|
|
''தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து |
|
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ, |
|
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!'' என, |
|
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது |
5 |
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு |
|
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக் |
|
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த |
|
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில் |
|
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள் |
10 |
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும் |
|
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல், |
|
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு |
|
உறுவது கூறும், சிறு செந் நாவின் |
|
மணி ஓர்த்தன்ன தெண் குரல் |
15 |
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே! |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார் | | உரை |
|
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து, |
|
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் |
|
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் |
|
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை, |
5 |
சினம் கெழு தானை, தித்தன் வெளியன், |
|
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை, |
|
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும் |
|
சிறு வெள் இறவின் குப்பை அன்ன |
|
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் |
10 |
முனை முரண் உடையக் கடந்த வென் வேல், |
|
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ், |
|
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்; |
|
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில் |
|
களி மயிற் கலாவத்தன்ன. தோளே |
15 |
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி |
|
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த |
|
கடவுட் காந்தளுள்ளும், பல உடன் |
|
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி, |
|
வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச் |
20 |
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், |
|
மாஅல் யானை ஆஅய் கானத்துத் |
|
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் |
|
வேய் அமைக் கண் இடை புரைஇ, |
|
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர் | | உரை |
|
நோகோ யானே; நோதகும் உள்ளம்; |
|
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ, |
|
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி, |
|
வெம்பும்மன், அளியள்தானே இனியே, |
5 |
வன்கணாளன் மார்புஉற வளைஇ, |
|
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண் |
|
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத் |
|
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு, |
|
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின், |
10 |
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப் |
|
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை |
|
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல் |
|
வல்லுநள்கொல்லோ தானே எல்லி |
|
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி |
15 |
மீனொடு பொலிந்த வானின் தோன்றி, |
|
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின் |
|
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர் |
|
கை விடு சுடரின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது. - சேரமான் இளங்குட்டுவன் | | உரை |
|
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் |
|
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை |
|
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க, |
|
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி |
5 |
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, |
|
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன |
|
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ, |
|
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக் |
|
காமர் துணையொடு ஏமுற வதிய, |
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி; |
|
|
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித் |
|
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப |
|
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு |
|
நம் வயிற் புரிந்த கொள்கை |
15 |
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார் | | உரை |
|
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் |
|
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும் |
|
பொருளின் ஆகும், புனையிழை!'' என்று, நம் |
|
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே |
5 |
நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம் |
|
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின் |
|
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் |
|
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய |
|
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி, |
10 |
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது |
|
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி |
|
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி, |
|
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை |
|
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த |
15 |
விரல் ஊன்று வடுவின் தோன்றும் |
|
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ | | உரை |
|
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் |
|
மூட்டுறு கவரி தூக்கியன்ன, |
|
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் |
|
மூதா தின்றல் அஞ்சி, காவலர் |
5 |
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, |
|
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் |
|
தீம் புனல் ஊர! திறவதாகக் |
|
குவளை உண்கண் இவளும் யானும் |
|
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, |
10 |
காயா ஞாயிற்றாக, தலைப்பெய, |
|
''பொய்தல் ஆடிப் பொலிக!'' என வந்து, |
|
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும! |
|
கள்ளும் கண்ணியும் கையுறையாக |
|
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் |
15 |
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, |
|
தணி மருங்கு அறியாள், யாய் அழ, |
|
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே? |
|
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார் | | உரை |
|
அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட |
|
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த |
|
அரி நிறக் கலுழி ஆர மாந்தி, |
|
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர், |
5 |
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின் |
|
எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல் |
|
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி, |
|
கான யானை கவளம் கொள்ளும் |
|
அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார் |
10 |
நெஞ்சு உண மொழிபமன்னே தோழி! |
|
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து, |
|
பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய், |
|
வினை அழி பாவையின் உலறி, |
|
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே! |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வேம்பற்றூர்க் குமரனார் | | உரை |
|
''உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ, |
|
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள், |
|
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப, |
|
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள், |
5 |
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, |
|
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்'' என |
|
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச் |
|
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து |
|
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே; |
10 |
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் |
|
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான் |
|
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர |
|
மன்ற மராஅத்த கூகை குழறினும், |
|
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப் |
15 |
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு, |
|
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல் |
|
எந்தையும் இல்லன் ஆக, |
|
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர் | | உரை |
|
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின் |
|
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை |
|
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி |
|
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின், |
5 |
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர் |
|
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி, |
|
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென |
|
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர், |
|
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி, |
10 |
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும் |
|
கவலை, ''காதலர் இறந்தனர்'' என, நனி |
|
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி! |
|
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை |
|
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது |
15 |
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன் |
|
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத் |
|
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி, |
|
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில் |
|
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும், |
20 |
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின் |
|
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க் கவுதமன் சாதேவனார் | | உரை |
|
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ? |
|
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம். |
|
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக் |
|
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி, |
5 |
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த |
|
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை |
|
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க் |
|
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்: |
|
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல |
10 |
வாவு உடைமையின் வள்பின் காட்டி, |
|
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி |
|
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி |
|
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல், |
|
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப, |
15 |
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது |
|
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் |
|
அரவச் சீறூர் காண, |
|
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே. |
|
தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார் | | உரை |
|