|
|
நனை விளை நறவின் தேறல் மாந்தி, |
|
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ, |
|
''பொம்மல் ஓதி எம் மகள் மணன்'' என, |
|
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால், |
5 |
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல், |
|
மதி உடம்பட்ட மை அணற் காளை |
|
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து, |
|
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின் |
|
தண் நறு முச்சி புனைய, அவனொடு |
10 |
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை, |
|
களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை |
|
காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ, |
|
இரும் பிடி இரியும் சோலை |
|
அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே. |
|
தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார் |
|
உரை |
|
வான் உற நிவந்த நீல் நிறப் பெரு மலைக் |
|
கான நாடன் உறீஇய நோய்க்கு, என் |
|
மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்; |
|
முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண், |
5 |
கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும், |
|
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின், |
|
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ, |
|
தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின், |
|
மாதிரம் துழைஇ, மதி மருண்டு அலந்த |
10 |
ஆதிமந்தி காதலற் காட்டி, |
|
படு கடல் புக்க பாடல்சால் சிறப்பின் |
|
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர், |
|
சென்மோ வாழி, தோழி! பல் நாள், |
|
உரவு உரும் ஏறொடு மயங்கி, |
15 |
இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந் தண் ஆறே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லியது. - பரணர் |
|
உரை |
|
''பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர் |
|
மறந்தும் அமைகுவர்கொல்?'' என்று எண்ணி, |
|
ஆழல் வாழி, தோழி! கேழல் |
|
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய் |
5 |
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர், |
|
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு |
|
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும் |
|
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை, |
|
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின் |
10 |
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் |
|
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி |
|
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் |
|
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட, |
|
நன் முகை அதிரல் போதொடு, குவளைத் |
15 |
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின் |
|
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
|
உரை |
|
செல்க, பாக! எல்லின்று பொழுதே |
|
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன் |
|
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா, |
|
கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை, |
5 |
கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி, |
|
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன, |
|
வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம் |
|
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி, |
|
சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக, |
10 |
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில், |
|
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள் |
|
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த |
|
திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல் |
|
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ, |
15 |
வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என, |
|
சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால் |
|
அருங் கடி வியல் நகர் நோக்கி, |
|
வருந்துமால், அளியள் திருந்திழைதானே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் |
|
உரை |
|
அன்பும், மடனும், சாயலும், இயல்பும், |
|
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும், |
|
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி, |
|
இன்றே இவணம் ஆகி, நாளை, |
5 |
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற |
|
அகலா அம் துளை, கோடை முகத்தலின், |
|
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல் |
|
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும், |
|
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து, |
10 |
யாத்த தூணித் தலை திறந்தவைபோல், |
|
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர் |
|
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர, |
|
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச் |
|
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை |
15 |
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல், |
|
செறி தொடி முன்கை, நம் காதலி |
|
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே? |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் |
|
உரை |
|
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்; |
|
நாண் இலை மன்ற யாணர் ஊர! |
|
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை, |
|
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின், |
5 |
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக் |
|
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும், |
|
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான், |
|
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை, |
|
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய, |
10 |
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி, |
|
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு |
|
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள், |
|
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த் |
|
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப் |
15 |
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி, |
|
போர் அடு தானைக் கட்டி |
|
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே. |
|
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர் |
|
உரை |
|
''நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே; |
|
திதலை அல்குல் வரியும் வாடின; |
|
என் ஆகுவள்கொல் இவள்?'' என, பல் மாண் |
|
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி, |
5 |
இனையல் வாழி, தோழி! நனை கவுள் |
|
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு |
|
முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப் |
|
புலிக் கேழ் வேங்கைப் பூஞ் சினை புலம்ப, |
|
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல் |
10 |
செந் நிலப் படு நீறு ஆடி, செரு மலைந்து, |
|
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் |
|
பல இறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ, |
|
நோய் இலராக, நம் காதலர்! வாய் வாள், |
|
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின், |
15 |
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை, |
|
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப் |
|
பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன் |
|
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர், |
|
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர், |
20 |
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து, |
|
எல் உமிழ் ஆவணத்து அன்ன, |
|
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே! |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது; பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர் |
|
உரை |
|
பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென |
|
வரை இழி அருவி ஆரம் தீண்டித் |
|
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில், |
|
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக் |
5 |
கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி, |
|
பகலே இனிது உடன் கழிப்பி, இரவே |
|
செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல |
|
வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின் |
|
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று, |
10 |
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப் |
|
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய் |
|
இரும் பிடி இரியும் சோலைப் |
|
பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லி யது. - அண்டர் மகன் குறுவழுதியார் |
|
உரை |
|
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன் |
|
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென, |
|
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, |
|
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி |
5 |
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் |
|
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண், |
|
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி, |
|
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள் |
|
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென, |
10 |
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்! |
|
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் |
|
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப, |
|
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி |
|
நல் மா மேனி தொலைதல் நோக்கி, |
15 |
இனையல் என்றி; தோழி! சினைய |
|
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப் |
|
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து, |
|
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை, |
|
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம் |
20 |
இன் இளவேனிலும் வாரார், |
|
''இன்னே வருதும்'' எனத் தெளித்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் |
|
உரை |
|
''உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த |
|
சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப் |
|
பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல், |
|
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று, |
5 |
மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்! |
|
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த |
|
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு, |
|
மனை புறந்தருதிஆயின், எனையதூஉம், |
|
இம் மனைக் கிழமை எம்மொடு புணரின், |
10 |
தீதும் உண்டோ, மாதராய்?'' என, |
|
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர் |
|
கை வல் பாகன் பையென இயக்க, |
|
யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில் |
|
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி, |
15 |
சிறிய இறைஞ்சினள், தலையே |
|
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே. |
|
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
|
உரை |
|