|
|
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும், |
|
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய |
|
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது, |
|
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி, |
5 |
வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை |
|
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் |
|
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை |
|
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர் |
|
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு |
10 |
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து, |
|
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த |
|
அறை இறந்து, அவரோ சென்றனர் |
|
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் |
| உரை |
|
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய, |
|
செறி மடை அம்பின், வல் வில், கானவன் |
|
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு, |
|
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன், |
5 |
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப, |
|
வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க |
|
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, |
|
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு, |
|
சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார் |
10 |
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு |
|
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து |
|
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய் |
|
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்; |
|
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி, |
15 |
யாயும், ''அவனே'' என்னும்; யாமும், |
|
''வல்லே வருக, வரைந்த நாள்!'' என, |
|
நல் இறை மெல் விரல் கூப்பி, |
|
இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே! |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - தொல் கபிலன் |
|
உரை |
|
நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, |
|
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும், |
|
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி |
|
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி, |
5 |
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் |
|
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப் |
|
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும், |
|
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு |
|
அரிய ஆகும் என்னாமை, கரி மரம் |
10 |
கண் அகை இளங் குழை கால்முதல் கவினி, |
|
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க, |
|
பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென, |
|
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து, |
|
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன |
15 |
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப, |
|
இனிய ஆகுக தணிந்தே |
|
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே. |
|
உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் |
|
உரை |
|
சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன |
|
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல் |
|
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு, |
|
குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி, |
5 |
இன் துயில் எழுந்து, துணையொடு போகி, |
|
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் |
|
புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி, |
|
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர், |
|
விசைத்த வில்லர், வேட்டம் போகி, |
10 |
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும் |
|
காமர் புறவினதுவே காமம் |
|
நம்மினும் தான் தலைமயங்கிய |
|
அம் மா அரிவை உறைவு இன் ஊரே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - இடைக்காடனார் |
| உரை |
|
''ஒழியச் சென்மார், செல்ப'' என்று, நாம் |
|
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து |
|
எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று |
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர், |
|
5 |
காடு தேர் மடப் பிணை அலற, கலையின் |
|
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை |
|
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி |
|
இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன |
|
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை |
10 |
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி, |
|
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை |
|
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள் |
|
குவளை உண்கண் இவளும் நம்மொடு |
|
வரூஉம் என்றனரே, காதலர்; |
15 |
வாராய் தோழி! முயங்குகம், பலவே. |
|
உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் |
|
உரை |
|
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை, |
|
வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க; |
|
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ, |
|
காஞ்சி நீழல், தமர் வளம் பாடி, |
5 |
ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த |
|
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் |
|
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர! |
|
விழையா உள்ளம் விழையும் ஆயினும், |
|
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு, |
10 |
அறனும் பொருளும் வழாமை நாடி, |
|
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன் |
|
பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்; |
|
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால், |
|
அரிய பெரியோர்த் தெரியுங்காலை, |
15 |
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன |
|
பொய்யொடு மிடைந்தவை தோன்றின், |
|
மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே? |
|
''வரைந்து எய்துவல்'' என்று நீங்கும் தலைமகன், ''தலைமகளை
ஆற்றுவித்துக் கொண் டிருத்தல் வேண்டும்'' என்று
தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத்
தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. -
ஓரம்போகியார் |
|
உரை |
|
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ, |
|
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக, |
|
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை, |
|
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின் |
5 |
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர் |
|
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை, |
|
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து |
|
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை |
|
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை, |
10 |
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க, |
|
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த |
|
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க, |
|
அரம்பு வந்து அலைக்கும் மாலை, |
|
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே. |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற்கீரத்தனார் |
| உரை |
|
சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின் மலை |
|
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை, |
|
சாரல் வேங்கைப் படு சினைப் புதுப் பூ |
|
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை, |
5 |
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல், |
|
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்! |
|
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின், |
|
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக் |
|
கொடியோர் குறுகும் நெடி இருங் குன்றத்து, |
10 |
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி |
|
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்க் |
|
கயந் தலை மந்தி உயங்கு பசி களைஇயர், |
|
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும், |
|
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து, |
15 |
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக் |
|
கொந்தொடு உதிர்த்த கதுப்பின், |
|
அம் தீம் கிளவித் தந்தை காப்பே. |
|
பகற்குறிக்கண் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - விற்றூற்று மூதெயினனார் |
| உரை |
|
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் |
|
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் |
|
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும் |
|
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின், |
5 |
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும், |
|
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது, |
|
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது |
|
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி |
|
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த |
10 |
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி, |
|
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத் தெறிப்ப, |
|
மை அற விரிந்த படை அமை சேக்கை |
|
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ, |
|
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் |
15 |
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி, |
|
''நல்ல கூறு'' என நடுங்கி, |
|
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே? |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார் |
| உரை |
|
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை, |
|
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய |
|
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர், |
|
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென, |
5 |
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது, |
|
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென, |
|
அம் கண் பெண்ணை அன்புற நரலும் |
|
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன், |
|
கழி சேர் புன்னை அழி பூங் கானல், |
10 |
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் |
|
மணவா முன்னும் எவனோ தோழி! |
|
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன் |
|
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை, |
|
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல் |
15 |
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ, |
|
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே? |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. - நக்கீரர் |
| உரை |
|