|
|
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை, |
|
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ, |
|
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின் |
|
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் |
5 |
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர் |
|
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து, |
|
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும் |
|
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய, |
|
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும், |
10 |
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப் |
|
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி, |
|
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன், |
|
வேளிரொடு பொரீஇய, கழித்த |
|
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே! |
|
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் |
|
உரை |
|
முளை வளர் முதல மூங்கில் முருக்கி, |
|
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை, |
|
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய, |
|
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக் |
5 |
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ, |
|
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி, |
|
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால் |
|
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து, |
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் |
10 |
நின் புரை தக்க சாயலன் என, நீ |
|
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் |
|
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு |
|
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் |
|
வண்டு இடைப் படாஅ முயக்கமும், |
15 |
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. -கபிலர் |
| உரை |
|
''யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் |
|
ஆக மேனி அம் பசப்பு ஊர, |
|
அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின் |
|
பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு |
5 |
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின் |
|
எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள் |
|
வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி, |
|
நீடலர் வாழி, தோழி! கோடையில், |
|
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது, |
10 |
தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய, |
|
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து, |
|
யானைப் பெரு நிரை வானம் பயிரும் |
|
மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து, |
|
நாள் இடைப்படாமை வருவர், நமர்'' என, |
15 |
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா |
|
நின் வாய் இன் மொழி நல் வாயாக |
|
வருவர் ஆயினோ நன்றே; வாராது, |
|
அவணர் காதலர்ஆயினும், இவண் நம் |
|
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல |
20 |
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி, |
|
மறுதரல் உள்ளத்தர்எனினும், |
|
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே. |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கல்லாடனார் |
| உரை |
|
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய |
|
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க, |
|
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக! |
|
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு |
5 |
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து, |
|
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ, |
|
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் |
|
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி, |
|
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின் |
10 |
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப, |
|
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக் |
|
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது, |
|
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து, |
|
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப, |
15 |
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப் |
|
பொலிவன அமர்த்த உண்கண், |
|
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் கூத்தனார் |
| உரை |
|
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் |
|
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல் |
|
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல் |
|
யானும் அறிவென்மன்னே; யானை தன் |
5 |
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து, |
|
இன்னா வேனில் இன் துணை ஆர, |
|
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட, |
|
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம் |
|
அரிய அல்லமன், நமக்கே விரி தார் |
10 |
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன் |
|
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ, |
|
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால், |
|
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த |
|
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின் |
15 |
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு, |
|
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய, |
|
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின், |
|
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ |
|
வார் உறு கவரியின் வண்டு உண விரிய, |
20 |
முத்தின் அன்ன வெள் வீ தாஅய், |
|
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி |
|
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப் |
|
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய் |
|
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று |
25 |
அமிழ்தம் ஊறும் செவ் வாய், |
|
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே! |
|
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார் |
| உரை |
|
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் |
|
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த |
|
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய, |
|
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் |
5 |
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின், |
|
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர் |
|
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின் |
|
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க் |
|
காஞ்சி நீழல் குரவை அயரும் |
10 |
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் |
|
தேர் தர வந்த நேர் இழை மகளிர் |
|
ஏசுப என்ப, என் நலனே; அதுவே |
|
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் |
|
கொல் களிற்று யானை நல்கல்மாறே; |
15 |
தாமும் பிறரும் உளர்போல் சேறல் |
|
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின், |
|
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச் |
|
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, |
|
என்னொடு திரியானாயின், வென் வேல் |
20 |
மாரி அம்பின் மழைத் தோற் சோழர் |
|
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை, |
|
ஆரியர் படையின் உடைக, என் |
|
நேர் இறை முன்கை வீங்கிய வளையே! |
|
நயப் புப்பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பாவைக் கொட்டிலார் |
| உரை |
|
''சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த |
|
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி, |
|
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய, |
|
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின் |
5 |
அவணது ஆக, பொருள்'' என்று, உமணர் |
|
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை, |
|
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப் |
|
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி, |
|
''உண்ணா மருங்குல் இன்னோன் கையது |
10 |
பொன் ஆகுதலும் உண்டு'' என, கொன்னே |
|
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர், |
|
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி, |
|
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர, |
|
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ, |
15 |
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை, |
|
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை, |
|
கள்ளி நீழல் கதறுபு வதிய, |
|
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை, |
|
எமியம் கழிதந்தோயே பனி இருள் |
20 |
பெருங் கலி வானம் தலைஇய |
|
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே! |
|
முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
| உரை |
|
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் |
|
மறம் கெழு தானை அரசருள்ளும், |
|
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர் |
|
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள், |
5 |
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன் |
|
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன், |
|
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல், |
|
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின், |
|
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற |
10 |
முயங்கல் இயையாதுஆயினும், என்றும், |
|
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக, |
|
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் |
|
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன் |
|
அகல் இருங் கானத்துக் கொல்லி போல, |
15 |
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின் |
|
அறாஅலியரோ, தூதே பொறாஅர் |
|
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள், |
|
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன், |
|
தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து, |
20 |
வழங்கல் ஆனாப் பெருந் துறை |
|
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே! |
|
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார் |
| உரை |
|
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர் |
|
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில், |
|
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப் |
|
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப, |
5 |
அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட |
|
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து |
|
ஆண்மை வாங்க, காமம் தட்ப, |
|
கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய, |
|
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி, |
10 |
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்; |
|
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு |
|
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர் |
|
வாழ்தல் அன்ன காதல், |
|
சாதல் அன்ன பிரிவு அரியோளே! |
|
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - நரை முடி நெட்டையார் |
|
உரை |
|
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து, |
|
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி, |
|
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து, |
|
வலவன் வண் தேர் இயக்க, நீயும் |
5 |
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம |
|
''செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன் |
|
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள் |
|
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென, |
|
கழியே ஓதம் மல்கின்று; வழியே |
10 |
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்; |
|
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது'' என, |
|
நின் திறத்து அவலம் வீட, இன்று இவண் |
|
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப! |
|
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத் |
15 |
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே; |
|
வடவர் தந்த வான் கேழ் வட்டம் |
|
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய |
|
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில் |
|
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர் |
20 |
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், |
|
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை |
|
தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு, |
|
முன்றில் தாழைத் தூங்கும் |
|
தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே? |
|
பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர் |
| உரை |
|