பக்கம் எண் :

587

393

பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
குறுநெடுந் துணையொடு கூமை வீதலிற்
குடிமுறை பாடி யொய்யென வருந்தி
அடனசை மறந்தவெங் குழிசி மலர்க்கும்
5கடனறி யாளர் பிறநாட் டின்மையின்
வள்ளன் மையினெம் வரைவோர் யாரென
உள்ளிய வுள்ளமொ டுலைநசை துணையா
................கவக மெல்லா மொருபாற் பட்டென
மலர்தா ரண்ணனி னல்லிசை யுள்ளி
10ஈர்ங்கை மறந்தவெ னிரும்பே ரொக்கல்
கூர்ந்த வெவ்வம்விடக் கொழுநிணங் கிழிப்பக்
கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
மூடைப் பண்ட மிடை நிறைந் தன்ன
வெண்ணிண மூரி யருள நாளுற
15ஈன்ற வரவி னாவுருக் கடுக்குமென்
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்
போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன
அகன்றுமடி கலிங்க முடீஇச் செல்வமும்
கேடின்று நல்குமதி பெரும மாசில்
20மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி
ஆடுமக ளல்கு லொப்ப வாடிக்
கோடை யாயினுங் கோடி.......
காவிரி புரக்கு நன்னாட்டுப் பொருந
வாய்வாள் வளவன் வாழ்கெனப்
25பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே.

(பி - ம்.) 6 ‘வளளனமெனவவரை’ 7 ‘டுறுநசை’ 10 ‘மறைந்த’ 11 ‘கூர்ந்தவேவம்வீட’ 12 ‘விடுநிறை’ 15 ‘ஈன்றவாவினாருககடுககும்’ 16 ‘தொனறுபடி’ 22 ‘கொடியாயினுங்’ 24 ‘வளருவன’

திணையும் துறையும் அவை.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார்.

(கு - ரை.) 1. பழங்கண் - துன்பம். 2. துணை - மனைவி.

4. குழிசி - சமைத்தற்குரிய கலம். மலர்க்கும் - நிமிரச்செய்யும்.

6. எம்வரைவோர் - எம்மை ஏற்றுக்கொள்வோர்.

4 - 6. குழிசி மலர்க்குங் கடனறியாளர் - அரிசி முதலியன இல்லா மையாற் கவிழ்த்துவைக்கப்பட்டுள்ள கலத்தைச்சமைத்தற்