|
|
கேளாய், எல்ல! தோழி! வாலிய |
|
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம் |
|
பறை கண்டன்ன பா அடி நோன் தாள் |
|
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும், |
5 |
தண் மழை ஆலியின் தாஅய், உழவர் |
|
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் |
|
பனி படு சோலை வேங்கடத்து உம்பர், |
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர் |
|
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை |
10 |
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய, |
|
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி, |
|
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட |
|
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய |
|
வன்கண் கதவின் வெண்மணி வாயில், |
15 |
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை, |
|
நீர் ஒலித்தன்ன பேஎர் |
|
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே. |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. -மாமூலனார் |
|
உரை |
|
தா இல் நல் பொன் தைஇய பாவை |
|
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன, |
|
மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால், |
|
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற |
5 |
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய், |
|
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் |
|
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி, |
|
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று |
|
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில், |
10 |
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும், |
|
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே |
|
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு |
|
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று, |
|
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ, |
15 |
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை |
|
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன் |
|
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து, |
|
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி, |
|
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய |
20 |
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக் |
|
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது |
|
எளியள் அல்லோட் கருதி, |
|
விளியா எவ்வம் தலைத் தந்தோயே. |
|
அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. -பரணர் |
|
உரை |
|
வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர் |
|
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு |
|
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர், |
|
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி |
5 |
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி, |
|
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை |
|
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும் |
|
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து, |
|
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை |
10 |
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது, |
|
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப் |
|
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப் |
|
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து, |
|
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் |
15 |
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை |
|
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள் |
|
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர் |
|
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும், |
|
சென்று, தாம் நீடலோஇலரே என்றும் |
20 |
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை, |
|
வலம் படு வென்றி வாய் வாள், சோழர் |
|
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த |
|
அறல் என நெறிந்த கூந்தல், |
|
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - தாயங்கண்ணனார் |
|
உரை |
|
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய், |
|
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம் |
|
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி, |
|
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது; |
5 |
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை, |
|
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை, |
|
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே; |
|
அமரும் நம் வயினதுவே; நமர் என |
|
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி |
10 |
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப் |
|
படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி |
|
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ, |
|
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப, |
|
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை |
15 |
மாரி மாலையும் தமியள் கேட்டே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் |
|
உரை |
|
''விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர், |
|
வேறு பல் மொழிய தேஎம் முன்னி, |
|
வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு |
|
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி, |
5 |
செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே, |
|
வலன் ஆக!'' என்றலும் நன்றுமன் தில்ல |
|
கடுத்தது பிழைக்குவதுஆயின், தொடுத்த |
|
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி, |
|
கொடுமரம் பிடித்த கோடா வன்கண், |
10 |
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர், |
|
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை, |
|
கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல் |
|
படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ, |
|
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு, |
15 |
வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண், |
|
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு |
|
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே. |
|
செலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு அழுங்குவித்தது. - இறங்கு குடிக் குன்ற நாடன் |
|
உரை |
|
''நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள் |
|
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல், |
|
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு, |
|
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும் |
5 |
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் |
|
பெட்டாங்கு மொழிப'' என்ப; அவ் அலர்ப் |
|
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்; |
|
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும், |
|
கழனி உழவர் குற்ற குவளையும், |
10 |
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு, |
|
பல் இளங் கோசர் கண்ணி அயரும், |
|
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் |
|
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் |
|
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய |
15 |
பெருங் களிற்று எவ்வம் போல, |
|
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே. |
|
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார் |
|
உரை |
|
''பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை, |
|
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன, |
|
துவலை தூவல் கழிய, அகல் வயல் |
|
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் |
5 |
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, |
|
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை |
|
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய |
|
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர, |
|
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ, |
10 |
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட, |
|
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென |
|
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க, |
|
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என, |
|
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ'' எனச் |
15 |
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே; |
|
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த |
|
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர, |
|
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு, |
|
எயிறு தீப் பிறப்பத் திருகி, |
20 |
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே. |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் |
|
உரை |
|
''கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு |
|
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த, |
|
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி, |
|
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று, |
5 |
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து, |
|
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள், |
|
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல், |
|
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை, |
|
படாஅவாகும், எம் கண்'' என, நீயும், |
10 |
''இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி, |
|
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும் |
|
பெரு மலை விடரகம் வர அரிது'' என்னாய், |
|
வர எளிதாக எண்ணுதி; அதனால், |
|
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் |
15 |
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள் |
|
அடைய முயங்கேம்ஆயின், யாமும் |
|
விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே |
|
அன்னை அறியினும் அறிக! அலர் வாய் |
|
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க! |
20 |
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு, |
|
ஒண் பூ வேங்கை கமழும் |
|
தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே! |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. - கபிலர் |
|
உரை |
|
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி, |
|
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும், |
|
''வாராயோ!'' என்று ஏத்தி, பேர் இலைப் |
|
பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல் |
5 |
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி, |
|
''என் பாடு உண்டனைஆயின், ஒரு கால், |
|
நுந்தை பாடும் உண்'' என்று ஊட்டி, |
|
''பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து, யான் |
|
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள் |
10 |
அறனிலாளனொடு இறந்தனள், இனி'' என, |
|
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் |
|
''பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச் |
|
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் |
|
பொரி அரை விளவின் புன் புற விளை புழல், |
15 |
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர் |
|
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை, |
|
மடத் தகை மெலியச் சாஅய், |
|
நடக்கும்கொல்? என, நோவல் யானே. |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் |
|
உரை |
|
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ, |
|
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும், |
|
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர், |
|
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய, |
5 |
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் |
|
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி, |
|
கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின், |
|
அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும் |
|
காணலாகா மாண் எழில் ஆகம் |
10 |
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே |
|
நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின், |
|
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும், |
|
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண், |
|
நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து, |
15 |
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின், |
|
இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை |
|
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் |
|
நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து, |
|
யாணர்த் தண் பணை உறும் என, கானல் |
20 |
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள் |
|
நல் எழில் சிதையா ஏமம் |
|
சொல் இனித் தெய்ய, யாம் தெளியுமாறே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் |
|
உரை |
|