பக்கம் எண் :

436

‘மனையோள் கூந்தனோக்கி’ என்பதற்கு, ‘பாண! என் மனைவியது சரியும் மயிரை நோக்கி’ எனவும், ‘புரவுத்தொடுத்து’ என்பதற்கு ‘அன்று உம்மைப் புரந்த பரிசைப் பாடி’ எனவும் உரைப்பாரும் உளர்.

(கு - ரை.) 2. விளரி, நெய்தற்குரித்தாகலின், இரங்கற்பண்ணாயிற்று.

15 - 9. "வாள்வாயு மின்றி வடிவெங்கணை வாயு மின்றிக், கோள்வாய் மதிய நெடியான்விடுத் தாங்கு மைந்தன், தோள்வாய் சிலையினொலியாற்றொறு மீட்டு மீள்வான், நாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வ தொத்தான்” (சீவக.454)

20 - 21. "படநாகந் தோலுரித்தாற் போற்றுறந்து”, ‘’பாம்புரிபோன் முற்றத் துறந்து” (சீவக. 1546, 3039)

23. புறநா. 4: 6, 169: 10 - 11.

25 - 8.புறநா. 249: 12- 4; 264: 1 - 4.

மு.ஆபெயர்த்துத்தருதலென்னும் துறைக்கு மேற்கோள்காட்டி, ‘இதனுள் தன்னூரென்றலிற் குறுநிலமன்னன் நிரைமீட்டுப் பட்ட நிலையைப் பாணர் கையற்றுக்கூறியது’ என்பர்; தொல். புறத்திணை. சூ. 5, ந.

(260)

261

அந்தோ வெந்தை யடையாப் பேரில்
வண்டுபடு நறவிற் றண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ்சோற்ற முரிவாய் முற்றும்
வெற்றியாற் றம்பியி னெற்றற் றாகக்
5கண்டனென் மன்ற சோர்கவென் கண்ணே
வையங் காவலர் வளங்கெழு திருநகர்
மையல் யானை யயாவுயிர்த் தன்ன
நெய்யுலை சொரிந்த மையூ னோசை
புதுக்கண் மாக்கள் செதுக்க ணாரப்
10பயந்தனை மன்னான் முன்னே யினியே
பல்லா தழீஇய கல்லா வல்வில்
உழைக்குரற் கூகை யழைப்ப வாட்டி
நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை
விரகறி யாளர் மரபிற் சூட்ட
15நிறையிவட் டந்து நடுக லாகிய
வென்வேல் விடலை யின்மையிற் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழிகல மகடூஉப் போலப்
புல்லென் றனையாற் பல்லணி யிழந்தே.