|
|
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று, |
|
அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை, |
|
எழுதியன்ன திண் நிலைக் கதவம் |
|
கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென, |
5 |
திறந்து நப் புணர்ந்து, ''நும்மின் சிறந்தோர் |
|
இம்மை உலகத்து இல்'' எனப் பல் நாள் |
|
பொம்மல் ஓதி நீவிய காதலொடு, |
|
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப, |
|
வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர் |
10 |
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி |
|
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் |
|
புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ் |
|
சுரம் இறந்து ஏகினும், நீடலர் |
|
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே. |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் |
|
உரை |
|
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி, |
|
இரவின் வரூஉம் இடும்பை நீங்க, |
|
வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து, |
|
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம், |
5 |
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது, |
|
அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப் |
|
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக, |
|
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி! |
|
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து, |
10 |
இன் இசை முரசின் இரங்கி, ஒன்னார் |
|
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை, |
|
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த |
|
அடு புகழ் எஃகம் போல, |
|
கொடி பட மின்னிப் பாயின்றால், மழையே! |
|
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது; தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -மதுரை மருதன் இளநாகனார் |
| உரை |
|
''இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!'' என |
|
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம் |
|
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும், |
|
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க, |
5 |
ஐய ஆக வெய்ய உயிரா, |
|
இரவும் எல்லையும் படர் அட வருந்தி, |
|
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப, |
|
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய, |
|
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து, |
10 |
வருவர் வாழி, தோழி! பெரிய |
|
நிதியம் சொரிந்த நீவி போலப் |
|
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை, |
|
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர் |
|
வசி படு புண்ணின் குருதி மாந்தி, |
15 |
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல, |
|
இல் வழிப் படூஉம் காக்கைக் |
|
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
| உரை |
|
''நீலத்து அன்ன நீர் பொதி கருவின், |
|
மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின் |
|
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப, |
|
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப, |
5 |
மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின் |
|
திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள, |
|
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை, |
|
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி |
|
கல்லெனக் கறங்கு மணி இயம்ப, வல்லோன் |
10 |
வாச் செல வணக்கிய தாப் பரி நெடுந் தேர் |
|
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப, தீம் தொடைப் |
|
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப, |
|
இந் நிலை வாரார்ஆயின், தம் நிலை |
|
எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது'' என, |
15 |
கடவுட் கற்பின் மடவோள் கூற, |
|
செய் வினை அழிந்த மையல் நெஞ்சின் |
|
துனி கொள் பருவரல் தீர, வந்தோய்! |
|
இனிது செய்தனையால்; வாழ்க, நின் கண்ணி! |
|
வேலி சுற்றிய வால் வீ முல்லைப் |
20 |
பெருந் தார் கமழும், விருந்து ஒலி, கதுப்பின் |
|
இன் நகை இளையோள் கவவ, |
|
மன்னுக, பெரும! நின் மலர்ந்த மார்பே! |
|
வினை முற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் |
| உரை |
|
''கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும் |
|
சூழி மென் முகம் செப்புடன் எதிரின; |
|
பெண் துணை சான்றனள், இவள்'' எனப் பல் மாண் |
|
கண் துணை ஆக நோக்கி, நெருநையும், |
5 |
அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும், |
|
அறியாமையின் செறியேன், யானே; |
|
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் |
|
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள், |
|
சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி, |
10 |
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக் |
|
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய், |
|
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப, |
|
வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென, |
|
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி, |
15 |
சேக்குவள் கொல்லோதானே தேக்கின் |
|
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை, |
|
ஊன் புழுக்கு அயரும் முன்றில், |
|
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே. |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - குடவாயில் கீரத்தனார் |
| உரை |
|
''துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை, |
|
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு |
|
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து, |
|
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட, |
5 |
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து, |
|
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப் |
|
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் |
|
தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள், |
|
ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர, |
10 |
பரத்தைமை தாங்கலோ இலென்'' என வறிது நீ |
|
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை! |
|
அது புலந்து உறைதல் வல்லியோரே, |
|
செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து, |
|
தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி, |
15 |
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப, |
|
வைகுநர் ஆகுதல் அறிந்தும், |
|
அறியார் அம்ம, அஃது உடலுமோரே! |
|
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது. -ஓரம்போகியார் |
| உரை |
|
'' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, |
|
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி, |
|
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க, |
|
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று |
5 |
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் |
|
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன் |
|
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப, |
|
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி |
|
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல, |
10 |
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து |
|
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப, |
|
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி |
|
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும் |
|
ஆன் ஏமுற்ற காமர் வேனில், |
15 |
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் |
|
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப |
|
வருவேம்" என்ற பருவம் ஆண்டை |
|
இல்லைகொல்?'' என மெல்ல நோக்கி, |
|
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு |
20 |
உள்ளிய மருங்கின் உள்ளம் போல, |
|
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து |
|
என்னுழியதுகொல் தானே பல் நாள் |
|
அன்னையும் அறிவுற அணங்கி, |
|
நல் நுதல் பாஅய பசலை நோயே? |
|
தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார் |
| உரை |
|
கான மான் அதர் யானையும் வழங்கும்; |
|
வான மீமிசை உருமும் நனி உரறும்; |
|
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய; |
|
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி |
5 |
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம் |
|
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும், |
|
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட! |
|
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ |
|
இன்று தலையாக வாரல்; வரினே, |
10 |
ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய, |
|
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின் |
|
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை, |
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு |
|
|
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின் |
15 |
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே! |
|
இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது. - கபிலர் |
| உரை |
|
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை |
|
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி, |
|
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் |
|
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர் |
5 |
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை, |
|
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென |
|
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை, |
|
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய |
|
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை, |
10 |
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின் |
|
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள் |
|
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத் |
|
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள், |
|
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள், |
15 |
''செல்வேம்'' என்னும் நும் எதிர், |
|
''ஒழிவேம்'' என்னும் ஒண்மையோ இலளே! |
|
செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் |
| உரை |
|
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ, |
|
திமிலோன் தந்த கடுங் கண் வய மீன், |
|
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர், |
|
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும் |
5 |
கானல் அம் சிறுகுடி, பெரு நீர்ச் சேர்ப்ப! |
|
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் |
|
அலர் வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும், |
|
நெடுங் கழி துழைஇய குறுங் கால் அன்னம் |
|
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும், |
10 |
தடவு நிலைப் புன்னைத் தாது அணி, பெருந் துறை |
|
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் |
|
வண்டற் பாவை சிதைய வந்து, நீ |
|
தோள் புதிது உண்ட ஞான்றை, |
|
சூளும் பொய்யோ, கடல் அறி கரியே? |
|
பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் |
| உரை |
|