(கு - ரை.) 4.புறநா. 31 : 15. 7. மு. புறநா. 245 : 3 - 13, 237 : 13. 9. சேட்சென்னிநலங்கிள்ளி : புறநா. 27 : 10. 12-3. “வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய, காலை முரசங்கனைகுர லியம்ப” (சிலப். 14 : 13-4); “இயம்பும்வெண் சங்கெங்கும்”, “குருகுக ளியம்பின வியம்பின சங்கம்” (திருவா. திருவெம்பாவை, திருப் பள்ளியெழுச்சி); “புள்ளரையன் கோயில், வெள்ளை விளிசங்கின் பேரரவங் கேட்டிலையோ” (திருப்பாவை, 6) (225)
1.தூசிப்படை - முன்படை; சேனையின் முதலிற்செல்வோர் பனைநுங்கின் தீஞ்சேறுமிசைய வென்றதும், இடையிற்செல்வோர் பனங்கனிமாந்தவென்றதும், கடையிற்செல்வோர் பனம்பிசிரையும் சுட்ட பனங்கிழங்கையும் நுகரவென்றதும் சேனையின் மிகுதியையும் அது செல்லுதற்குரிய கால நீட்சியையும் உணர்த்தி நின்றன.
|