324
வெருக்குவிடை யன்ன வெகுணோக்குக் கயந்தலைப்
புள்ளூன் றின்ற புலவுநாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை யுடையின் சுரையுடை வான்முள்
5ஊக நுண்கோற் செறித்த வம்பின்
வலாஅர் வல்விற் குலாவரக் கோலிப்
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலந் தழீஇய வங்குடிச் சீறூர்க்
குமிழுண் வெள்ளை பகுவாய் பெயர்த்த
10வெண்காழ் தாய வண்காற் பந்தர்
இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
பாணரொ டிருந்த நாணுடை நெடுந்தகை
வலம்படு தானை வேந்தற்
குலந்துழி யுலக்கு நெஞ்சறி துணையே.

(பி - ம்.) 1 ‘வெருணோக்குக்’3 ‘வேட்டுவன்’ 4 - 5 ‘யுடையினை சுரையடை வானஞ்சுநுண்கோற்’6 ‘குலா புறக்’ 7 ‘வேலி கருபலிப் பார்க்கும்’ 9 ‘மதுவாய்’,‘மறுகுவாய் ‘மறுவாய்’ 10 ‘வெண்காழ்ப் பத்தரிடை’,‘காய’, ‘வன்காழ்ப்பந்தர்’

திணையும் துறையும் அவை.

ஆலத்தூர்கிழார்.


(கு - ரை.) 1. வெருக்குவிடை -காட்டுப்பூனையின் ஆண். கயந்தலை - மெல்லிய தலை.

வெருகினை விடையென்று கூறுவதற்கு இவ்வடிமேற்கோள்; தொல். மரபு. சூ. 68, பேர்.

2. கயவாய் - மெல்லிய வாய். 2 - 3.கயவாய்மகார்.

4. சிறிய இலைகளையுடைய உடைமரத்தின்உட்டுளையையுடைய வெள்ளிய முள்ளை; “உடையிலை நடுவணதிடைபிறர்க் கின்றித், தாமே யாண்ட” (புறநா.363 : 2 - 3)

5. ஊகநுண்கோல் - ஊகம்புல்லின்ஈர்க்கில்.

4 - 5. உடைமுள்ளை ஊகங்கோலிற்கோத்த அம்பினை உடையராய்.

6. வலார் - வளார்; மலாரென வழங்கும்.குலாவர - வளைய.

7. தொல். எச்ச. சூ. 17, ந. மேற்.

3 - 7. “ஆர்நாரின் றிண்கயிற்றாலமைச்சிறுகோல் வளைத்தவில்லும், கூர்வாய்முண்ணுனிபதித்த கோற்கோலுங் கைக்கொண்டு, கார் மேனிமைந்தரொடு கான்புகுந்து கொடுவிலங்கின், ஏர்வாய்மென்குருளைபல வெய்தல்செய்தான் விளையாட்டால்” (சீகாளத்திப்.கண்ணப்ப. 29) என்பது இவ்வடிகளின் பொருளை ஒருவாறுதழுவி வந்திருத்தல் காண்க.

7 - 8. “பருத்தி வேலிச்சீறூர்” புறநா.299 : 1.

9. குமிழுண் வெள்ளை - குமிழம்பழத்தைஉண்ணும் வெள்ளாடு.

10. காழ் - கொட்டை. தாய - பரந்த.பந்தரின்கீழ்.

11. இடையன் : புறநா. 331 : 4 - 5. பொத்திய- மூட்டிய.

12. நாண் - மானம். 14. உலக்கும் -இறக்கும்.

நெடுந்தகை (12) துணை (14)

மு. வேந்தற்குத் துணையாகச்செல்வோரைக் கூறியதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 5, ந.

(324)