(கு - ரை.) 1 - 2. கலங்கிய கள்ளைஎமக்கே கொடுப்பான்; தான் தெளிந்த கள்ளையுண்பான் முன்பு; என்றது, தலைவன் எம்மை மேலாக மதித்துமுன்பு இனியது செய்வானென்றபடி, ‘எமக்கு’ என்பது தன்போல்வாரையும் உளப்படுத்தி நின்றது. மன் : கழிவுப்பொருளது. 3. வேந்து இனி இன்னான் - வேந்தன்இப்பொழுது இன்னாதவனாயினான்; அதனைப் பின் கூறுவார். 5. வாய்மடித்து : புறநா. 295 : 2. 4 - 5. பகைவருடைய மதிலைச் சூழ்ந்துஇதழைக் கவ்வி முழங்கிக் கொண்டு நீ முற்படுக வென்னானாகித்தான் முற்படுவான்; ஆதலால், இன்னானென்க. (298)
|