345
களிறணைப்பக் கலங்கின, காஅ
தேரோடத் துகள்கெழுமின, தெருவு
மாமறுகலின் மயக்குற்றன, வழி
கலங்கழாஅலிற், றுறை, கலக்குற்றன
5தெறன்மறவ ரிறைகூர்தலிற்
பொறைமலிந்து நிலனெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடியுயிர்ப் பன்ன கைகவ ரிரும்பின்
நோவுற ழிரும்புறங் காவல் கண்ணிக்
10கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை
மைய னோக்கிற் றையலை நயந்தோர்
அளியர் தாமேயிவ டன்னை மாரே
செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக்
15கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்
குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்ன மறவர்த் தாயினு மன்னோ
என்னா வதுகொ றானே
20பன்னல் வேலியிப் பணைநல் லூரே.

(பி - ம்.) 3 ‘மாவழங்கலின்’ 4 ‘கலக்கானாதே’ 5 ‘செறன் மறவர்’ 10 ‘நெருங்கண் வெம்முலை’, ‘நெடுங்கண் மென்முலை’ 14 ‘நீரலல்லோர்க் குந்தரல்’ 15 ‘ததுவாய்’ 18 ‘இன்னம்பிறவாததாயினும்’ 20 ‘பன்னெல் வேலி’

திணையும் துறையும் அவை.

அவனை அவர்.


(கு - ரை.) 1. "வினைநவில் யானை பிணிப்ப, வேர்துளங் கினநம் மூருண் மரனே", "செந்நுதல் யானை பிணிப்ப, வருந்தல மன்னெம் பெருந்துறை மரனே" (புறநா.347 : 12 - 3, 348 ; 8 - 9)

1 - 2. இவை சீர்கூனாய் வந்ததற்கு மேற்கோள் ; யா. வி. ஒழிபு. சூ. 2.

3. இவ்வடி வஞ்சியடியினிறுதியில் ‘வழி’ எனத் தனிச்சொல் வந்ததற்கு மேற்கோள் ; யா. வி. ஒழிபு. சூ. 1 ; இ. வி.சூ. 751, உரை.

4. கழாலின் - கழுவுதலால்.

வஞ்சியடியின் நடுவில் ‘துறை’ என்பது தனிச்சொல்லாகியும் கூனாகியும் வந்ததற்கு இவ்வடி மேற்கோள் ; யா. வி.ஒழிபு. சூ. 1, 2 ; இ. வி. சூ. 751, உரை.

5. இறைகூர்தல் - தங்குதல்6. பொறை - பாரம்.

7. வம்பவேந்தர் - புதிய அரசர்.

6 - 7. சேனைப்பாரத்தால் நிலம் நெளிதல் ; புறநா.23 : 15 ; "கார்விளை மேக மன்ன..........நிலனெளி பரந்த வன்றே" (சீவக. 433)

8. கைகவரிரும்பு - உலைத்துருத்தியின் வாயிரும்பு.

13. செருப்புகல் வேண்டி - போரைவிரும்பி ; "போரெனிற் புகலும் புனைகழன் மறவர்" (புறநா.31 ; 9)

14. நிரல் - வரிசை. தருதலில்லையென்று ; புறநா.343 ; 12.

15. கழிகளாற் கட்டப்பட்ட கேடகத்தை யுடையர் ; "வள்ளித்தண்டை" (சீவக. 2218). கதுவாய் - வடு ; "எறிந்திலை முறிந்த கதுவாய் வேலின்" (புறநா.347 : 4)

17. கழாத்தலையர் - கழுவாத தலையினையுடையர்.

19. மு. புறநா.347 ; 9.

18 - 9. ‘அன்னோ’ என்பது இரக்கக்குறிப்புணர்த்தியதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். இடை. சூ. 34, ந.

20. பன்னல் - பருத்தி ; "பருத்தி வேலிச் சீறூர்", "பருத்தி வேலி...... அங்குடிச் சீறூர்" (புறநா.299 : 1, 324 : 7 - 8)

மு.காஞ்சித்திணைத்துறைகளுள், மகட்பாற்காஞ்சிக்கு மேற்கோள் காட்டி, நிரலல்லோர்க்குத் தரலோவில்லென வென்றலின், அரசர்க்கு மகட்கொடைக்குரியரல்லாத அனைநிலைவகையோர்பாற்பட்டது’ என்பர் ; தொல்.புறத்திணை. சூ. 24, ந.

(345)