|
|
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ |
|
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ, |
|
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி, |
|
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர் |
5 |
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி, |
|
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் |
|
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து அவர் |
|
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி, |
|
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு |
10 |
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை, |
|
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி, |
|
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும், |
|
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! ''நிரை முகை |
|
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி, |
15 |
அறல் என விரிந்த உறல் இன் சாயல் |
|
ஒலி இருங் கூந்தல் தேறும்'' என, |
|
வலிய கூறவும் வல்லையோ, மற்றே? |
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச் செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் |
|
உரை |
|
மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல் |
|
பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ! |
|
யாங்கு ஆகுவள்கொல் தானே? விசும்பின் |
|
எய்யா வரி வில் அன்ன பைந் தார், |
5 |
செவ் வாய், சிறு கிளி சிதைய வாங்கி, |
|
பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங் குரல் |
|
வளை சிறை வாரணம் கிளையொடு கவர, |
|
ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள் |
|
நீ வந்து அளிக்குவைஎனினே மால் வரை |
10 |
மை படு விடரகம் துழைஇ, ஒய்யென |
|
அருவி தந்த, அரவு உமிழ், திரு மணி |
|
பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின், |
|
இரவும் இழந்தனள்; அளியள் உரவுப் பெயல் |
|
உரும் இறை கொண்ட உயர்சிமைப் |
15 |
பெரு மலைநாட! நின் மலர்ந்த மார்பே. |
|
தோழி தலைமகனைச் செறிப்பு அறிவுறீஇ இரவுக் குறி மறுத்தது. -பொதும்பில்கிழான் வெண்கண்ணனார் |
|
உரை |
|
கான் உயர் மருங்கில் கவலை அல்லது, |
|
வானம் வேண்டா வில் ஏர் உழவர் |
|
பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த, |
|
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய், |
5 |
பொறித்த போலும் வால் நிற எருத்தின், |
|
அணிந்த போலும் செஞ் செவி, எருவை; |
|
குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து |
|
அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட, |
|
விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி |
10 |
கொல் பசி முது நரி வல்சி ஆகும் |
|
சுரன் நமக்கு எளியமன்னே; நல் மனைப் |
|
பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி, |
|
முருந்து ஏர் முறுவல், இளையோள் |
|
பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே. |
|
பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார் |
|
உரை |
|
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை, |
|
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப் |
|
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து, |
|
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால், |
5 |
வித்திய மருங்கின் விதை பல நாறி, |
|
இரலை நல் மானினம் பரந்தவைபோல், |
|
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர், |
|
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி, |
|
களை கால் கழீஇய பெரும் புன வரகின் |
10 |
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட, |
|
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை |
|
காமர் கலவம் பரப்பி, ஏமுறக் |
|
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த |
|
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து, |
15 |
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும் |
|
கார்மன் இதுவால் தோழி! ''போர் மிகக் |
|
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி, |
|
விரிஉளை, நல் மான் கடைஇ |
|
வருதும்'' என்று அவர் தெளித்த போழ்தே. |
|
பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார் |
|
உரை |
|
''அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோட் குறுமகள் |
|
திருந்துவேல் விடலையொடு வரும்'' என, தாயே, |
|
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி, |
|
மனை மணல் அடுத்து, மாலை நாற்றி, |
5 |
உவந்து, இனிது அயரும் என்ப; யானும், |
|
மான் பிணை நோக்கின் மட நல்லாளை |
|
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும், |
|
இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள், |
|
கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய |
10 |
நலம் புனை உதவியும் உடையன்மன்னே; |
|
அஃது அறிகிற்பினோ நன்றுமன் தில்ல; |
|
அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி, |
|
சிறு பை நாற்றிய பல் தலைக் கொடுங் கோல், |
|
ஆகுவது அறியும் முதுவாய், வேல! |
15 |
கூறுகமாதோ, நின் கழங்கின் திட்பம்; |
|
மாறா வருபனி கலுழும் கங்குலில், |
|
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர், |
|
எம் மனை முந்துறத் தருமோ? |
|
தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே? |
|
மகட் போக்கிய நற்றாய் சொல்லியது. - கயமனார் |
|
உரை |
|
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து, |
|
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் |
|
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி, |
|
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி |
5 |
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு |
|
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து, |
|
விடியல் வைகறை இடூஉம் ஊர! |
|
தொடுகலம்; குறுக வாரல் தந்தை |
|
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, |
10 |
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய, |
|
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை |
|
அன்னிமிஞிலியின் இயலும் |
|
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே. |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர் |
|
உரை |
|
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும், |
|
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும், |
|
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த |
|
தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம் |
5 |
இனையல் வாழி, தோழி! முனை எழ |
|
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின், |
|
மறம் மிகு தானை, கண்ணன் எழினி |
|
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும், |
|
நீடலர் யாழ, நின் நிரை வளை நெகிழ |
10 |
தோள் தாழ்பு இருளிய குவை இருங் கூந்தல் |
|
மடவோள் தழீஇய விறலோன் மார்பில் |
|
புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு, |
|
கடுஞ்சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு |
|
இனம்சால் வேழம், கன்று ஊர்பு இழிதர, |
15 |
பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி, |
|
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம் |
|
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு |
|
இனையர் ஆகி, நப் பிரிந்திசினோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -மாமூலனார் |
|
உரை |
|
''கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்?'' எனக் |
|
கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது, |
|
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி, |
|
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து; |
5 |
கார் விரை கமழும் கூந்தல், தூ வினை |
|
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின் |
|
இள மழை சூழ்ந்த மட மயில் போல, |
|
வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து, |
|
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல் |
10 |
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, |
|
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள், |
|
ஆன்ற கற்பின் சான்ற பெரியள், |
|
அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது |
|
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில், |
15 |
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன், |
|
ஏர் மலர் நிறை சுனை உறையும் |
|
சூர்மகள்மாதோ என்னும் என் நெஞ்சே! |
|
புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் |
|
உரை |
|
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன், |
|
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும் |
|
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து, |
|
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர, |
5 |
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல் |
|
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ, |
|
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை, |
|
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன, |
|
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின், |
10 |
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய |
|
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே |
|
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் |
|
கடல் போல் கானம் பிற்பட, ''பிறர் போல் |
|
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று'' என்னும் |
15 |
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, |
|
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல் |
|
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட, |
|
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது, |
|
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், |
20 |
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய, |
|
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள், |
|
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் |
|
இழந்த நாடு தந்தன்ன |
|
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார் |
|
உரை |
|
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், |
|
புலால் அம் சேரி, புல் வேய் குரம்பை, |
|
ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து, |
|
இன்னா உறையுட்டுஆயினும், இன்பம் |
5 |
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள், |
|
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி |
|
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப! |
|
பொம்மற் படு திரை கம்மென உடைதரும் |
|
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி, |
10 |
எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற, |
|
நல் தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று, |
|
சேந்தனிர் செல்குவிர்ஆயின், யாமும் |
|
எம் வரை அளவையின் பெட்குவம்; |
|
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே. |
|
தலைமகள் குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குக் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார் |
|
உரை |
|