|
|
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன |
|
வரி மென் முகைய நுண் கொடி அதிரல் |
|
மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர் |
|
விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர் |
5 |
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி, |
|
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் |
|
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப் |
|
பழ அணி உள்ளப்படுமால் தோழி! |
|
இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி |
10 |
படாஅவாகும், எம் கண்ணே கடாஅ |
|
வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன் |
|
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை |
|
குன்று புகு பாம்பின் தோன்றும், |
|
என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே! |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் | | உரை |
|
தாழ் பெருந் தடக் கை தலைஇய, கானத்து, |
|
வீழ் பிடி கெடுத்த, வெண் கோட்டு யானை |
|
உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன, |
|
பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ, |
5 |
பின்னிலை முனியானாகி, ''நன்றும், |
|
தாது செய் பாவை அன்ன தையல், |
|
மாதர் மெல் இயல், மட நல்லோள்வயின் |
|
தீது இன்றாக, நீ புணை புகுக!'' என |
|
என்னும் தண்டும்ஆயின், மற்று அவன் |
10 |
அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே |
|
ஒல் இனி, வாழி, தோழி! கல்லெனக் |
|
கண மழை பொழிந்த கான் படி இரவில், |
|
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட, |
|
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த |
15 |
வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென, |
|
மறப் புலி உரற, வாரணம் கதற, |
|
நனவுறு கட்சியின் நல் மயில் ஆல, |
|
மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன் |
|
பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று, |
20 |
உரிதுஅல் பண்பின் பிரியுனன்ஆயின், |
|
வினை தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன் |
|
முனைகொல் தானையொடு முன் வந்து இறுப்ப, |
|
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை |
|
ஆற்றாமையின், பிடித்த வேல் வலித் |
25 |
தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற, |
|
விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின் |
|
கான் அமர் நன்னன் போல, |
|
யான் ஆகுவல், நின் நலம் தருவேனே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மோசிகீரனார் | | உரை |
|
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி, |
|
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து |
|
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய, |
|
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக் |
5 |
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி, |
|
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை |
|
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ, |
|
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர் |
|
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப, |
10 |
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் |
|
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி, |
|
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை, |
|
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா, |
|
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி, |
15 |
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின், |
|
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம், |
|
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும் |
|
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி |
|
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர், |
20 |
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர் |
|
நீடலர் வாழி, தோழி! தோடு கொள் |
|
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப, |
|
தகரம் மண்ணிய தண் நறு முச்சி, |
|
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ் |
25 |
வேனில் அதிரல் வேய்ந்த நின் |
|
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | | உரை |
|
களவும் புளித்தன; விளவும் பழுநின; |
|
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர், |
|
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு, |
|
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து |
5 |
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு |
|
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக, |
|
இளையர் அருந்த, பின்றை, நீயும் |
|
இடு முள் வேலி முடக் கால் பந்தர், |
|
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில், |
10 |
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர, |
|
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள், |
|
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ |
|
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் |
|
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல் |
15 |
மன்ற இரும் புதல் ஒளிக்கும் |
|
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே. |
|
இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார் | | உரை |
|
தண் கயம் பயந்த வண் காற் குவளை |
|
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன, |
|
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண் |
|
பனி வார் எவ்வம் தீர, இனி வரின், |
5 |
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர் |
|
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை |
|
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின், |
|
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை, |
|
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி, |
10 |
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு, |
|
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல் |
|
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும், |
|
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து, |
|
ஆடு கழை இரு வெதிர் நரலும் |
15 |
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே! |
|
பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | | உரை |
|
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித் தேர்ப் |
|
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென, |
|
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண், |
|
''அஞ்சல்'' என்ற ஆஅய் எயினன் |
5 |
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி, |
|
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது; |
|
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி, |
|
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து, |
|
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின் |
10 |
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே; |
|
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி, |
|
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய, |
|
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ, |
|
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின் |
15 |
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ, |
|
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத் |
|
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து, |
|
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன் |
|
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே! |
|
காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது. - பரணர் | | உரை |
|
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட, |
|
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப, |
|
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், |
|
மணன் இடையாகக் கொள்ளான், ''கல் பகக் |
5 |
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் |
|
எளியவாக, ஏந்து கொடி பரந்த |
|
பொறி வரி அல்குல் மாஅயோட்கு'' எனத் |
|
தணிந்த பருவம் செல்லான், படர்தரத் |
|
துணிந்தோன்மன்ற துனை வெங் காளை |
10 |
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி, |
|
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப் |
|
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து, |
|
கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும் |
|
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங் கோட்டுக் |
15 |
கோடை வெவ் வளிக்கு உலமரும் |
|
புல் இலை வெதிர நெல் விளை காடே. |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | | உரை |
|
''இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர, |
|
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ, |
|
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை |
|
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய |
5 |
பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து, |
|
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான், |
|
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று, |
|
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க, |
|
நன்று புறமாறி அகறல், யாழ நின் |
10 |
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ? |
|
கரை பொரு நீத்தம்! உரை'' எனக் கழறி, |
|
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப் |
|
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி, |
|
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி, |
15 |
நயன் அறத் துறத்தல் வல்லியோரே, |
|
நொதுமலாளர்; அது கண்ணோடாது, |
|
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ, |
|
மாரி புறந்தர நந்தி, ஆரியர் |
|
பொன் படு நெடு வரை புரையும் எந்தை |
20 |
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண் |
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ? |
|
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து, |
|
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை |
|
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர் |
25 |
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே! |
|
காமம் மிக்க கழி படர் கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து, சொல்லியது. -இம்மென்கீரனார் | | உரை |
|
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி, |
|
இமையக் கானம் நாறும் கூந்தல், |
|
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம் |
|
பருகுவன்ன காதல் உள்ளமொடு, |
5 |
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார் |
|
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த |
|
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட, |
|
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை |
|
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி, |
10 |
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ, |
|
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் |
|
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள் விளி, |
|
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப் |
|
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி, |
15 |
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், |
|
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல், |
|
வேய் கண் உடைந்த சிமைய, |
|
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | | உரை |
|
நகை நன்று அம்ம தானே ''அவனொடு, |
|
மனை இறந்து அல்கினும் அலர், என நயந்து, |
|
கானல் அல்கிய நம் களவு அகல, |
|
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை, |
5 |
நூல் அமை பிறப்பின், நீல உத்தி, |
|
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி, |
|
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை |
|
நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந் தினைக் |
|
குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, நல் நான்கு |
10 |
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ, |
|
பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி, |
|
மதியுடை வலவன் ஏவலின், இகு துறைப் |
|
புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர்க் |
|
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி, |
15 |
பால் கண்டன்ன ஊதை வெண் மணல், |
|
கால் கண்டன்ன வழி படப் போகி, |
|
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண், |
|
இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி, துறை கெழு |
|
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை, |
20 |
பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு, |
|
நேமி தந்த நெடுநீர் நெய்தல் |
|
விளையா இளங் கள் நாற, பலவுடன் |
|
பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும் |
|
புதுவது ஆகின்று அம்ம பழ விறல், |
25 |
பாடு எழுந்து இரங்கு முந்நீர், |
|
நீடு இரும் பெண்ணை, நம் அழுங்கல் ஊரே! |
|
தலைமகன் வரைந்து எய்திய பின்றை, தோழி தலைமகட்குச் சொல்லியது. -உலோச்சனார் | | உரை |
|