281
தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
5இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.

(பி - ம்.) 1 ‘தீங்கனி யரவமொடு’,‘தீங்கண விரமொடு’ 1 - 2 ‘மனைசெரீஇ யாங்குமருப்பியானை’ 3 ‘பையப் பெயர்த்து மைவிழுதிழுகி’7 ‘காக்கவம்மோ’ 9 ‘பூம்பொறியுடையநெடுந்’

திணை - காஞ்சி; துறை - பேய்க்காஞ்சி.

அரிசில்கிழார்.


(கு - ரை.) 1. இரவமொடு - இரவந்தழையோடு.செரீஇ - செருகி.

2. மருப்பு - யாழின் உறுப்புக்களுள்ஒன்றாகிய கோடு.

3. மையிழுது இழுகி - மையிட்டு.

4. ஐயவி - வெண்சிறுகடுகு. ஆம்பல் -ஆம்பலங்குழல்.

5. காஞ்சி - காஞ்சிப்பண்.

6. நறை புகைஇ - நறுநாற்றமுள்ள அகில்முதலியவற்றைப் புகைத்து.

1 - 6. புறநா. 296 : 1 - 2.

5 - 8. “கொழுநர் மார்பின், நெடுவசிவிழுப்புண் டணிமார் காப்பென, வறல்வாழ் கூந்தற்கொடிச்சியர் பாடல்” (மலைபடு. 302 - 4)

மு. “ஐயவி சிந்தி நறைபுகைத்தாய்மலர்தூய்க், கொய்யாக் குறிஞ்சி பலபாடி -மெய்யிணர்ப், பூப்பெய் தெரிய னெடுந்தகைபுண்யாங்காப்பப், பேய்ப்பெண் பெயரும் வரும்” (பு.வெ. 79)

காஞ்சித் திணைத்துறைகளுள், ‘இன்னகைமனைவி பேஎய் புண்ணோற், றுன்னுதல் கடிந்த தொடாஅக்காஞ்சி’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 19, இளம்.; ந.

(281)