|
|
''வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி, |
|
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல் |
|
சிறு நனி ஆன்றிகம்'' என்றி தோழி! |
|
நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம் |
5 |
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு, |
|
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன |
|
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து, |
|
ஊர் இஃது என்னாஅர், தீது இல் வாழ்க்கை, |
|
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி, |
10 |
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்வர, |
|
குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி |
|
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ, |
|
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக் |
|
களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை, |
15 |
வண்ண மார்பின் வன முலைத் துயல்வர, |
|
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக் |
|
குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப, |
|
கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும் |
|
தேரை ஒலியின் மாண, சீர் அமைத்து, |
20 |
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு |
|
பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென, |
|
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர், |
|
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த |
|
புன் தலை மன்றம் காணின், வழி நாள், |
25 |
அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்; |
|
அதுவே மருவினம், மாலை; அதனால், |
|
காதலர் செய்த காதல் |
|
நீடு இன்று மறத்தல் கூடுமோ, மற்றே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - அதியன் விண்ணத்தனார் |
|
உரை |
|
சிலம்பில் போகிய செம் முக வாழை |
|
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும், |
|
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் |
|
நல் வரை நாடனொடு அருவி ஆடியும், |
5 |
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும், |
|
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் |
|
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் |
|
அரிய போலும் காதல் அம் தோழி! |
|
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத |
10 |
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல், |
|
கிளி பட விளைந்தமை அறிந்தும்,'' செல்க'' என, |
|
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச் |
|
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை, |
|
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு, |
15 |
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே. |
|
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
| உரை |
|
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து, |
|
பேஎய் கண்ட கனவின், பல் மாண் |
|
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல், |
|
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன் |
5 |
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை |
|
மா இருங் கொல்லி உச்சித் தாஅய், |
|
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர் |
|
புலம் கந்தாக இரவலர் செலினே, |
|
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் |
10 |
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் |
|
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, |
|
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு |
|
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப் |
|
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு, |
15 |
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்! |
|
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன் |
|
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர் |
|
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து, |
|
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர் |
20 |
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார் |
| உரை |
|
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை, |
|
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல், |
|
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு |
|
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று, |
5 |
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, |
|
செய்து விட்டன்ன செந் நில மருங்கில், |
|
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை, |
|
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு, |
10 |
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, |
|
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ, |
|
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல் |
|
மணி மிடை பவளம் போல, அணி மிகக் |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
15 |
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, |
|
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை, |
|
''ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை |
|
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும் |
|
அறவர்அல்லர், நம் அருளாதோர்'' என, |
20 |
நம் நோய் தன்வயின் அறியாள், |
|
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார் |
| உரை |
|
பகலினும் அகலாதாகி, யாமம் |
|
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய, |
|
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு |
|
பனி மீக்கூரும் பைதல் பானாள், |
5 |
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை, |
|
பருகுவன்ன காதலொடு திருகி, |
|
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து, |
|
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ; |
|
அருளிலாளர் பொருள்வயின் அகல, |
10 |
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து |
|
யான் எவன் உளெனோ தோழி! தானே |
|
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய், |
|
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய, |
|
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக் |
15 |
கனை எரி பிறப்ப ஊதும் |
|
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே? |
|
பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் |
| உரை |
|
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ! |
|
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய |
|
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ |
|
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட, |
5 |
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் |
|
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து, |
|
பழன யாமை பசு வெயில் கொள்ளும் |
|
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர! |
|
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட |
10 |
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி |
|
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த |
|
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி, |
|
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு |
|
ஊடினள் சிறு துனி செய்து எம் |
15 |
மணல் மலி மறுகின் இறந்திசினோளே. |
|
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் |
| உரை |
|
''சிறு நுதல் பசந்து, பெருந் தோள் சாஅய், |
|
அகல் எழில் அல்குல் அவ் வரி வாட, |
|
பகலும் கங்குலும் மயங்கி, பையென, |
|
பெயல் உறு மலரின் கண் பனி வார, |
5 |
ஈங்கு இவள் உழக்கும்'' என்னாது, வினை நயந்து, |
|
நீங்கல் ஒல்லுமோ ஐய! வேங்கை |
|
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை |
|
மையல் அம் கடாஅம் செருக்கி, மதம் சிறந்து, |
|
இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை, |
10 |
பெருங் கை எண்கினம் குரும்பி தேரும் |
|
புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில், |
|
கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து |
|
உடன் உறை பழமையின் துறத்தல்செல்லாது, |
|
இரும் புறாப் பெடையொடு பயிரும் |
15 |
பெருங் கல் வைப்பின் மலைமுதல் ஆறே? |
|
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் |
| உரை |
|
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் |
|
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல் |
|
ஆலி அழி துளி பொழிந்த வைகறை, |
|
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின், |
5 |
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ, |
|
கலம் சுடு புகையின் தோன்றும் நாட! |
|
இரவின் வருதல் எவனோ? பகல் வரின், |
|
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை |
|
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து, |
10 |
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி, |
|
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத் |
|
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய |
|
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட, |
|
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய |
15 |
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை, |
|
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே. |
|
இரவு வருவானைப் ''பகல் வருக'' என்றது. - பிசிராந்தையார் |
| உரை |
|
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி, |
|
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர், |
|
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென, |
|
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் |
5 |
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய், |
|
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை, |
|
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து |
|
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் |
|
காடு மிக நெடிய என்னார், கோடியர் |
10 |
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன் |
|
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு, |
|
நாம் செலின், எவனோ தோழி! காம்பின் |
|
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக் |
|
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது, |
15 |
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம் |
|
தண் பெரு படாஅர் வெரூஉம் |
|
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் |
| உரை |
|
கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற |
|
நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும், |
|
தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து, |
|
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின், |
5 |
குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு |
|
இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும் |
|
தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட, |
|
காதலின் வளர்ந்த மாதர்ஆகலின், |
|
பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால், |
10 |
குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப! |
|
இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப் |
|
பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக் |
|
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க |
|
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த |
15 |
இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து |
|
உரும் இசைப் புணரி உடைதரும் |
|
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே. |
|
தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது. - நக்கீரனார் |
|
உரை |
|