(கு - ரை.) 2. புறநா. 42 : 6;“பண்டுமிவ் வுலகத் தியற்கை யஃதின்றும், புதுவ தன்றே”(கலித். 22 : 3 - 4); “புதுவ தன்றே தொன்றியல்வாழ்க்கை” (சிலப். 30 : 140) 4. மன்றவேம்பு : புறநா. 45 : 2, 79 :2, 317 : 7. மாச்சினை : பொருந. 143-4. 4-5. புறநா. 22 : 20-21, குறிப்புரை; 77:2-3;போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த, கடவுள்வாகை” (பதிற். 66); “ஆரொடேர்பெறத்துளவியறும்பையஞ் சுழியச் சூடினான்” (கம்ப. முதற்போர். 115) 5. பகைவருடைய ஊர்மதிலை வளைத்துப்போர்செய்யச் செல்கின்றானாதலின் உழிஞை கூறினார். 8. கிணைகறங்கச் செல்லுதல் : புறநா.78 : 12, 79 : 3. 9-13. புறநா. 19 : 17, குறிப்புரை. 12. எழுவர் - சேரன், செம்பியன்,திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான்,பொருநன் என்பார்; அகநா. 36 : 15 - 20. மு. நூழிலென்னுந் துறைக்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 14, இளம்.நெடுஞ்செழியனுடைய இயல்பையும் வெற்றியையும் கூறினமையால்இச்செய்யுள் அரசவாகையாயிற்று. 77, 78-ஆம் செய்யுட்களுக்கும்இப்படியே கொள்க. (76)
1. 9-ஆம் அடியில் தலைவன்பெயரின் ஒரு பகுதி வந்துள்ளது, 2. மதுரைக். 55-6, குறிப்புரை
|