(கு - ரை.) 1. பூவல் - செம்மண்; “தருமணற்றாழப்பெய் தில்பூவலூட்டி” (கலித். 114 : 12); “புனைமாணிஞ்சி பூவ லூட்டி” (அகநா. 195 : 3); “பூவலங்குன்றம்” (களவழி. 12). படு - மடு. தோண்டிய -தோண்டுதலால் உண்டாகிய; “களர்ப்படு கூவற்றோண்டி” (புறநா. 311 : 1); கலித். 114 : 12. ‘பூவல் - செம்மண்; பூவற் படுவிற்கூவற் றோண்டிய’ வென்றார் புறத்தினும்’ (சிலப்.16 : 3 - 6, அடியார்.) 2 - 3. பெய்த சாடி. 4. அந்நீர்மாசில்லாதது. 5. படலை - தழை; படலுமாம். உணங்கல்தினை - உலர்ந்த தினை. 6. இதல் - ஒருவகைப் பறவை; “இதல்கவர்ந்துண்டென” (புறநா. 320 : 11); “இதன்முட் செந்நனை,நெருங்குகுலைப் பிடவம்” (அகநா. 23 : 3). அறவும்- மிகவும். 7. பொழுது எல்லின்று - சூரியன் ஒளிமழுங்கியது;“ஏகுதி மடந்தை யெல்லின்று பொழுதே” (நற்.264 : 6) 9. இருந்தீமோ - இரு. முது - பேரறிவு:“முதுவா யிரவல” (புறநா. 48, 180 ; பதிற். 66) 10. ஆமான்கன்றை. 11. புன்றலை - சிவந்ததலை. 12. மன்னன் : எழுவாய். நெருநை ஞாங்கர்- நேற்று. 13. பகைமேற் சென்றனன். 14. பாடினி -பாணிச்சி. 15. வாடாத்தாமரை - பொற்றாமரைப்பூ;“எரியகைந் தன்ன வேடி றாமரை, சுரியிரும் பித்தைபொலியச் சூட்டி” (பொருந. 159 - 60); “பைம்பொற்றாமரை பாணர்ச் சூட்டி” (பதிற். 48) 14 - 5. புறநா. 11 : 11 - 7, குறிப்புரை. (319)
|