|
|
''செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு |
|
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும், |
|
இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி, |
|
நல் இசை வலித்த நாணுடை மனத்தர் |
5 |
கொடு விற் கானவர் கணை இடத் தொலைந்தோர், |
|
படு களத்து உயர்த்த மயிர்த் தலைப் பதுக்கைக் |
|
கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ, |
|
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை |
|
வெஞ் சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சு உருக |
10 |
வருவர் வாழி, தோழி! பொருவர் |
|
செல் சமம் கடந்த செல்லா நல் இசை, |
|
விசும்பு இவர் வெண் குடை, பசும் பூட் பாண்டியன் |
|
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் |
|
ஆடு வண்டு அரற்றும் முச்சித் |
15 |
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் |
| உரை |
|
காண் இனி வாழி, தோழி! பானாள், |
|
மழை முழங்கு அரவம் கேட்ட, கழை தின், |
|
மாஅல் யானை புலி செத்து வெரீஇ, |
|
இருங் கல் விடரகம் சிலம்பப் பெயரும் |
5 |
பெருங் கல் நாடன் கேண்மை, இனியே, |
|
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண், |
|
மன்ற வேங்கை மண நாட் பூத்த |
|
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் |
|
வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர் |
10 |
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் |
|
ஆர் கலி விழவுக் களம் கடுப்ப, நாளும், |
|
விரவுப் பூம் பலியொடு விரைஇ, அன்னை |
|
கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி, |
|
''முருகு'' என வேலற் தரூஉம். |
15 |
பருவமாகப் பயந்தன்றால், நமக்கே. |
|
தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்,சொல்லியது. - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் |
|
உரை |
|
அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின் |
|
அலர் முலை நனைய, அழாஅல் தோழி! |
|
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம் |
|
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென, |
5 |
ஊன் இல் யானை உயங்கும் வேனில், |
|
மறப் படைக் குதிரை, மாறா மைந்தின், |
|
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை |
|
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல் |
|
பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல் |
10 |
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு, |
|
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த |
|
சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி |
|
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ, |
|
பொருள்வயின் நீடலோஇலர் நின் |
15 |
இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே. |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார் |
|
உரை |
|
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை, |
|
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின், |
|
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப் |
|
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய, |
5 |
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய |
|
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப, |
|
கால் என மருள, ஏறி, நூல் இயல் |
|
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர் |
|
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந! |
10 |
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை |
|
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள, |
|
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி |
|
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத, |
|
எல்லை போகிய புல்லென் மாலை, |
15 |
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர், |
|
கழி படர் உழந்த பனி வார் உண்கண் |
|
நல் நிறம் பரந்த பசலையள் |
|
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயனார் |
|
உரை |
|
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து |
|
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும், |
|
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ? |
|
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து, |
5 |
விண்டு முன்னிய கொண்டல் மா மழை |
|
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப, |
|
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி |
|
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ, |
|
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ |
10 |
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய, |
|
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல் |
|
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ |
|
மாரி அம் குருகின் ஈரிய குரங்க, |
|
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி, |
15 |
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை |
|
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய, |
|
''நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு |
|
தொல் நலம் சிதையச் சாஅய், |
|
என்னள்கொல் அளியள்?'' என்னாதோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் |
| உரை |
|
மணி மருள் மலர முள்ளி அமன்ற, |
|
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன் |
|
அரி நிறக் கொழுங் குறை வௌவினர் மாந்தி, |
|
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை, |
5 |
இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல் சூட்டுப் |
|
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக் |
|
கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ |
|
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன் |
|
காமம் பெருமை அறியேன், நன்றும் |
10 |
உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல் |
|
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப, |
|
கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை |
|
அறியாமையின் அழிந்த நெஞ்சின், |
|
''ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின், |
15 |
தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை, |
|
ஆட்டன் அத்தியைக் காணீரோ?'' என |
|
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின், |
|
''கடல் கொண்டன்று'' என, ''புனல் ஒளித்தன்று'' என, |
|
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த |
20 |
ஆதிமந்தி போல, |
|
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே. |
|
ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பரணர் |
| உரை |
|
''புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ |
|
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப, |
|
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் |
|
தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ, |
5 |
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து |
|
இன்னா கழியும் கங்குல்'' என்று நின் |
|
நல் மா மேனி அணி நலம் புலம்ப, |
|
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல் |
|
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை |
10 |
மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு, |
|
இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின் |
|
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு, |
|
பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும் |
|
புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும், |
15 |
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து |
|
ஐய அமர்த்த உண்கண் நின் |
|
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -தாயங்கண்ணனார் |
| உரை |
|
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின், |
|
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென, |
|
மட மான் வல்சி தரீஇய, நடு நாள், |
|
இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த |
5 |
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து, |
|
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற, |
|
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு, |
|
நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி, |
|
இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் |
10 |
பெருங் கல் நாட! பிரிதிஆயின், |
|
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு |
|
இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும் |
|
மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ், |
|
கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி |
15 |
நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து, |
|
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள் |
|
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த |
|
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே? |
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - கபிலர் |
| உரை |
|
அளிதோதானே; எவன் ஆவதுகொல்? |
|
மன்றும் தோன்றாது; மரனும் மாயும் |
|
''புலி என உலம்பும் செங் கண் ஆடவர், |
|
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர், |
5 |
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய |
|
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும் |
|
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி, |
|
புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின், |
|
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் |
10 |
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய, |
|
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே, |
|
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?'' என, |
|
குறு நெடும் புலவி கூறி, நம்மொடு |
|
நெருநலும் தீம் பல மொழிந்த |
15 |
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே! |
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார் |
| உரை |
|
செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத் |
|
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை |
|
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப, |
|
இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல் |
5 |
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் |
|
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, |
|
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில் |
|
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி, |
|
யாயும் ஆயமோடு அயரும்; நீயும், |
10 |
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி, |
|
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து, |
|
இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட |
|
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர், |
|
பூ வேய் புன்னை அம் தண் பொழில், |
15 |
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே. |
|
தோழி இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது. - எழுஉப்பன்றி நாகன் குமரனார் |
| உரை |
|