|
|
வானம் பெயல் வளம் கரப்ப, கானம் |
|
உலறி இலை இலவாக, பல உடன் |
|
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப, |
|
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப் |
5 |
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப் |
|
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு |
|
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல், |
|
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும் |
|
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை |
10 |
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த் |
|
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப, |
|
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர |
|
உவலை சூடிய தலையர், கவலை |
|
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும் |
15 |
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர |
|
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய் |
|
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று, |
|
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி, |
|
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி, |
20 |
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம் |
|
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு |
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப் |
|
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல், |
|
நல் எழில், மழைக் கண், நம் காதலி |
25 |
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே. |
|
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ |
|
உரை |
|
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து, |
|
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென் முறிச் |
|
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ, |
|
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி |
5 |
ஏதில் வேலன் கோதை துயல்வரத் |
|
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்; |
|
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம் படர்ந்து, |
|
இரவின் மேயல் மரூஉம் யானைக் |
|
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள், |
10 |
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன் |
|
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல் |
|
உடு உறு கணையின் போகி, சாரல் |
|
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ, |
|
பலவின் பழத்துள் தங்கும் |
15 |
மலை கெழு நாடன் மணவாக்காலே! |
|
வெறி அச்சுறீஇ,தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர் |
|
உரை |
|
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை |
|
வலை வலந்தனைய ஆக, பல உடன் |
|
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின், |
|
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன |
5 |
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி, |
|
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி, |
|
மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி, |
|
உகாஅய் மென் சினை உதிர்வன கழியும் |
|
வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே, |
10 |
செல்ப என்ப தோழி! யாமே, |
|
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த |
|
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து, |
|
இன்னா மொழிதும் என்ப; |
|
என் மயங்கினர்கொல், நம் காதலோரே? |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். - காவன்முல்லைப் பூதனார் |
|
உரை |
|
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி, |
|
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப் |
|
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய, |
|
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் |
5 |
நீர் வார் கண்ணின் கருவிளை மலர, |
|
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை |
|
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர் |
|
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர, |
|
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல் |
10 |
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச, |
|
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள், |
|
''காய் சின வேந்தன் பாசறை நீடி, |
|
நம் நோய் அறியா அறனிலாளர் |
|
இந் நிலை களைய வருகுவர்கொல்?'' என |
15 |
ஆனாது எறிதரும் வாடையொடு |
|
நோனேன் தோழி! என் தனிமையானே. |
|
பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் |
|
உரை |
|
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப, |
|
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின், |
|
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை, |
|
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி, |
5 |
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள் |
|
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி, |
|
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும் |
|
கல்லுடை அதர கானம் நீந்தி, |
|
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் |
10 |
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து |
|
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல் |
|
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும், |
|
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து, |
|
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத் |
15 |
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர், |
|
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும் |
|
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும், |
|
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ |
|
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும் |
20 |
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண், |
|
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின் |
|
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் |
|
உரை |
|
கோதை இணர, குறுங் கால், காஞ்சிப் |
|
போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல், |
|
அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு |
|
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும் |
5 |
பெரு நீர் வையை அவளொடு ஆடி, |
|
புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின் |
|
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில் |
|
பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி |
|
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும் |
10 |
பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல் |
|
கடும் பகட்டு யானை நெடுந் தேர் செழியன், |
|
மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய |
|
மலிதரு கம்பலை போல, |
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே. |
|
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி சொல்லியது. -மதுரைப் பேராலவாயார் |
|
உரை |
|
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும், |
|
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி, |
|
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக, |
|
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின் |
5 |
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி, |
|
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென, |
|
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல், |
|
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து |
|
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன் |
10 |
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் |
|
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின், |
|
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில், |
|
எழுதியன்ன கொடி படு வெருகின் |
|
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை, |
15 |
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம் |
|
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு |
|
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும் |
|
வெரு வரு கானம், நம்மொடு, |
|
''வருவல்'' என்றோள் மகிழ் மட நோக்கே? |
|
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் |
|
உரை |
|
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு |
|
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு விளங்கி, |
|
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட, |
|
மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை |
5 |
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ் சினைத் |
|
தண் துளி அசைவளி தைவரும் நாட! |
|
கொன்று சினம் தணியாது, வென்று முரண் சாம்பாது, |
|
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது, |
|
பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை |
10 |
இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின், |
|
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி, |
|
தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ, |
|
மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண் |
|
நீ வந்ததனினும், இனிது ஆகின்றே |
15 |
தூவல் கள்ளின் துனை தேர், எந்தை |
|
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும் |
|
யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள், |
|
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன், |
|
யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு, |
20 |
இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர் |
|
நீடலர் ஆகி வருவர், வல்லென; |
|
கங்குல் உயவுத் துணை ஆகிய |
|
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே! |
|
இரவுக்குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் |
|
உரை |
|
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த |
|
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய |
|
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும், |
|
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே |
5 |
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை |
|
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு, |
|
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன் |
|
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய், |
|
கவலை கரக்கும் காடு அகல் அத்தம், |
10 |
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென, |
|
வைகு நிலை மதியம் போல, பையென, |
|
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த |
|
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா, |
|
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண் |
15 |
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப, |
|
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி, |
|
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு, |
|
அறல் மருள் கூந்தலின் மறையினள்,'' திறல் மாண்டு |
|
திருந்துகமாதோ, நும் செலவு'' என வெய்து உயிரா, |
20 |
பருவரல் எவ்வமொடு அழிந்த |
|
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே. |
|
இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகனார் இளங்கீரனார் |
|
உரை |
|
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் |
|
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார், |
|
பறி கொள் கொள்ளையர், மறுக உக்க |
|
மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை, |
5 |
எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர், |
|
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல் |
|
செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி, |
|
''செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை'' எனச் |
|
சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து, |
10 |
தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது, |
|
நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப் |
|
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால், |
|
சேணின் வருநர் போலப் பேணா, |
|
இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின், |
15 |
வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ, |
|
''துறையும் மான்றன்று பொழுதே; சுறவும் |
|
ஓதம் மல்கலின், மாறு ஆயினவே; |
|
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்'' என, |
|
எமர் குறை கூறத் தங்கி, ஏமுற, |
20 |
இளையரும் புரவியும் இன்புற, நீயும் |
|
இல் உறை நல் விருந்து அயர்தல் |
|
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே. |
|
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார் மணி மிடை பவளம் முற்றும்நித்திலக் கோவை |
|
உரை |
|