|
|
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை, |
|
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர் |
|
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி, |
|
குறு நெடுந் துணைய மறி புடை ஆட, |
5 |
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை |
|
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, |
|
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது, |
|
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும், |
|
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம், |
10 |
எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து, |
|
என்னஆம் கொல் தாமே ''தெண் நீர் |
|
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்'' என நசைஇ |
|
வீ தேர் பறவை விழையும் |
|
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே? |
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார் |
|
உரை |
|
அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப, |
|
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை, |
|
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண், |
|
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த |
5 |
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து, |
|
வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய், |
|
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல், |
|
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி, |
|
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி |
10 |
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் |
|
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும், |
|
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா, |
|
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி |
|
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர் |
15 |
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து, |
|
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே. |
|
அல்லகுறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் |
|
உரை |
|
முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர் எழுந்து, |
|
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து, |
|
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி, |
|
செது காழ் சாய்ந்த முது காற் பொதியில், |
5 |
அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று, |
|
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர, |
|
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப, |
|
தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு, |
|
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்; |
10 |
இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை, |
|
கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி, |
|
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா, |
|
ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து, |
|
பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி |
15 |
மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல் |
|
அண்ணல் யானை அடு போர் வேந்தர் |
|
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில் |
|
ஓர் எயில் மன்னன் போல, |
|
துயில் துறந்தனள்கொல்? அளியள் தானே! |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் |
|
உரை |
|
மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி, |
|
மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு, |
|
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ, |
|
போழ்ந்த போலப் பல உடன் மின்னி, |
5 |
தாழ்ந்த போல நனி அணி வந்து, |
|
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி, |
|
இடியும் முழக்கும் இன்றி, பாணர் |
|
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன |
|
இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல |
10 |
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை, |
|
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில், |
|
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி, |
|
மணி மண்டு பவளம் போல, காயா |
|
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய, |
15 |
கார் கவின் கொண்ட காமர் காலை, |
|
செல்க, தேரே நல் வலம் பெறுந! |
|
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின், |
|
திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே! |
|
பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார் |
| உரை |
|
''சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின் |
|
இனைதல் ஆனாய்'' என்றிசின் இகுளை! |
|
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர் |
|
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும் |
5 |
கல்லா இளையர் கலித்த கவலை, |
|
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும் |
|
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல், |
|
அத்த எருவைச் சேவல் சேர்ந்த |
|
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல், |
10 |
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன் |
|
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி |
|
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார், |
|
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி, |
|
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி, |
15 |
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும், |
|
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர் |
|
நோய் இலர் பெயர்தல் அறியின், |
|
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - இடையன் சேந்தங் கொற்றனார் |
| உரை |
|
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன் |
|
கல்லா யானை கடி புனல் கற்றென, |
|
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை, |
|
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, |
5 |
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, |
|
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை |
|
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, |
|
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று, |
|
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப, |
10 |
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, |
|
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ! |
|
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின் |
|
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின் |
|
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி, |
15 |
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய, |
|
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக் |
|
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன் |
|
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே! |
|
காதற்பரத்தை புலந்து சொல்லியது. - பரணர் |
| உரை |
|
கோடை நீடலின், வாடு புலத்து உக்க |
|
சிறு புல் உணவு, நெறி பட மறுகி, |
|
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த |
|
வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர் |
5 |
பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர, |
|
கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து, |
|
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி, |
|
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய, |
|
வரி நிறச் சிதலை அரித்தலின், புல்லென்று, |
10 |
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் |
|
இன்னா ஒரு சிறைத் தங்கி, இன் நகைச் |
|
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி, |
|
வம்பலர் ஆகியும் கழிப மன்ற |
|
நசை தர வந்தோர் இரந்தவை |
15 |
இசை படப் பெய்தல் ஆற்றுவோரே! |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் |
| உரை |
|
''நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின், |
|
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள, |
|
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை |
|
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர, |
5 |
காமர் பீலி ஆய் மயில் தோகை |
|
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக் |
|
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல |
|
ஆடு கள வயிரின் இனிய ஆலி, |
|
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, |
10 |
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் |
|
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும், |
|
உடன்ற அன்னை அமரா நோக்கமும், |
|
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச் |
|
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு |
15 |
குட கடல் சேரும் படர் கூர் மாலையும், |
|
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, |
|
யாங்ஙனம் வாழ்தி?'' என்றி தோழி! |
|
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர் |
|
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு |
20 |
அள் இலைப் பலவின் கனி கவர் கைய |
கல்லா மந்தி கடுவனோடு உகளும் |
|
|
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து, |
|
பாடு இன் அருவி சூடி, |
|
வான் தோய் சிமையம் தோன்றலானே. |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -காவட்டனார் |
| உரை |
|
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய, |
|
தெருளாமையின் தீதொடு கெழீஇ, |
|
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து, |
|
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே! |
5 |
நினையினைஆயின், எனவ கேண்மதி! |
|
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை, |
|
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி, |
|
நனவின் இயன்றதுஆயினும், கங்குல் |
|
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால், |
10 |
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி, |
|
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி |
|
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப, |
|
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு, |
|
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி, |
15 |
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின் |
|
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின் |
|
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி, |
|
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு |
|
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு, |
20 |
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல், |
|
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள் |
|
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர, |
|
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று, |
|
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப் |
25 |
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த |
|
நிரம்பா நீள் இடைத் தூங்கி, |
|
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே? |
|
முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
| உரை |
|
தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, ''நும் |
|
ஊர் யாது?'' என்ன, நணி நணி ஒதுங்கி, |
|
முன் நாள் போகிய துறைவன், நெருநை, |
|
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த |
5 |
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன், |
|
தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம் |
|
அலவற் காட்டி, ''நற்பாற்று இது'' என, |
|
நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே; |
|
உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்; |
10 |
நாம் எதிர் கொள்ளாம்ஆயின், தான் அது |
|
துணிகுவன் போலாம்; நாணு மிக உடையன்; |
|
வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ? |
|
அம்ம, தோழி! கூறுமதி நீயே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மதுரை மருதன் இளநாகனார் |
| உரை |
|