பக்கம் எண் :

249

னென்னும் அதிகாரப்புறநடையான் இந்நிகரன வெல்லாம் அமைத்துக்கொள்க' (தொல். விளி. சூ. 35, தெய்வச்.) ; யகாரவீறு சேய்மைக்கண் அளபெடுத்தல் விளியுருபாமெனக் கூறி இவ்வடிகளை மேற்கோளாகக் காட்டினர்; (இ. வி. சூ. 212, உரை) . "விளங்குமணிக் கொடும்பூணாய்" என விளியேற்றது; நேமி. சொல், 28.

3. மலையைப்பாடுதல் : புறநா. 131 : 3, 143 : 12; "தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை, வான்பொரு நெடுவரை வளனும் பாடி" (சிறுபாண். 127 - 8, குறிப்புரை)

3 - 5. புறநா. 129 : 6, குறிப்புரை.

(130)

131

மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன்
வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ
களிறுமிக வுடையவிக் கவின்பெறு காடே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) முகிலினம் சென்று தங்கும் உயர்ந்தமலைக்குத் தலைவன், சுரபுன்னைப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியினையும் வாய்த்த (வாய்த்த-தப்பாத) வாளினையுமுடைய அண்டிரனது மலையைப் பாடினவோ களிறுகளை மிகவுமுடைய இந்தக் கவினையுடைய காடு?-எ - று.

யானைக்குப் பிறப்பிடமாயிருக்கிற காட்டினும் அண்டிரனைப் பாடி னோர், யானை மிகவுமுடையரென்று அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறு. ஆய்க்கு அண்டிரனென்பதும் ஒரு பெயர்.

(கு - ரை.) 3. புறநா. 130 : 3, குறிப்புரை.

4. புறநா. 129 : 6, குறிப்புரை. களிறு - ஆண்யானையின் பெயராக இருப்பினும் இங்கே யானைக்குப் பொதுப் பெயராயிற்று.

(131)

132

முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே
ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே
பாழூர்க் கிணற்றிற் றூர்கவென் செவியே
நரந்தை நறும்புன் மேய்ந்த கவரி
5குவளைப் பைஞ்சுனை பருகி யயல
தகரத் தண்ணிழற் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான்றோ யிமயம்
தென்றிசை யாஅய்குடி யின்றாயிற்
பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே.

(பி - ம்.) 1 ‘பின்னுள்ளின் யானே’