(கு - ரை.) 1 - 2. புறநா. 1 : 13,56 : 1 - 2; “நிமிர்புன் சடையின் முடியாய்”, “நீர்பரந்தநிமிர் புன்சடை மேலொர் நிலாவெண்மதிசூடி”,“நிமிர் புன்சடை யெம்மிறைவன்”, “நிமிர்புன்சடைப்பெருமான்” (தேவாரம்) 2. “முது முதல்வன்” (சிலப்.12 : ‘மறைமுதுமுதல்வன்’) 13. தொல். தொகை. சூ. 15, ந.; மேற்படி.கிளவி. சூ. 1, ந.; இ - வி. சூ. 75, உரை, மேற். 16. தொல். தொகை. சூ. 15, ந.;கிளவி. சூ. 1, ந.; இ - வி. சூ. 75. உரை, மேற். 21. மு. புறநா. 384 : 17. 22. புறநா.15 : 20 - 21. 23. புறநா. 160 : 29 - 30, 384 : 16. 22 - 3. தொல். மரபு. சூ. 73, பேர்.மேற். 28. “காவிரி புரக்கு நாடுகிழவோனே” (பொருந. 248) 26 - 8. “மலைத்தலைய கடற்காவிரி”(பட்டினப். 6); “குடமலைப் பிறந்த தண்பெருங்காவிரி” (மலைபடு. 527);“குடமலைப் பிறந்தகொழும்பஃறாரமொடு, கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்,காவிரி” (சிலப். 10 : 106 - 8) 30 - 31. எண்ணிடைச்சொல் வினைச்சொற்கண்வந்ததற்கு மேற்கோள்; தொல். இடை. சூ. 45, ந. 32. புறநா. 157 : 8, குறிப்புரை ; 368: 1 - 3. 33 - 4. புறநா. 2 : 20 - 24,குறிப்புரை. மு. அந்தணன் வேட்டதற்கும் (தொல்.புறத்திணை. சூ. 16, இளம்.); அந்தணன் வேட்டதற்கும்ஈதற்கும் (புறத்திணை. சூ. 20, ந.) மேற்கோள். (166)
1 பூஞ்சாற்றூர் - சோழநாட்டில்முடிகொண்டான் ஆற்றங்கரையில் உள்ளதோரூர். 2 கௌணியன் - கௌண்டின்னியகோத்திரத்திற்பிறந்தவன். 3 வேதத்தின் ஆறங்கங்களாவன:-வியாகரணம், சோதிடம், நிருத்தம், சந்தம்,சிக்கை, கற்பமென்பன; “கற்பங் கைசந் தங்காலெண்கண்,டெற்ற நிருத்தஞ் செவிசிக் கைமூக், குற்ற வியாகரணமுகம் பெற்றுச், சார்பிற் றோன்றா வாரண வேதக்,காதி யந்த மில்லை” (மணி. 27 : 100 - 104) 4 இருபத்தொரு வேள்விகளாவன :-ஸோமயஞ்ஞம்,7; ஹவிர்யஞ்ஞம், 7; பாகயஞ்ஞம், 7; அவற்றுள், ஸோமயஞ்ஞங்களேழாவன:- அக்கினிஷ்டோமம், அதியக்கினிஷ்டோமம், உக்தியம்,ஷோடசி, வாஜபேயம், அதிராத்திரம், அப்தோர்யாமமென்பன.ஹவிர்யஞ்ஞங்களேழாவன :- அக்னியாதேயம், அக்னிஹோத்திரம்,தரிசபூர்ணமாசம், சாதுர்மாஸ்யம், நிரூடபசுபந்தம்,ஆக்கிரயணம், ஸௌத்திராமணியென்பன. பாகயஞ்ஞங்களேழாவன:-அஷ்டகை, ஆபார்வணம், சிராத்தம், சிராவணி, ஆக்கிரகாயணி,சைத்திரி, ஆச்வயுஜி யென்பன. 5 யாகத்தலைவர்கள் யாகஞ்செய்யுங்காலத்துக்கலைமானின் உறுப்புத் தோலைப் போர்த்துக்கொள்ளுதல்மரபு; “கடகரி யுரிவை போர்த்த கண்ணுதற் கடவுண்மாறி, இடம்வல மாகப் பாகத் திறைவியோ டிருந்தவாபோல், உடல்கலை யுறுப்புத் தோலி னொளித்திடப்போர்த்து வேள்விக், கடனினுக் குரிய வெல்லாங் கவினுறச்சாத்தினானே” (வில்லி பாரதம், இராசசூய. 104) 6 சாலகம் - ஜாலகம்; இது யாகபத்தினிகள்அணியும் அணிவிசேடம். 7 யாகங்களுட் சிலவற்றிற் பணிவிடைசெய்தற்குப் பத்தினிகள் மூவருக்குக் குறையாதிருத்தல்வேண்டுமென்பது விதி. 8 காட்டுப்பசு ஆரண்யபசுவென்றும்,நாட்டுப்பசு கிராமப்பசுவென்றும் வழங்கப்படும். 9 “வேதநாவினர்”, “பாடினார்சாம வேதம்”, “சாமத்தினிசை வீணை தடவிக் கொண்டார்”,“சாமவேத மோதி” (தேவாரம்)
|