|
|
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல் |
|
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப, |
|
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும் |
|
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப, |
5 |
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் |
|
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை, |
|
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர் |
|
வில் சினம் தணிந்த வெருவரு கவலை, |
|
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை |
10 |
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி, |
|
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து, |
|
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும் |
|
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார் |
|
முனை அரண் கடந்த வினை வல் தானை, |
15 |
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய |
|
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல, |
|
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து, |
|
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண, |
|
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை |
20 |
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன் |
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே! |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை இளங்கௌசிகனார் |
| உரை |
|
''பிறர் உறு விழுமம் பிறரும் நோப; |
|
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்; |
|
கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி, |
|
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் |
5 |
காடு கெழு நெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப, |
|
அணங்கு அயர் வியன் களம் பொலிய, பையத் |
|
தூங்குதல் புரிந்தனர், நமர்'' என, ஆங்கு அவற்கு |
|
அறியக் கூறல் வேண்டும் தோழி! |
|
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி |
10 |
செழுங் கோட் பலவின் பழம் புணையாக, |
|
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் |
|
வறன் உறல் அறியாச் சோலை, |
|
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே! |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - கபிலர் |
| உரை |
|
தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள், |
|
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ, |
|
காடும் கானமும் அவனொடு துணிந்து, |
|
நாடும் தேயமும் நனி பல இறந்த |
5 |
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என, |
|
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும், |
|
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த |
|
அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய, |
|
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக் |
10 |
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு, |
|
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி, |
|
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும், |
|
ஆர நீர் ஊட்டிப் புரப்போர் |
|
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே! |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் |
| உரை |
|
''இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென, |
|
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும் |
|
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த |
|
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய், |
5 |
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில், |
|
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண், |
|
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ, |
|
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே; |
|
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ? |
10 |
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ? |
|
உரைமதி வாழியோ, வலவ!'' என, தன் |
|
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி, |
|
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை; |
|
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே. |
|
வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, உழையர் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தியார் |
| உரை |
|
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல் |
|
என் ஓரன்ன தாயரும், காண, |
|
|
|
காவிரிப் படப்பை உறந்தை அன்ன |
5 |
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர, |
|
நல் மாண் விழவில் தகரம் மண்ணி, |
|
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு |
|
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன், |
|
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் |
10 |
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ, |
|
வளையுடை முன்கை அளைஇ, கிளைய |
|
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை |
|
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல் |
|
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும், |
15 |
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி, |
|
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச் |
|
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ, |
|
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே. |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் |
| உரை |
|
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து |
|
வாளை நாள் இரை தேரும் ஊர! |
|
நாணினென், பெரும! யானே பாணன் |
|
மல் அடு மார்பின் வலி உற வருந்தி, |
5 |
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் |
|
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த |
|
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க் |
|
கணையன் நாணியாங்கு மறையினள் |
|
மெல்ல வந்து, நல்ல கூறி, |
10 |
''மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின் |
|
சேரியேனே; அயல் இலாட்டியேன்; |
|
நுங்கை ஆகுவென் நினக்கு'' என, தன் கைத் |
|
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர, |
|
நுதலும் கூந்தலும் நீவி, |
15 |
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே. |
|
தோழி வாயில் மறுத்தது; தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர் |
| உரை |
|
திருந்துஇழை நெகிழ்ந்து, பெருந் தோள் சாஅய், |
|
அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர்! |
|
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ |
|
பூக் கண் பறைந்த புன் தலைச் சிறாஅரொடு |
5 |
அவ் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப் |
|
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய |
|
பூந் துகில் இமைக்கும், பொலன் காழ் அல்குல், |
|
அவ் வரி சிதைய நோக்கி, வெவ் வினைப் |
|
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ, |
10 |
வரிப் புற இதலின் மணிக் கட் பேடை |
|
நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முட் |
|
செங் கால், சேவல் பயிரும் ஆங்கண், |
|
வில் ஈண்டு அருஞ் சமம் ததைய நூறி, |
|
நல் இசை நிறுத்த நாணுடை மறவர் |
15 |
நிரை நிலை நடுகல் பொருந்தி, இமையாது, |
|
இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி |
|
சிறிய தெற்றுவதுஆயின், ''பெரிய |
|
ஓடை யானை உயர்ந்தோர்ஆயினும், |
|
நின்றாங்குப் பெயரும் கானம் |
20 |
சென்றோர்மன்'' என இருக்கிற்போர்க்கே. |
|
தலைமகளது குறிப்பு அறிந்து, தோழி தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் |
| உரை |
|
அம்ம வாழி, தோழி நம் மலை |
|
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின், |
|
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத |
|
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல் |
5 |
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி, |
|
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ |
|
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து, |
|
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி |
|
இன் இசை ஓரா இருந்தனமாக, |
10 |
''மை ஈர் ஓதி மட நல்லீரே! |
|
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து, |
|
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் |
|
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?'' என, |
|
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட, |
15 |
சொல்லிக் கழிந்த வல் விற் காளை |
|
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து, |
|
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள், |
|
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, ''வெறி'' என, |
|
அன்னை தந்த முது வாய் வேலன், |
20 |
''எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்; |
|
தணி மருந்து அறிவல்'' என்னும்ஆயின், |
|
வினவின் எவனோ மற்றே ''கனல் சின |
|
மையல் வேழ மெய் உளம்போக, |
|
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு |
25 |
காட்டு மான் அடி வழி ஒற்றி, |
|
வேட்டம் செல்லுமோ, நும் இறை?'' எனவே? |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார் |
| உரை |
|
அறியாய் வாழி, தோழி! நெறி குரல் |
|
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து, |
|
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும், |
|
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட |
5 |
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும், |
|
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு |
|
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும், |
|
எற் புறந்தந்து, நிற் பாராட்டி, |
|
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார், |
10 |
மனைவயின் இருப்பவர்மன்னே துனைதந்து, |
|
இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர் |
|
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும் |
|
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர் |
|
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட, |
15 |
நல் இசை தம் வயின் நிறுமார், வல் வேல் |
|
வான வரம்பன் நல் நாட்டு உம்பர், |
|
வேனில் நீடிய வெங் கடற்று அடை முதல், |
|
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற, |
|
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும் |
20 |
பெருங் களிறு தொலைச்சிய இருங் கேழ் ஏற்றை |
|
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி, |
|
வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப, |
|
படு மழை உருமின் முழங்கும் |
|
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரனார் |
| உரை |
|
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி, |
|
அதர் படு பூழிய சேண் புலம் படரும் |
|
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக் |
|
கண நிரை வாழ்க்கைதான் நன்றுகொல்லோ? |
5 |
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள, |
|
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த |
|
பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி, |
|
'' ''''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்! |
|
கொள்ளீரோ'''' எனச் சேரிதொறும் நுவலும், |
10 |
அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின் |
|
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்'' என, |
|
சிறிய விலங்கினமாக, பெரிய தன் |
|
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி, |
|
''யாரீரோ, எம் விலங்கியீஇர்?'' என, |
15 |
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற |
|
சில் நிரை வால் வளைப் பொலிந்த |
|
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே! |
|
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - அம்மூவனார் |
| உரை |
|