(கு - ரை.) புறநா. 54 : 7. 2. யானைக்கு மலை : புறநா. 38 : 1. பெரும்பாண். 352; மதுரைக். 46; மலைபடு. 572. 6, புறநா. 76 : 2. 7. புனற்பூசல் - நீர்விளையாட்டால் உண்டாகும் சண்டை. 9. இவ்வடியை மனத்துட் கொண்டு சிலப்பதிகாரஉரையில் ‘பகைவர் தெறுதலைக் கனவிலுநினைந்தறியாத வெனவுமாம்; (சிலப். 14 : 200, உரை) என அடியார்க்குநல்லார்எழுதியுள்ளார். 7 - 9. ‘நீரழி பாக்கமென்றது வெள்ளத்தான் அழிவுபடினல்லது பகைவரான் அழியாத பாக்கமென்றவாறு’ (பதிற். 13 : 12, உரை; 28 : 11 - 3) 10. “குட்டியைத் தின்ன லாமோ கோட்புலி புறத்த தாக”(சீவக. 1134); புலிதானே புறங்காக்கக் குட்டிகோட் படாதென்ன, ஒலியாழி யுலகுரைக்கு முரைபொய்யோ”, “புன்புற மயிரும் பூவாக் கட்புலம் புறத்து நாறா, வன்பறழ் வாயிற் கவ்வி வல்லிய மிரிந்த” (கம்ப. சூர்ப்பநகை. 102, கடறாவு. 7) 17 - 8. வன்புலம் - குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும்; இவை வன்பால் எனவும் வழங்கும். மென்புலம் - மருதமும் நெய்தலும்; மென்பாலெனவும் வழங்கும். “வன்புல...........பொருந : என்றக்காற் பகைவேந்தரை வென்றிகொள்ளுங்கால் அவர்தாமே தத்தம் பொருள் பிறர்க் களிப்பாரென்னும்பொருள் தோன்றினுந்தோன்றுமென்பதல்லது ஒருதலையாக உள்ளுறையுவமங் கோடல் வேண்டுவதன்று; என்னை? ‘தாய் சாப்பிறக்கும்.......அவனூர்’ (ஐங்குறு. 24) என்றாற்போலக் கூறாது அந் நாட்டுக்கருங்களமர் முதலாயினோர் வருந்தாமற் பெறும் பொருள் பிற நாட்டார்க்கு விருந்து செய்யத் தகுமென்று, அந்நாட்டினது வளமை கூறினமையினென்பது” (தொல். உவம. சூ. 31, பேர்.) 19 - 21. “கல்வீ ழருவி கடற்படர்ந் தாங்குப், பல்வேறு வகையிற் பணிந்த மன்னர்” (பெரும்பாண். 427 - 8); “தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின், மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்கு, யாமவ ணின்றும் வருதும்” (மலைபடு. 51 - 3); “கடுவரை நீரிற் கடுத்துவர” (பு. வெ. 11); “பெய்யு மாரியாற் பெருகு வெள்ளம்போய், மொய்கொள் வேலைவாய் முடுகு மாறுபோல்” (கம்ப. கையடை. 15) 22.புறநா. 3 : 12, குறிப்புரை பார்க்க; கூற்றுவெகுண்டு வரினு மாற்றுமாற் றலையே” (பதிற். 14 : 10) 23 - 4. ‘கூற்று......நோக்கினையே: என்பது வெகுளியுவமம்’ (தொல். உவம. சூ. 19, பேர்.) 21 - 4. புறநா. 203; நெருந லென்பது சென்றது நின்ற, இன்னுஞ் செல்லா நின்றது முன்சென்று, வருநாள் கண்டா ரியாரே யதனால், ஒருநா ளகப்படுத் துடையோ ரின்மையின், நல்லது நாடுமி னுள்ளது கொடுமின், வழாஅ வின்பமும் புணர்மி னதாஅன்று, கீழது நீரகம் புகினு மேலது, விசும்பின் பிடர்த்தலை யேறினும்புடையது, நேமி மால்வரைக் கப்புறம் புகினும், கோள்வாய்த்துக் கொட்குங் கூற்றத்து, மீளிக்கொடுநா விலக்குதற் கரிதே” (ஆசிரியமாலை) மு. கொள்ளார்தேஎங்குறித்த கொற்றமெனுந் துறைக்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 10, இளம்.; சூ. 12, ந. (42)
1. மருந்து - பரிகாரம் புறநா. 3 : 12; கலித். 89 : 10.
|