|
|
தூதும் சென்றன; தோளும் செற்றும்; |
|
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்; |
|
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு |
|
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின், |
5 |
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண் |
|
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித் |
|
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர் |
|
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில், |
|
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, |
10 |
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர் |
|
பணியாமையின், பகை தலைவந்த |
|
மா கெழு தானை வம்ப மோரியர் |
|
புனை தேர் நேமி உருளிய குறைத்த |
|
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர், |
15 |
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை |
|
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி |
|
மா நிலம் நெளியக் குத்தி, புகலொடு |
|
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை |
|
நிரம்பா நீள் இடைப் போகி, |
20 |
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி சொல்லியது. - மாமூலனார் |
|
உரை |
|
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து |
|
வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி |
|
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி, |
|
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப் |
5 |
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி, |
|
தனியன் வருதல் அவனும் அஞ்சான்; |
|
பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட, |
|
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்; |
|
யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத் |
10 |
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித் |
|
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப் |
|
பெருங் குளம் காவலன் போல, |
|
அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது. - நக்கண்ணையார் |
|
உரை |
|
''வைகல்தோறும் பசலை பாய, என் |
|
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென; |
|
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே, |
|
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி, |
5 |
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன் |
|
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய |
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான் |
|
சில நாள் உய்யலென் போன்ம்'' எனப் பல நினைந்து, |
|
ஆழல் வாழி, தோழி! வடாஅது, |
10 |
ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய, |
|
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய், |
|
கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து, |
|
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத் |
|
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய |
15 |
அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த |
|
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி, |
|
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம் |
|
நேரா வன் தோள் வடுகர் பெரு மகன், |
|
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை |
20 |
அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து |
|
உள்ளுபதில்ல தாமே பணைத் தோள், |
|
குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின், |
|
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல், |
|
மாக விசும்பின் திலகமொடு பதித்த |
25 |
திங்கள் அன்ன நின் திரு முகத்து, |
|
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - நக்கீரர் |
|
உரை |
|
''நரை விராவுற்ற நறு மென் கூந்தற் |
|
செம் முது செவிலியர் பல பாராட்ட, |
|
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி |
|
மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ, |
5 |
மனை உறை புறவின் செங் காற் சேவல் |
|
துணையொடு குறும் பறை பயிற்றி, மேல் செல, |
|
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும் |
|
நம்வயின் நினையும் நல் நுதல் அரிவை |
|
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல, |
10 |
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி, |
|
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும், |
|
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி |
|
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப, |
|
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய, |
15 |
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென |
|
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின் |
|
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான் |
|
சொல்லிய அளவை, நீடாது, வல்லென, |
|
தார் மணி மா அறிவுறாஅ, |
20 |
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே! |
|
வினை முற்றி வந்து எய்திய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
|
உரை |
|
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம் |
|
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ, |
|
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி, |
|
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட, |
5 |
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான் |
|
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய, |
|
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல |
|
கழியாமையே, அழி படர் அகல, |
|
வருவர்மன்னால் தோழி! தண் பணைப் |
10 |
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண், |
|
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை |
|
பெரு வளம் மலர அல்லி தீண்டி, |
|
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல் |
|
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க, |
15 |
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை |
|
கடி மனை மாடத்துக் கங்குல் வீச, |
|
''திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய, |
|
நிரை வளை ஊருந் தோள்'' என, |
|
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூரத், தோழிக்குச் சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் |
|
உரை |
|
பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில |
|
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை |
|
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப் |
|
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின் |
5 |
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு |
|
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது |
|
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர! |
|
பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே |
|
கையகப்பட்டமை அறியாய்; நெருநை |
10 |
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை |
|
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து, |
|
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது |
|
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத் |
|
தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி, |
15 |
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர், |
|
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய |
|
அறனிலாளன்,''அறியேன்'' என்ற |
|
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய், |
|
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி, |
20 |
நீறு தலைப்பெய்த ஞான்றை, |
|
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. |
|
தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது. - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் |
|
உரை |
|
வேனிற் பாதிரிக் கூனி மா மலர் |
|
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம், |
|
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப, |
|
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின் |
5 |
பொம்மல் ஓதி பொதுள வாரி, |
|
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச் |
|
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின் |
|
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் |
|
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள |
10 |
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை |
|
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி, |
|
வல்லுவைமன்னால் நடையே கள்வர் |
|
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார், |
|
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து, |
15 |
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து, |
|
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் |
|
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும், |
|
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு |
|
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ, |
20 |
வெள் அரா மிளிர வாங்கும் |
|
பிள்ளை எண்கின் மலைவயினானே. |
|
உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் |
|
உரை |
|
நன்னன் உதியன் அருங் கடிப் பாழி, |
|
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த |
|
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும், அன்னோட் |
|
துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய் |
5 |
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக் |
|
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து |
|
மாய இருள் அளை மாய் கல் போல, |
|
மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும், |
|
மெல் இயற் குறுமகள் நல் அகம் நசைஇ, |
10 |
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி, |
|
இரவின் எய்தியும் பெறாஅய், அருள் வரப் |
|
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு, உலகத்து |
|
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக, |
|
காமம் கைம்மிக உறுதர, |
15 |
ஆனா அரு படர் தலைத்தந்தோயே! |
|
அல்லகுறிப்பட்டுப் பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பரணர் |
|
உரை |
|
வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்; |
|
தாரும் தையின; தழையும் தொடுத்தன; |
|
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப் |
|
பெயல் நீர் தலைஇ, உலவை இலை நீத்துக் |
5 |
குறு முறி ஈன்றன, மரனே; நறு மலர் |
|
வேய்ந்தன போலத் தோன்றி, பல உடன் |
|
தேம் படப் பொதுளின பொழிலே; கானமும், |
|
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள், |
|
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப் |
10 |
போது வந்தன்று, தூதே; நீயும் |
|
கலங்கா மனத்தை ஆகி, என் சொல் |
|
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி! |
|
தெற்றி உலறினும், வயலை வாடினும், |
|
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும், |
15 |
நின்னினும் மடவள் நனி நின் நயந்த |
|
அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர் |
|
புலி மருள் செம்மல் நோக்கி, |
|
வலியாய் இன்னும்; தோய்கம், நின் முலையே! |
|
உடன்போக்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - கயமனார் |
|
உரை |
|
மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர, |
|
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக் |
|
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப, |
|
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப, |
5 |
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய, |
|
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில் |
|
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர, |
|
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப் |
|
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ, |
10 |
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற, |
|
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது, |
|
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் |
|
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள், |
|
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த |
15 |
அன்பிலாளன் அறிவு நயந்தேனே. |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழியால் சொல் எடுக்கப்பட்டு,தலைமகள் சொல்லியது. - மோசிக் கரையனார் |
|
உரை |
|