|
|
பொறி வரிப் புறவின் செங் காற் சேவல் |
|
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி, |
|
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு, |
|
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக் |
5 |
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி, |
|
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர் |
|
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப் |
|
பல் காய் அம் சினை அகவும் அத்தம் |
|
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு |
10 |
நிலை அரும் பொருட் பிணி நினைந்தனிர்எனினே, |
|
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே, |
|
களி மலி கள்ளின் நல் தேர் அவியன் |
|
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும் |
|
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின் |
15 |
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள், |
|
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின், |
|
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே? |
|
செலவு உணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் |
|
உரை |
|
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப் |
|
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல் |
|
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு |
|
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி, |
5 |
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க, |
|
தனியன் வந்து, பனி அலை முனியான், |
|
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற |
|
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி |
|
அசையா நாற்றம் அசை வளி பகர, |
10 |
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக் |
|
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும், |
|
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு, |
|
''முருகு'' என உணர்ந்து, முகமன் கூறி, |
|
உருவச் செந் தினை நீரொடு தூஉய், |
15 |
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ! |
|
என் ஆவது கொல்தானே பொன் என |
|
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய |
|
மணி நிற மஞ்ஞை அகவும் |
|
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
|
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
|
உரை |
|
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின், |
|
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ, |
|
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப, |
|
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம், |
5 |
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர் |
|
அறியார்கொல்லோ, தாமே? அறியினும், |
|
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின், |
|
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ? |
|
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு |
10 |
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு |
|
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை |
|
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி, |
|
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை, |
|
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி, |
15 |
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம் |
|
நில வரை எல்லாம் நிழற்றி, |
|
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே. |
|
பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது.-ஒளவையார் |
|
உரை |
|
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து, |
|
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம் |
|
பருவம் செய்த பானாட் கங்குல், |
|
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப, |
5 |
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி, |
|
திண் கால் உறியன், பானையன், அதளன், |
|
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, |
|
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன், |
|
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப, |
10 |
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ, |
|
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும் |
|
தண் நறு புறவினதுவே நறு மலர் |
|
முல்லை சான்ற கற்பின் |
|
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக் காடனார் |
|
உரை |
|
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி, |
|
குடை அடை நீரின் மடையினள் எடுத்த |
|
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி, |
|
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி! |
5 |
''பிதிர்வை நீரை வெண் நீறு ஆக'' என, |
|
யாம் தற் கழறுங் காலை, தான் தன் |
|
மழலை இன் சொல், கழறல் இன்றி, |
|
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல் |
|
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள், |
10 |
ஏதிலாளன் காதல் நம்பி, |
|
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக் |
|
குருளை எண்கின் இருங் கிளை கவரும் |
|
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய, |
|
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம், |
15 |
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி |
|
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும் |
|
கூழை நொச்சிக் கீழது, என் மகள் |
|
செம் புடைச் சிறு விரல் வரித்த |
|
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் |
|
உரை |
|
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த |
|
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன் |
|
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக் |
|
கடி இலம் புகூஉம் கள்வன் போல, |
5 |
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு |
|
ஆவது ஆக! இனி நாண் உண்டோ? |
|
வருகதில் அம்ம, எம் சேரி சேர! |
|
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண, |
|
தாரும் தானையும் பற்றி, ஆரியர் |
10 |
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல, |
|
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன் |
|
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று |
|
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல், |
|
பரந்து வெளிப்படாது ஆகி, |
15 |
வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே! |
|
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர் |
|
உரை |
|
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப் |
|
பகல் அழி தோற்றம் போல, பையென |
|
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார், |
|
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக, |
5 |
கடையல்அம் குரல வாள் வரி உழுவை |
|
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது, |
|
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர், |
|
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும் |
|
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை, |
10 |
பொத்துடை மரத்த புகர் படு நீழல், |
|
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும், |
|
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின் |
|
வாரா அளவை ஆயிழை! கூர் வாய் |
|
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர் |
15 |
மனை உறை கோழி மறனுடைச் சேவல் |
|
போர் புரி எருத்தம் போலக் கஞலிய |
|
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி, |
|
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் |
|
வந்தன்று அம்ம, தானே; |
20 |
வாரார் தோழி! நம் காதலோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன் |
|
உரை |
|
குண கடல் முகந்த கொள்ளை வானம் |
|
பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத் |
|
தோல் நிரைத்தனைய ஆகி, வலன் ஏர்பு, |
|
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி, |
5 |
உரும் உரறு அதிர் குரல் தலைஇ, பானாள், |
|
பெரு மலை மீமிசை முற்றினஆயின், |
|
வாள் இலங்கு அருவி தாஅய், நாளை, |
|
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி |
|
வருவதுமாதோ, வண் பரி உந்தி, |
10 |
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை; |
|
பனி பொரு மழைக் கண் சிவப்ப, பானாள் |
|
முனி படர் அகல மூழ்குவம்கொல்லோ |
|
மணி மருள் மேனி ஆய்நலம் தொலைய, |
|
தணிவு அருந் துயரம் செய்தோன் |
15 |
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே? |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. - கபிலர் |
|
உரை |
|
''நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும், |
|
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ, |
|
ஒரு பதி வாழ்தல் ஆற்றுபதில்ல |
|
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய |
5 |
மென் முலை முற்றம் கடவாதோர்'' என, |
|
நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து |
|
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி |
|
ஆள்வினை மாரியின் அவியா, நாளும் |
|
கடறு உழந்து இவணம் ஆக, படர் உழந்து |
10 |
யாங்கு ஆகுவள்கொல் தானே தீம் தொடை |
|
விளரி நரம்பின் நயவரு சீறியாழ் |
|
மலி பூம் பொங்கர் மகிழ் குரற் குயிலொடு |
|
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும் |
|
நம்முடை மதுகையள் ஆகி, அணி நடை |
15 |
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி, |
|
கையறு நெஞ்சினள், அடைதரும் |
|
மை ஈர் ஓதி மாஅயோளே? |
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் |
|
உரை |
|
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப் |
|
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள், |
|
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி |
|
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள், |
5 |
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும், |
|
பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து, |
|
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு |
|
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும், |
|
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும், |
10 |
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின், |
|
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக் |
|
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த் |
|
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும் |
|
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே? |
|
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், - அம்மூவனார் |
|
உரை |
|