(கு - ரை.) 4-5. “இயைவது கரத்தலிற் கொடுமை யில்லை” (முதுமொழிக்காஞ்சி, 55) 4-6. கலித். 100 : 12. 1-7. “இசையா வொருபொரு ளில்லென்றல் யார்க்கும், வசையன்று வையத் தியற்கை”, “நட்டார்க்கு நள்ளா தவர்க்கு முளவரையால், அட்டது பாத்துண்ட லட்டுண்டல்-அட்ட, தடைத்திருந் துண்டொழுகு மாவதின் மாக்கட், கடைக்குமா மாண்டைக் கதவு” (நாலடி. 111, 271); “இசைவ கொடுப்பதூஉ மில்லென் பதூஉம், வசையன்று வையத் தியற்கையஃ தன்றிப், பசைகொண் டவனிற்கப் பாத்துண்ணானாயின், நசைகொன்றான் செல்லுலக மில்” (பழ. 24) 12. வளிமறை - காற்றை மட்டும் மறைப்பது. 13. “உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினும், செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று” (தொல். களவியல், சூ. 22); “உயிரினுஞ் சிறந்த நாணும்” (நற். 17 : 8); “தாயிற் சிறந்தன்று நாண்டையலாருக்கந் நாண்டகைசால்.... தோளிதிண் கற்பின் விழுமிதன்று” (திருச்சிற். 204); பு. வெ. 278. 14. குறுமகள் - மனைவி. 14-5. ‘அத்தை’ என்னும் இடைச்சொல் முன்னிலைக்கண் அசை நிலையாய் வந்ததற்கு மேற்கோள்; நன். சூ. 439, மயிலை; நன் - வி.சூ. 440. மு.பாடாண்டிணைத்துறைகளுள் கொடார்ப்பழித்தற்கு மேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 29, இளம்.; சூ. 35, ந.); ‘ஒல்லுவதொல்லுமென்னும் புறப்பாட்டினுள், நோயிலராக நின்புதல்வர் எனவும், சிறக்கநின் னாளே எனவும் வரும் மங்கலச்சொல் கெடுகவென்னும் பொருள்பட்டவாறு காண்க’ (தொல். பொருளியல், சூ. 48, இளம்.) (196)
1.“தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற், றெம்மையிகழ்ந்த வினைப்பயத்தால்-உம்மை, எரிவாய் நிரயத்து வீழ்வர்கொலென்று, பரிவதூஉஞ் சான்றோர் கடன்” (நாலடி. 58)
|