342
கானக் காக்கைக் கலிச்சிற கேய்க்கும்
மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்
ஏனோர் மகள்கொ லிவளென விதுப்புற்
றென்னொடு வினவும் வென்வே னெடுந்தகை
5திருநயத் தக்க பண்பினிவ ணலனே
பொருநர்க் கல்லது பிறர்க்கா காதே
பைங்காற் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை
மென்சேற் றடைகரை மேய்ந்துண் டதற்பின்
ஆர லீன்ற வையவி முட்டை
10கூர்ந லிறவின் பிள்ளையொடு பெறூஉம்
தண்பணைக் கிழவனிவ டந்தையும் வேந்தரும்
பெறாஅ மையிற் பேரமர் செய்தலிற்
கழிபிணம் பிறங்குபோர் பழிகளி றெருதா
வாடக வைகலு முழக்கும்
15மாட்சி யவரிவ டன்னை மாரே.

(பி - ம்.) 8 ‘மென்சொற்றடைகரை’, ‘மேயத்தூண்கற்பினாரல்’, ‘மேய்ந்துண்டகற்பினாஅலீன்ற’ 10 ‘கூனலிறவு’ 12 ‘பெறாமையின்மை யிறபேரமர்’ 14 ‘வாடகைவைகலு’ 14 - 5 ‘முழக்கி மாட்சியிலர்’

திணையும் துறையும் அவை.

அரிசில்கிழார்.


(கு - ரை.) 1. கலிச்சிறகு - தழைத்தலையுடைய சிறை.

2. மயிலை - இருவாட்சி.

3. ஏனோர் மகள்கொல் - யாவருடைய மகளோ ? விதுப்புற்று - விரைந்து ; "கண்விதுப்பழிதல்" (குறள், அதி. 118) என்பதன் பொருளால் உணர்க.4. நெடுந்தகை : விளி.

5. நயத்தக்க - விரும்பத்தக்க. நலன் : எழுவாய்.

6. பொருநர் - போர்வீரர்.

7 - 8. கொக்கின்பிள்ளை மேய்ந்தபின்.

9. ஆரல் - ஒருவகை மீன். ஐயவி - வெண்சிறுகடுகு. ஆரல்மீன் முட்டைக்கு ஐயவியுவமை.10, இறவு - இறாமீன்.

11. தண்பணை - மருதநிலம். கிழவன் - உரியவன்.

13. போர்பு - போர். களிறு எருதாக ; "படுபிணப் பல்போர் பழிய வாங்கி, எருதுகளி றாக வாண்மட லோச்சி" (புறநா.370 ; 15 - 6)

14. வாள்தக. 15. தன்னைமார் - தமையன்மார்.

(342)