|
|
பசித்த யானைப் பழங்கண் அன்ன |
|
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி |
|
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, |
|
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு |
5 |
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது, |
|
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப் |
|
படு மணி இன நிரை உணீஇய, கோவலர் |
|
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல், |
|
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும் |
10 |
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர், |
|
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ? |
|
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு |
|
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ? |
|
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே! |
15 |
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ, |
|
யாய் அறிவுறுதல் அஞ்சி, |
|
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே. |
|
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் |
| உரை |
|
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு, |
|
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்; |
|
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப, |
|
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர, |
5 |
பாம்பு எறி கோலின் தமியை வைகி, |
|
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக் |
|
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின், |
|
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன் |
10 |
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில், |
|
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக் |
|
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல், |
|
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப |
|
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை, |
15 |
புகல் அரும், பொதியில் போலப் |
|
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே! |
|
அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் |
| உரை |
|
இம்மென் பேர் அலர், இவ் ஊர், நம்வயின் |
|
செய்வோர் ஏச் சொல் வாட, காதலர் |
|
வருவர் என்பது வாய்வதாக, |
|
ஐய, செய்ய, மதன் இல, சிறிய நின் |
5 |
அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத் |
|
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி, |
|
காணிய வம்மோ? கற்பு மேம்படுவி! |
|
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து, |
|
யானைச் செல் இனம் கடுப்ப, வானத்து |
10 |
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய், பாம்பின் |
|
பை பட இடிக்கும் கடுங் குரல் ஏற்றொடு |
|
ஆலி அழி துளி தலைஇக் |
|
கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே! |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பறநாட்டுப் பெருங்கொற்றனார் |
| உரை |
|
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத் |
|
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை |
|
தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த |
|
வளராப் பிள்ளைத் தூவி அன்ன, |
5 |
உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில் |
|
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும் |
|
துளி படு மொக்குள் துள்ளுவன சால, |
|
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய, |
|
வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய், |
10 |
சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த |
|
வண்டு உண் நறு வீ துமித்த நேமி |
|
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள், |
|
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக, |
|
செல்லும், நெடுந்தகை தேரே |
15 |
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே! |
|
வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர் மாசாத்தியார் |
| உரை |
|
அம்ம! வாழி, தோழி! காதலர், |
|
''வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர், |
|
நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த |
|
களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும் |
5 |
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது |
|
இவண் உறைபு எவனோ? அளியள்!'' என்று அருளி, |
|
''ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு கோள் |
|
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை, |
|
வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு, |
10 |
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம் |
|
வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய, |
|
தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல், |
|
ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்; |
|
சில் நாள் ஆன்றனைஆக'' என, பல் நாள், |
15 |
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ, |
|
எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது, |
|
நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை, |
|
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை, |
|
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் |
20 |
சோலை அத்தம் மாலைப் போகி, |
|
ஒழியச் சென்றோர்மன்ற; |
|
பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே? |
|
கொண்டு நீங்கக் கருதி ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் |
| உரை |
|
ஊரல் அவ் வாய் உருத்த தித்தி, |
|
பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு நுதல், |
|
நல்லள் அம்ம, குறுமகள் செல்வர் |
|
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், |
5 |
நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில், |
|
இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன |
|
நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து, |
|
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல் |
|
இழை அணி யானைச் சோழர் மறவன் |
10 |
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை, |
|
புனல் மலி புதவின், போஒர் கிழவோன், |
|
பழையன் ஓக்கிய வேல் போல், |
|
பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே! |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர் |
| உரை |
|
''இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும், |
|
நன்பகல் அமையமும் இரவும் போல, |
|
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து, |
|
உள'' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம் |
5 |
இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப, |
|
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே! |
|
நீ செல வலித்தனைஆயின், யாவதும் |
|
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர் |
|
ஆவி அவ் வரி நீர் என நசைஇ, |
10 |
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை, |
|
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் |
|
செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின் |
|
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின், |
|
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த, |
15 |
மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை |
|
பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச் |
|
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர், |
|
கோல் கழிபு இரங்கும் அதர, |
|
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே? |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது. - மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் |
| உரை |
|
வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர் |
|
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு, |
|
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து, |
|
அரவின் பைந் தலை இடறி, பானாள் |
5 |
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி, |
|
துனி கண் அகல அளைஇ, கங்குலின் |
|
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல் |
|
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின், |
|
இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம் |
10 |
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு |
|
அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி |
|
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று, |
|
கழை தின் யாக்கை விழை களிறு தைவர, |
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் |
15 |
சாரல் நாடன் சாயல் மார்பே! |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் |
|
உரை |
|
பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து, |
|
ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து, |
|
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர் |
|
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர், |
5 |
படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர் |
|
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப் |
|
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து, |
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து, |
|
|
ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு, |
10 |
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருை |
|
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட |
|
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில், |
|
புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை, |
|
பனி படு சிமையப் பல் மலை இறந்தே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - உறையூர் முதுகூத்தனார் |
| உரை |
|
கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும், |
|
வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும், |
|
இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும், |
|
தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர் |
5 |
அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு |
|
செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்! |
|
செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று, |
|
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம் |
|
எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும், |
10 |
காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ? |
|
உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே; |
|
குப்பை வெண் மணற் குவவுமிசையானும், |
|
எக்கர்த் தாழை மடல்வயினானும், |
|
ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு, |
15 |
சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த |
|
கடுஞ் செலல் கொடுந் திமில் போல, |
|
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே! |
|
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார் |
| உரை |
|