(கு - ரை.) 1. சூட்டி - சூட்ட. 2. குளிர்நீங்க வீரபானமாகிய மதுவைக்குடித்து; மதுவுக்கு வெம்மை செய்தல் இயல்பு; “வெப்புடையமட்டுண்டு”, “வெங்கட்டொலைச்சியும்”, ”இன்கடுங்கள்ளின்”, “வெங்கட்டேறல்” (புறநா. 24 :5, 29 : 15, 80 : 1, 170 : 12); “உண்ணமது”, “உக்கிரவூறல்”(பெருங். 1. 38 : 60, 2. 2: 180); பரி. 7 : 61 - 2. 3. காற்றைத் தொழிலொழியச் செய்கின்றவளவிய செலவையுடைய குதிரை; என்றது, அதனினும் விரையநடக்கும் குதிரையென்றபடி; “காலியற் புரவி”, “வளிநடந்தன்ன வாச்செல லிவுளி”, “வெவ்விசைப் புரவிவீசுவளி யாக” (புறநா. 178 : 2, 197 : 1, 369 : 7,); “காற்கடுப்பன்ன கடுஞ்செல லிவுளி”, “வான்வழங் கியற்கைவளிபூட் டினையோ, மானுரு வாக” (அகநா. 224 : 5, 384: 9 - 10); “காலியக் கன்ன கதழ்பரி” (மதுரைக்.440) 4. பண்ணற்கு - சமைத்தற்கு. விரைதி- விரைவாய். 5. எம்முன் தப்பியோன் தம்பியொடு- எம் தமையனைக் கொன்றவனுடைய தம்பியுடன். ஒராங்கு- ஒருபடியாக; “நால்வேறு நனந்தலையோராங்கு நந்த”(பதிற். 69 : 16); கலித். 142 : 6. 6. நாளை யான் அமர்செய்து அவனைக்கொல்வேன். 7. பன்மான் - ஆராய்ந்த குதிரை. 8. கடவும் - செலுத்தும். என்ப : அசை. 7 - 8. பகையை வென்றபின்பே உண்ணுங்கருத்தினனாதலால்இவ்வாறு கூறினார்; “காலை முரச மதிலியம்பக் கண்கனன்று,வேலை விறல் வெய்யோ னோக்குதலும் - மாலை, அடுகமடிசிலென் றம்மதிலு ளிட்டார், தொடுகழலார் மூழைதுடுப்பு” (பு. வெ. 117) என்பதையும், ‘அம் மதிலுள்இட்டார், இதனை அழித்து இன்றுபோய் உண்பேமென்று’என்னும் அதன் விசேடவுரையையும் பார்க்க. 9. வலம்படுமுரசு - வெற்றியுண்டாதற்குக்காரணமாகிய முரசு; ‘’வலம்படு வியன்பணை” (பதிற்.17 : 5) என்பதும், ‘போர்செய்து வருந்தாமற் பகைவர்வெருவியோட முழங்கி அரசனுக்கு வென்றி தன்பாலேபடநின்ற முரசம்’ என்னும் அதன் உரையும் ஈண்டு அறியற்பாலன. 11. கூறியது - சபதம்; வஞ்சினம்கூறுதல் ஒன்றுமொழிதலென்று கூறப்படுதலும், ‘’வைத்தவஞ்சினம் வாய்ப்ப வென்று” (பதிற். 9. பதி.)என்பதும் ‘இரண்டாகாதவன் கூறியது’ என்பது சபதமென்றுபொருள்படுதலை வலியுறுத்தும். 9 - 11. அவன் கூறியது இரண்டாகாதென்றுஅரசனது பெரிய பாசறை நடுங்கியது. (304)
|