, |
10 |
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல |
|
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின் |
|
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் |
|
கடாஅ யானை கொட்கும் பாசறை, |
|
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை |
15 |
கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி, |
|
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி |
|
வான மீனின் வயின் வயின் இமைப்ப, |
|
அமர் ஓர்த்து, அட்ட செல்வம் |
|
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே. |
|
வினை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் உரைப்பானாய், பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் |
|
உரை |
|
வேர் முழுது உலறி நின்ற புழற்கால், |
|
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், |
|
வற்றல் மரத்த பொற் தலை ஓதி |
|
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, |
5 |
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு |
|
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு |
|
வாள்வரி பொருத புண் கூர் யானை |
|
புகர் சிதை முகத்த குருதி வார, |
|
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் |
10 |
''அருஞ் சுரம் இறந்தனள்'' என்ப பெருஞ் சீர் |
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய |
|
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, |
|
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில் |
15 |
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், |
|
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, |
|
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், |
|
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற் |
|
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது, |
20 |
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், |
|
''எனக்கு உரித்து'' என்னாள், நின்ற என் |
|
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே! |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் |
|
உரை |
|
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு |
|
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி, |
|
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ, |
|
படப்பை நண்ணி, பழனத்து அல்கும் |
5 |
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர், |
|
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள் |
|
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை |
|
யார்கொல் அளியள்தானே எம் போல் |
|
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி, |
10 |
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் |
|
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து, |
|
ஆயமும் அயலும் மருள, |
|
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே? |
|
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் |
|
உரை |
|
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த |
|
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன |
|
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை |
|
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த, |
5 |
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென, |
|
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை |
|
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் |
|
நெறி படு கவலை நிரம்பா நீளிடை, |
|
வெள்ளி வீதியைப் போல நன்றும் |
10 |
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து, |
|
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், |
|
தோளும் தொல் கவின் தொலைய, நாளும் |
|
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி, |
|
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே! |
|
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஒளவையார் |
|
உரை |
|
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, |
|
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், |
|
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை |
|
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; |
5 |
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; |
|
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! |
|
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் |
|
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, |
|
காணிய செல்லாக் கூகை நாணி, |
10 |
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை |
|
பெரிதால் அம்ம இவட்கே; அதனால் |
|
மாலை, வருதல் வேண்டும் சோலை |
|
முளை மேய் பெருங் களிறு வழங்கும் |
|
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே. |
|
பகல் வருவானை ''இரவு வருக'' என்றது. - பரணர் |
|
உரை |
|
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த |
|
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின், |
|
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப் |
|
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும் |
5 |
அத்த நீள் இடைப் போகி, நன்றும் |
|
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் |
|
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர் |
|
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, |
|
யவனர் தந்த வினை மாண் நன் கலம் |
10 |
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் |
|
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ, |
|
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய |
|
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன் |
|
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது, |
15 |
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய, |
|
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, |
|
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து |
|
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் |
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே. |
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் |
|
உரை |
|
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென |
|
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக் |
|
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி; |
|
''எல்லினை பெரிது'' எனப் பல் மாண் கூறி, |
5 |
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, |
|
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல் |
|
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை, |
|
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர் |
|
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ, |
10 |
மாலை மணி இதழ் கூம்ப, காலைக் |
|
கள் நாறு காவியொடு தண்ணென மலரும் |
|
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து; |
|
''வாரார்கொல்?'' எனப் பருவரும் |
|
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே! |
|
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார் |
|
உரை |
|