|
|
துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய், |
|
பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின், |
|
என் நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார் |
|
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை |
5 |
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ, |
|
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப, |
|
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று |
|
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு |
|
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு |
10 |
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன், |
|
பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க் |
|
காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி, |
|
எக்கர் இட்ட குப்பை வெண் மணல் |
|
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் |
15 |
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை, |
|
நான் மறை முது நூல் முக்கட் செல்வன், |
|
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய |
|
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் |
|
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும் |
20 |
மகர நெற்றி வான் தோய் புரிசைச் |
|
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல் |
|
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர் |
|
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால், |
|
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள், |
25 |
அணங்குசால், அரிவை இருந்த |
|
மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே. |
|
இடைச் சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் |
|
உரை |
|
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து, |
|
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ, |
|
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல் |
|
வீளை அம்பின் இளையரொடு மாந்தி, |
5 |
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட, |
|
வேட்டம் போகிய குறவன் காட்ட |
|
குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர, |
|
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட! |
|
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து |
10 |
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும், |
|
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால், |
|
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய |
|
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ, |
15 |
உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க |
|
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் |
|
வெறி அயர் வியன் களம் கடுக்கும் |
|
பெரு வரை நண்ணிய சாரலானே. |
|
தோழி இரா வருவானைப் ''பகல் வா'' என்றது. - கபிலர் |
|
உரை |
|
''குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத் |
|
திதலை அல்குல் அவ் வரி வாடவும், |
|
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார் |
|
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும் |
5 |
நீடலர்'' என்றி தோழி! பாடு ஆன்று |
|
பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி, |
|
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு, |
|
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி, |
|
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி, |
10 |
காலை வந்தன்றால் காரே மாலைக் |
|
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி |
|
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் |
|
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற, |
|
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு |
15 |
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே? |
|
தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -கருவூர்க் கலிங்கத்தார் |
|
உரை |
|
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய |
|
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின் |
|
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும் |
|
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்! |
5 |
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு |
|
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட, |
|
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் |
|
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப் |
|
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை |
10 |
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி, |
|
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை |
|
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண், |
|
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர், |
|
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க, |
15 |
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் |
|
செக்கர் வானம் சென்ற பொழுதில், |
|
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த் |
|
தார் மணி பல உடன் இயம்ப |
|
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே. |
|
தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார் |
|
உரை |
|
எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை |
|
நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய, |
|
பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து, |
|
இரும்பின் இன் உயிர் உடையோர் போல, |
5 |
வலித்து வல்லினர், காதலர்; வாடல் |
|
ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர் |
|
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய, |
|
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் |
|
வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து |
10 |
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில், |
|
பெரு விழா விளக்கம் போல, பல உடன் |
|
இலை இல மலர்ந்த இலவமொடு |
|
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பாலைபாடிய பெருங்கடுங்கோ |
|
உரை |
|
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை |
|
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் |
|
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை |
|
நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை |
5 |
இருங் கயம் துளங்க, கால் உறுதொறும் |
|
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு |
|
எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே, |
|
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப் |
|
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே, |
10 |
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட, |
|
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப, |
|
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து, |
|
இன்னும் பிறள் வயினானே; மனையோள் |
|
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல், |
15 |
மாரி அம்பின், மழைத்தோற் பழையன் |
|
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என் |
|
செறிவளை உடைத்தலோ இலெனே; உரிதினின் |
|
யாம் தன் பகையேம்அல்லேம்; சேர்ந்தோர் |
|
திரு நுதல் பசப்ப நீங்கும் |
20 |
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே. |
|
தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது. -பரணர் |
|
உரை |
|
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு |
|
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி |
|
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு |
|
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி, |
5 |
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் |
|
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி, |
|
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர் |
|
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன, |
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் |
10 |
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு |
|
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண், |
|
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து, |
|
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி, |
|
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன |
15 |
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து |
|
வேனில் வெற்பின் கானம் காய, |
|
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை, |
|
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை |
|
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து, |
20 |
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை |
|
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி, |
|
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் |
|
வைகு கடல் அம்பியின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் |
|
உரை |
|
பெருங் கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ! |
|
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ, |
|
போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து |
|
அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர் |
5 |
அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர் |
|
கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும் |
|
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும் |
|
கொன்னே செய்தியோ, அரவம்? பொன் என |
|
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி, |
10 |
பொலிந்த ஆயமொடு காண்தக இயலி, |
|
தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும், |
|
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும், |
|
குறமகள் காக்கும் ஏனல் |
|
புறமும் தருதியோ? வாழிய, மழையே! |
|
இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வீரை வெளியன் தித்தனார் |
|
உரை |
|
பசும் பழப் பலவின் கானம் வெம்பி, |
|
விசும்பு கண் அழிய, வேனில் நீடி, |
|
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் |
|
நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு |
5 |
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி, |
|
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன் |
|
வெவ் வரை அத்தம் சுட்டி, பையென, |
|
வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற, |
|
திதலை அல்குல் குறுமகள் அவனொடு |
10 |
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும் |
|
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ, |
|
மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ் |
|
நன்னராளர் கூடு கொள் இன் இயம் |
|
தேர் ஊர் தெருவில் ததும்பும் |
15 |
ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே. |
|
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் |
|
உரை |
|
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு |
|
உப்பின் குப்பை ஏறி, எல் பட, |
|
வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே |
|
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே; |
5 |
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்; |
|
அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப் |
|
பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த |
|
வம்ப நாரை இரிய, ஒரு நாள், |
|
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும், |
10 |
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை |
|
இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி |
|
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப, |
|
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில |
|
நிரைமணிப் புரவி விரைநடை தவிர, |
15 |
இழுமென் கானல் விழு மணல் அசைஇ, |
|
ஆய்ந்த பரியன் வந்து, இவண் |
|
மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே! |
|
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - உலோச்சனார் |
|
உரை |
|