|
|
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ |
|
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர, |
|
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த் |
|
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல் |
5 |
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச் |
|
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, ''நின் |
|
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி |
|
ஏகு'' என, ஏகல் நாணி, ஒய்யென |
|
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய், |
10 |
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு, |
|
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை |
|
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி |
|
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு |
|
வில்லோர் குறும்பில் ததும்பும், |
15 |
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே. |
|
புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
| உரை |
|
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி, |
|
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய், |
|
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து, |
|
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென, |
5 |
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது, |
|
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின், |
|
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள், |
|
சினத்தின் கொண்ட படிவம் மாறாள், |
|
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன், |
10 |
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் |
|
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய |
|
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து, |
|
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து |
|
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் |
15 |
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும் |
|
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன் |
|
கொண்டல் மா மலை நாறி, |
|
அம் தீம் கிளவி வந்தமாறே. |
|
இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் |
|
உரை |
|
தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத் தோன்றி, |
|
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம் |
|
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம் |
|
பயம் கெடத் திருகிய பைது அறு காலை, |
5 |
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு, |
|
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார், |
|
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி, |
|
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம் |
|
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு, |
10 |
அவள் துணிவு அறிந்தனென்ஆயின், அன்னோ! |
|
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும் |
|
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க, |
|
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று |
|
திரு நுதல் பொலிந்த என் பேதை |
15 |
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே! |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கருவூர்க் கண்ணம்பாளனார் |
|
உரை |
|
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன, |
|
குழை அமல் முசுண்டை வாலிய மலர, |
|
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப் |
|
பெரிய சூடிய கவர் கோல் கோவலர், |
5 |
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு, |
|
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர, |
|
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து, |
|
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக, |
|
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி, |
10 |
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர் |
|
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை |
|
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக் |
|
காய் சின யானை கங்குல் சூழ, |
|
அஞ்சுவர இறுத்த தானை |
15 |
வெஞ் சின வேந்தன் பாசறையோரே? |
|
பருவம் கண்டு, வன்புறை எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு இளங்கண்ணனார் |
|
உரை |
|
புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து, |
|
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும் |
|
இமயச் செவ் வரை மானும்கொல்லோ? |
|
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் |
5 |
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை |
|
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ? |
|
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி |
|
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல், |
|
குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து, |
10 |
ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு |
|
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை அடைந்து, |
|
இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய |
|
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து, |
|
அணங்கு அரு மரபின் பேஎய் போல |
15 |
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க, |
|
துகள் அற விளைந்த தோப்பி பருகி, |
|
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர் |
|
புலாஅல் கையர், பூசா வாயர், |
|
ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு |
20 |
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும் |
|
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ, |
|
வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர் |
|
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. -மாமூலனார் |
|
உரை |
|
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின் |
|
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை, |
|
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ, |
|
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல் |
5 |
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ, |
|
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண் |
|
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலையாகி, |
|
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து, |
|
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே |
10 |
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் |
|
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் |
|
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் |
|
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண், |
|
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன, |
15 |
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது |
|
அவலம் அன்றுமன், எமக்கே; அயல |
|
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த |
|
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை |
|
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும் |
20 |
திரு மணி விளக்கின் அலைவாய்ச் |
|
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே! |
|
பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. -பரணர் |
|
உரை |
|
''நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து, |
|
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து, |
|
திறம் வேறு ஆகல் எற்று?'' என்று ஒற்றி, |
|
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து, |
5 |
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை, |
|
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை, |
|
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ |
|
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர, |
|
மை பட்டன்ன மா முக முசுவினம் |
10 |
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென |
|
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய், |
|
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் |
|
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர் |
|
தாம் பழி உடையர்அல்லர்; நாளும் |
15 |
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு வினை |
|
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த, |
|
தோளே தோழி! தவறு உடையவ்வே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத் தலை மகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
|
உரை |
|
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப் |
|
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த |
|
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை |
|
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் |
5 |
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய |
|
காமம் கலந்த காதல் உண்டுஎனின், |
|
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி; |
|
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின், |
|
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே |
10 |
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது, |
|
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த |
|
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி, |
|
செய்து பின் இரங்கா வினையொடு |
|
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே! |
|
குறை வேண்டிப் பின் நின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி,தலைமகட்குக் குறை நயப்ப, கூறியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் |
|
உரை |
|
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க! |
|
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக! |
|
ஏறுடை இன நிரை பெயர, பெயராது, |
|
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய |
5 |
தறுகணாளர் நல் இசை நிறுமார், |
|
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின், |
|
நட்ட போலும் நடாஅ நெடுங் கல் |
|
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி, |
|
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய |
10 |
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் |
|
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி |
|
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால் |
|
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர், |
|
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள், |
15 |
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் |
|
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர, |
|
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து |
|
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப, |
|
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ, |
20 |
திரு நுதல் மகளிர் குரவை அயரும் |
|
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை, |
|
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின் |
|
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த |
|
ஒண் செங் கழுநீர் அன்ன, நின் |
25 |
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார் |
|
உரை |
|
இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம், |
|
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து |
|
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும் |
|
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே; |
5 |
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை |
|
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும் |
|
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே, |
|
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான் |
|
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன, |
10 |
அம் மா மேனி தொல் நலம் தொலைய, |
|
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே, |
|
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச் |
|
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை |
|
இன்னாது உயங்கும் கங்குலும், |
15 |
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே. |
|
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. -சாகலாசனார் |
|
உரை |
|