|
|
''துனி இன்று இயைந்த துவரா நட்பின் |
|
இனியர் அம்ம, அவர்'' என முனியாது |
|
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும், |
|
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய |
5 |
நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை |
|
மூங்கில் இள முளை திரங்க, காம்பின் |
|
கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து |
|
அருவி ஆன்ற வெருவரு நனந்தலை, |
|
பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி, |
10 |
தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை |
|
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை |
|
விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும் |
|
அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய் |
|
வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச் |
15 |
செம் முக மந்தி ஆடும் |
|
நல் மர மருங்கின் மலை இறந்தோரே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் |
|
உரை |
|
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச் |
|
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது |
|
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு |
|
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை, |
5 |
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம், |
|
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன் |
|
பண்பு தர வந்தமை அறியாள், ''நுண் கேழ் |
|
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு |
|
அறிதல் வேண்டும்'' என, பல் பிரப்பு இரீஇ, |
10 |
அறியா வேலற் தரீஇ, அன்னை |
|
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி, |
|
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம், |
|
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை |
|
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள், |
15 |
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய, |
|
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ் |
|
முயங்கல் இயைவதுமன்னோ தோழி! |
|
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில் |
|
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச் |
20 |
சாந்த மென் சினை தீண்டி, மேலது |
|
பிரசம் தூங்கும் சேண் சிமை |
|
வரையக வெற்பன் மணந்த மார்பே! |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பேரிசாத்தனார் |
|
உரை |
|
அவரை ஆய் மலர் உதிர, துவரின |
|
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப, |
|
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக் |
|
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய, |
5 |
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு |
|
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி |
|
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக் |
|
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை! |
|
''நெடிது வந்தனை'' என நில்லாது ஏங்கிப் |
10 |
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை |
|
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை |
|
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல; |
|
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது |
|
நமக்கே எவ்வம் ஆகின்று; |
15 |
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே! |
|
தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத், தலைமகள் ''ஆற்றேன்'' என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் |
|
உரை |
|
''''''பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன |
|
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை |
|
பகல் உறை முது மரம் புலம்பப் போகி, |
|
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை |
5 |
கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை |
|
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை |
|
வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு |
|
இனிதுகொல், வாழி தோழி?'''' என, தன் |
|
பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப, |
10 |
அருந் துயர் உடையள் இவள்'' என விரும்பிப் |
|
பாணன் வந்தனன், தூதே; நீயும் |
|
புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி, |
|
நெடுந் தேர் ஊர்மதி, வலவ! |
|
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை.......மள்ளனார் |
|
உரை |
|
''உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார் |
|
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்'' என |
|
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் |
|
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி, |
5 |
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில், |
|
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை |
|
வல் வில் இளையர் தலைவர், எல் உற, |
|
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை, |
|
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில், |
10 |
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள் |
|
கான யானை வெண் கோடு சுட்டி, |
|
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் |
|
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற, |
|
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து |
15 |
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக் |
|
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண், |
|
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு |
|
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் |
|
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி, |
20 |
அம் மா அரிவை ஒழிய, |
|
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன்
சொல்லிச், செலவு அழுங்கியது. - மதுரை மருதன்
இளநாகனார் |
|
உரை |
|
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை |
|
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக, |
|
நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும் |
|
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர! |
5 |
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு |
|
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு |
|
ஆடினை என்ப, நெருநை; அலரே |
|
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால் |
|
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில், |
10 |
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் |
|
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய, |
|
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய, |
|
மொய் வலி அறுத்த ஞான்றை, |
|
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே. |
|
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - பரணர் |
|
உரை |
|
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை |
|
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் |
|
அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து, |
|
இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை, |
5 |
கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின், |
|
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும் |
|
அரிய கானம் என்னார், பகை பட |
|
முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக் |
|
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் |
10 |
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி, |
|
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின் |
|
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக் |
|
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார் |
|
உரை |
|
நகை நீ கேளாய் தோழி! அல்கல்; |
|
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ, |
|
இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு |
|
நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து, |
5 |
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற |
|
தறுகட் பன்றி நோக்கி, கானவன் |
|
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி |
|
மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது, |
|
''அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்'' என, |
10 |
எய்யாது பெயரும் குன்ற நாடன் |
|
செறி அரில் துடக்கலின், பரீஇப் புரி அவிழ்ந்து, |
|
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை, |
|
ஏற்று இமிற் கயிற்றின், எழில் வந்து துயல்வர, |
|
இல் வந்து நின்றோற் கண்டனள், அன்னை; |
15 |
வல்லே என் முகம் நோக்கி, |
|
''நல்லை மன்!'' என நகூஉப் பெயர்ந்தோளே. |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்ப, தோழி சொல்லியது. - கபிலர் |
|
உரை |
|
அம்ம வாழி, தோழி! பல் நாள் |
|
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார் |
|
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை |
|
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும் |
5 |
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி, |
|
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் |
|
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ, |
|
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண் |
|
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் |
10 |
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார் |
|
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ, |
|
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர் |
|
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற |
|
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை |
15 |
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த |
|
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து, |
|
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி, |
|
உழை மான் இன நிரை ஓடும் |
|
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நக்கீரனார் |
|
உரை |
|
எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர் |
|
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை |
|
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப, |
|
மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர, |
5 |
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட, |
|
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி, |
|
தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன், |
|
வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும் |
|
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு |
10 |
அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய், |
|
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி, |
|
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு |
|
துறையும் துஞ்சாது, கங்குலானே! |
|
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் |
|
உரை |
|