(கு - ரை.) 1. “குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா, மடிகொன்று பால்கொளலு மாண்பே” (நீதிநெறி.29.) 1-3. இவ்வடிகளிற் கூறப்பட்டவற்றை, ‘பெரிய அறங்களைச் சிதைத்தலாவது ஆன்முலையறுத்தலும் மகளிர் கருவினைச் சிதைத்தலும் பார்ப்பார்த் தப்புதலுமுதலிய பாதகங்களைச் செய்தல்’ (குறள்,110) என உரைநடையிலமைத்தனர் பரிமேலழகர். 4. கழுவாயுமுள : குறள்,948, பரிமேல்.மேற். 1-4. “கொலைகளிற் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலைவல் வீரக், கொலைகருக் கொலைதாய் தந்தைக் கொலைகவைக் கோட்டு நல்லான், கொலைமுதற் பிறவு நீங்கும்” (காஞ்சிப்.சருவதீர்த்த. 14) 5. நற்.289 : 2; “நிலந்திறம் பெயருங் காலை யாயினும்” (பதிற்.63 : 6) 6. உய்தி - பிழைத்தல்; “உய்திக் கால முறையீ ரோவென” (சிலப்.10 : 240); “சார்பறுத் துய்தியும்” (மணி.25 : 5) 1-7. “எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள்,110); “சிதைவகல் காதற் றாயைத் தந்தையைக் குருவைத் தெய்வப், பதவியந் தணரை யாவைப் பாலரைப் பாவை மாரை, வதைபுரி குநர்க்கு முண்டா மாற்றலா மாற்றன் மாயா, உதவிகொன் றார்க்கென் றேனு மொழிக்கலா முபாய முண்டோ” (கம்ப.கிட்கிந்தை. 62) என்பன இங்கே அறியத்தக்கவை. 5-7. ‘பாட்டு’ என்னும் உரிச்சொல் சொல்லுதற்றொழிற் பண்பின்மேல் வருதற்கு மேற்கோள்; நன். மயிலை.சூ. 457; நன். வி.சூ. 458. 6-7. “நன்றி செய்குநர்ப் பிழைத்தோர்க் குய்வில வென்னும், குன்ற வாய்மை” (கல்லாடம்,4) 12. “இரத்தி மன்றமும்” (மணி.6 : 89). மன்றம் - பலர் இருந்து பேசுதற்குத்திண்ணை போடப்பட்டிருக்கும் மரத்தினடி; பொதியிலெனவும் வழங்கும். 14. “பெருஞ்சோற் றமலை” (மணி.17 : 2) 19. ஒருசொல்முன் ஒருசொல் வருங்கால் தொகைநிலைவகையானும், எண்ணுநிலைவகையானும், பயனிலைவகையானும் வருதலேயன்றி எச்சவகை, அடுக்குவகை, பொருள்கோள்வகை, ஆக்கவகை, இடைச்சொல் வகை, உரிச்சொல்வகை என்றாற்போலப் பிறவகையாலும் வருதலுண்டென்று கூறி இவ்வடியை இடைச்சொல்வகையான் வந்ததற்கு மேற்கோள் காட்டினர்; தொல்.கிளவி. சூ. 1, கல். 20-23. புறநா.123 :5 - 6, 302 : 11, 385 : 10 - 12; “நனந்தலையுலகஞ் செய்தநன் றுண்டெனின்......வாழிய பலவே” (பதிற்.63 : 18 - 21) மு. ‘வாழ்த்து’ என்னும் துறைக்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 29, இளம். (34)
1. ‘வாழ்நாட்கலகாகிய’ என்பது,“வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்” (நாலடி.22) என்பதனைத் தழுவியது. 2. கம்ப.கடல்காண். 2.
|