பக்கம் எண் :

412

மன் கழிவின்கண் வந்தது.

வெருவா வழங்குமென இயையும்.

'முரசும் கண்கிழிந்தன, யானையும் மருப்பிழந்தன' என்ற கருத்து: அவற்றால் தொழில்கொள்வாரின்மையின், அவை பயனிழந்தனவென்பதாம்.

(கு - ரை.) 1. புறநா. 228 : 12, குறிப்புரை.

2. செவிசெஞ்சேவல் : புறநா. 370 : 26, 373 : 38; அகநா. 77.

1-2. 'கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த, செவிசெஞ் சேவலும்: என முறைமயங்கி வந்ததாலெனின், ஆண்டுச் செஞ்செவியென்பது மொழிமாறி நின்றது' (தொல். கிளவி. சூ. 26, தெய்வச்.)

3. மு. புறநா. 362 : 17.

1-3. செய்யுட்கண் வண்ணச்சினைச்சொல் அடை சினை முதலெனு மூன்றும் முறைமயங்கி வந்ததற்கு மேற்கோள் (தொல். கிளவி. சூ. 26, சே.,ந.; இ. வி. சூ. 314, உரை) ; ‘கவிசெந்தாழிக்......கூகையுங் கூடி: எனவருவன,

கொம்புகூர்மாடு, மடல்விரிதாழை என்றாற்போல வருதலின், உயர்திணை தொடர்ந்த பொருண்முதலாறும் என்னுஞ் சூத்திரத்துள் அஃறிணையொடு சார்த்தின் அஃறிணை முடிபினவாமென அமைத்த தன்பாற்படுமென்க' (நன். வி. சூ. 403)

6. புறநா. 261 : 18 - 9, 280 : 14.

8. முரசங் கண்கிழிதல் : புறநா. 229 : 19.

10-12. ‘வெந்திறற் கூற்றம்......அந்தோவளியேன் வந்தனென் மன்ற: என்றவழி அந்தோவென்பது கேடுகுறித்து நின்றது' (தொல். இடை. சூ. 33,தெய்வச்.)

14. மரம்: பு. வெ. 111, உரை.

18-9. 'சங்கடத்திற் சாவதே நன்று' (தனிப்பாடல்)

(238)

239

தொடியுடைய தோண்மணந்தனன்
கடிகாவிற் பூச்சூடினன்
தண்கமழுஞ் சாந்துநீவினன்
செற்றோரை வழிதபுத்தனன்
5நட்டோரை யுயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
இரந்தோர்க்கு மறுப்பறியலன்
10வேந்துடையவையத் தோங்குபுகழ் தோற்றினன்
வருபடையெதிர்தாங்கினன்