|
|
அம்ம, வாழி தோழி! ''பொன்னின் |
|
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை |
|
வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன் |
|
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை, |
5 |
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து, |
|
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல் |
|
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ, |
|
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை, |
|
உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு, |
10 |
அலரும் மன்று பட்டன்றே; அன்னையும் |
|
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும்'' என்று |
|
எவன் கையற்றனை, இகுளை? சோழர் |
|
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும், |
|
ஆண்டு அமைந்து உறைநர்அல்லர் முனாஅது |
15 |
வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன், |
|
பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை |
|
இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத் |
|
தோல் முலைப் பிணவொடு திளைக்கும் |
|
வேனில் நீடிய சுரன் இறந்தோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் |
| உரை |
|
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன், |
|
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப, |
|
புலிப் பகை வென்ற புண் கூர் யானை |
|
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின், |
5 |
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் |
|
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி, |
|
சிறு பல் மின்மினி போல, பல உடன் |
|
மணி நிற இரும் புதல் தாவும் நாட! |
|
யாமே அன்றியும் உளர்கொல் பானாள், |
10 |
உத்தி அரவின் பைத் தலை துமிய, |
|
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை, |
|
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக, |
|
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி |
|
தேராது வரூஉம் நின்வயின் |
15 |
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே? |
|
இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் |
|
உரை |
|
''உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும், |
|
யாய் அறிந்து உணர்க'' என்னார், தீ வாய் |
|
அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர், |
|
''இன்னள் இனையள், நின் மகள்'' என, பல் நாள் |
5 |
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன், |
|
''நாணுவள் இவள்'' என, நனி கரந்து உறையும் |
|
யான் இவ் வறு மனை ஒழிய, தானே, |
|
''அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை |
|
எனக்கு எளிது ஆகல் இல்'' என, கழற் கால் |
10 |
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற, |
|
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான் |
|
அன்னேன் அன்மை நன் வாயாக, |
|
மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி |
|
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப் |
15 |
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர், |
|
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த, |
|
நுனை குழைத்து அலமரும் நொச்சி |
|
மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே! |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கபிலர் |
|
உரை |
|
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை, |
|
கடல் போல் தானை, கலிமா, வழுதி |
|
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச் |
|
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே |
5 |
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில், |
|
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி |
|
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப, |
|
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து, |
|
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர் |
10 |
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை |
|
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும் |
|
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித் |
|
தண்டலை கமழும் கூந்தல், |
|
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் |
|
உரை |
|
''உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின் |
|
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல, |
|
தையல்! நின் வயின் பிரியலம் யாம்'' எனப் |
|
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி, |
5 |
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே |
|
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர, |
|
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே |
|
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை |
|
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி, |
10 |
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி, |
|
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க் |
|
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன |
|
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற |
|
விழு நிதி எளிதினின் எய்துகதில்ல |
15 |
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி, |
|
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில், |
|
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ |
|
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி, |
|
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து, |
20 |
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர, |
|
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை |
|
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக் |
|
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய |
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.- நக்கீரர் |
|
உரை |
|
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப் |
|
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப, |
|
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை |
|
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம், |
5 |
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத் |
|
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன், |
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன |
|
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர் |
|
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து |
10 |
ஆராக் காதலொடு தார் இடை குழைய, |
|
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், |
|
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து, |
|
அடுபோர் வேளிர் வீரை முன்துறை, |
|
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை, |
15 |
பெரு பெயற்கு உருகியாஅங்கு, |
|
திருந்துஇழை நெகிழ்ந்தன, தட மென் தோளே? |
|
வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார் |
|
உரை |
|
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் |
|
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் |
|
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப் |
|
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர் |
5 |
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக் |
|
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின், |
|
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை, |
|
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள, |
|
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல் |
10 |
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல் |
|
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை, |
|
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து, |
|
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ |
|
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக் |
15 |
கூழை உளர்ந்து மோழைமை கூறவும், |
|
மறுத்த சொல்லள் ஆகி, |
|
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் |
|
உரை |
|
யாம இரவின் நெடுங் கடை நின்று, |
|
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் |
|
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு |
|
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் |
5 |
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், |
|
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, |
|
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு |
|
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து, |
|
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, ''புள் ஒருங்கு |
10 |
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று |
|
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி, |
|
நிழல் செய்து உழறல் காணேன், யான்'' எனப் |
|
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து, |
|
உரு வினை நன்னன், அருளான், கரப்ப, |
15 |
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் |
|
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல், |
|
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை |
|
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல் |
|
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல, |
20 |
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி, |
|
நல்கினள், வாழியர், வந்தே ஓரி |
|
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக் |
|
கார் மலர் கடுப்ப நாறும், |
|
ஏர் நுண், ஓதி மாஅயோளே! |
|
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் |
|
உரை |
|
''தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும் |
|
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே, |
|
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான், |
|
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன், |
5 |
நேரா எழுவர் அடிப்படக் கடந்த |
|
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது'' என, |
|
ஆழல் வாழி, தோழி! அவரே, |
|
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி |
|
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர் |
10 |
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து |
|
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல் |
|
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி |
|
செல்லா நல் இசை நிறுத்த வல் வில் |
|
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த |
15 |
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி, |
|
நிலை பெறு கடவுள் ஆக்கிய, |
|
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார் |
|
உரை |
|
குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர் |
|
எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன் |
|
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட, |
|
விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த் |
5 |
திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து, |
|
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன், |
|
பானாள் இரவில், நம் பணைத் தோள் உள்ளி, |
|
தான் இவண் வந்த காலை, நம் ஊர்க் |
|
கானல்அம் பெருந் துறை, கவின் பாராட்டி, |
10 |
ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன் |
|
சாயல் மார்பின் பாயல் மாற்றி, |
|
''கைதை அம் படு சினைக் கடுந் தேர் விலங்கச் |
|
செலவு அரிது என்னும்'' என்பது |
|
பல கேட்டனமால் தோழி! நாமே. |
|
தோழி தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - உலோச்சனார் |
|
உரை |
|