|
|
''நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும் |
|
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
|
பணை எழில் அழிய வாடும்; நாளும் |
|
நினைவல்மாது அவர் பண்பு'' என்று ஓவாது |
5 |
இனையல் வாழி, தோழி! புணர்வர் |
|
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள் புரிந்து |
|
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த |
|
மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள் |
|
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார், |
10 |
திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை |
|
எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின், |
|
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப் |
|
பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய, |
|
கருங் கோட்டு இருப்பை ஊரும் |
15 |
பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே! |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -கல்லாடனார் |
| உரை |
|
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் |
|
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி |
|
இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக் |
|
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும் |
5 |
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்; |
|
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன் |
|
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து, |
|
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி, |
|
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன் |
10 |
புல் வேய் குரம்பை புலர ஊன்றி, |
|
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில், |
|
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து, |
|
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் |
|
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல் |
15 |
அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின் |
|
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள் |
|
மணி ஏர் மாண் நலம் சிதைய, |
|
பொன் நேர் பசலை பாவின்றுமன்னே! |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் |
|
உரை |
|
''அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த |
|
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும் |
|
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்'' எனச் |
|
செய்வினை புரிந்த நெஞ்சினர், ''நறு நுதல் |
5 |
மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல் |
|
சில் நாள் தாங்கல்வேண்டும்'' என்று, நின் |
|
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின், |
|
வருவர் வாழி, தோழி! பல புரி |
|
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ, |
10 |
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ, |
|
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட, |
|
காடு கவின் அழிய உரைஇ, கோடை |
|
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க் |
|
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம் |
15 |
கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம் |
|
இன் களி நறவின் இயல் தேர் நன்னன் |
|
விண் பொரு நெடு வரைக் கவாஅன் |
|
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -முள்ளியூர்ப் பூதியார் |
|
உரை |
|
''இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து, |
|
ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும் |
|
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்'' என, |
|
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச் |
5 |
செல்வேம்ஆதல் அறியாள், முல்லை |
|
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து, |
|
காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ |
|
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து, |
|
பழங்கண் கொண்ட பசலை மேனியள், |
10 |
யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை |
|
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள, |
|
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள், |
|
நல் மணல் வியலிடை நடந்த |
|
சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் |
|
உரை |
|
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை |
|
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் |
|
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி |
|
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின், |
5 |
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும் |
|
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண |
|
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண் |
|
தெரி வளை முன்கை பற்றியும், ''வினைமுடித்து |
|
வருதும்'' என்றனர் அன்றே தோழி! |
10 |
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன் |
|
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த |
|
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என |
|
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி, |
|
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன் |
15 |
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், |
|
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு |
|
மண் பயம் பூப்பப் பாஅய், |
|
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே? |
|
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்; பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி சாத்தனார். |
|
உரை |
|
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின் |
|
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் |
|
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால், |
|
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில், |
5 |
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை |
|
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க, |
|
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து, |
|
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு |
|
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது |
10 |
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல், |
|
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன் |
|
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர! |
|
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி |
|
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ, |
15 |
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, |
|
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக் |
|
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது |
|
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல் |
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து, |
20 |
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய, |
|
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து |
|
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி, |
|
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ் |
|
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு, |
25 |
கூர்நுனை மழுகிய எயிற்றள் |
|
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே. |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. மருதம் - பாடிய இளங்கடுங்கோ |
|
உரை |
|
''தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும், |
|
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?'' எனப் |
|
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண் |
|
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து |
5 |
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் |
|
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின் |
|
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக் |
|
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை, |
|
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ, |
10 |
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை |
|
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் |
|
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும், |
|
வல்லே வருவர்போலும் வெண் வேல் |
|
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர் |
15 |
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த |
|
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின் |
|
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின் |
|
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த |
|
அணங்குடை வன முலைத் தாஅய நின் |
20 |
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார் |
|
உரை |
|
வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின், |
|
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி |
|
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி, |
|
நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின் |
5 |
பிண்டம் அன்ன கொழுங் கிழங்கு மாந்தி, |
|
பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு, |
|
யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப் |
|
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன, |
|
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து |
10 |
அலங்கு குலை அலரி தீண்டி, தாது உக, |
|
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர, |
|
கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து, |
|
கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு |
|
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோட் |
15 |
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து, என்றும், |
|
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி |
|
''எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக் |
|
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறைத் |
|
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது'' என, |
20 |
கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை |
|
முன் தான் கண்ட ஞான்றினு ம் |
|
பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே. |
|
தோழி வரைவு மலிந்து சொல்லியது. - பரணர் |
|
உரை |
|
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில், |
|
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு, |
|
சிறு கண் யானை நெடுங் கை நீட்டி |
5 |
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது, |
|
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் |
|
விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர் |
|
நல் நிலை பொறித்த கல் நிலை அதர, |
|
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச் |
10 |
சுரம் செல விரும்பினிர்ஆயின் இன் நகை, |
|
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய், |
|
குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம் |
|
மதி ஏர் வாள் நுதல் புலம்ப, |
|
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே? |
|
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார் |
|
உரை |
|
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக, |
|
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி, |
|
வீ ததை கானல் வண்டல் அயர, |
|
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து, |
5 |
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை |
|
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி |
|
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி, |
|
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து, |
|
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே |
10 |
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன் |
|
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத் |
|
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ, |
|
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப் |
|
பொன் நேர் நுண் தாது நோக்கி, |
15 |
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே. |
|
இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க் கண்ணம்பாளனார் |
|
உரை |
|