| பேதைச் சோழ னென்னுஞ் சிறந்த | | 10 | காதற்கிழமையு முடைய னதன்றலை இன்னதோர் காலைநில்லலன் இன்னே வருகுவ னொழிக்கவவற் கிடமே. |
(பி - ம்.) 2 ‘காண்டலீயாது’ திணையும் துறையும் அவை. அவன் வடக்கிருந்தான் பிசிராந்தையார்க்கு இடனொழிக்க வென்றது. (இ - ள்.) ‘நின்னை அவன் கேட்டிருக்கும் அளவல்லது சிறிது பொழுதும் காண்டல்கூடாது பல்யாண்டுசெல்லத் தவறின்றாக மருவிப்போந்த உரிமையையுடையோராயினும் அரிதே தலைவ! அவ்வழுவாத கூற்றிலே படவொழுகுதல்’ என்று கருதி ஐயப்படாதொழிமின்; நிறைந்த அறிவினையுடையீர்! அவன் என்னை என்றும் இகழ்ச்சியிலனாய் இனிய குணங்களையுடையன்; பிணித்த நட்பினையுடையன்; புகழ் அழியவரூஉம் பொய்ம்மையை விரும்பான்; தனது பெயரை பிறர்க்குச் சொல்லும்பொழுது என்னுடைய பெயர் பேதைமையையுடைய சோழனென்று எனது பெயரைத் தனக்குப் பெயராகச் சொல்லும் மிக்க அன்புபட்ட உரிமையையுமுடையன்; அதற்கு மேலே இப்படி யான் துயரமுறுங்காலத்து ஆண்டு நில்லான்; இப்பொழுதே வருவன்; அவனுக்கு இடம் ஒழிக்க-எ - று. ‘அதற்பட’ என்பதற்கு அவ்விறந்துபாட்டிலே படவென்றும், ‘இகழ்விலன்’ என்பதற்கு இகழப்படுவன குணமிலனென்றும் உரைப்பினும் அமையும். பேதைச்சோழனென்றது, தான் தன்னை இழித்துக்கூறியது. (கு - ரை.) 1-5. ‘‘புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான், நட்பாங் கிழமை தரும்” (குறள், 785) 6. ‘‘யாத்தன்று நட்பே” (குறுந். 313 : 4) 7. ‘‘பொய்யாமை யன்ன புகழில்லை” (குறள், 296) (216) 217 | நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே எனைப்பெருஞ் சிறப்பினோ டீங்கிது துணிதல் அதனினு மருட்கை யுடைத்தே பிறனாட்டுத் தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி | | 5 | இசைமர பாக நட்புக் கந்தாக இனையதோர் காலை யீங்கு வருதல் வருவ னென்ற கோனது பெருமையும் அதுபழு தின்றிவந்தவ னறிவும் வியத்தொறும் வியத்தொறும்வியப்பிறந் தன்றே |
|