(கு - ரை.) 2. என் ஐ-எனதுதலைவன்; புறநா.84 : 1, 85 : 1, 89 : 9, 262 : 5; “என்னைமுன் னில்லன்மின்”(குறள், 771). முணங்கு நிமிர்தல்-வளைவு நிமிர்தல்.புறநா. 52 : 2. குறிப்புரை. 4. புறநா. 10 : 9-10, குறிப்புரை. 1-4. புறநா. 52 : 1 - 4, குறிப்புரை. 6. இளையன் : புறநா. 72 : 2,குறிப்புரை. 7. வம்பமள்ளர் : புறநா. 77 : 9, 79: 5. 9. அவரடுதல்; இரண்டாம் வேற்றுமைத்தொகை. 12. கிணைகறங்கச் செல்லல் : புறநா.76 : 8, குறிப்புரை. 9-12. “சிறுபடையான் செல்லிடஞ்சேரி னுறுபடையா, னூக்கமழிந்து விடும்” “சிறைநலனுஞ்சீரு மிலரெனினு மாந்தர், உறை நிலத்தோ டொட்டலரிது” (குறள், 498-9). உழிஞையைச் சூடிய வீரன்பகைவருடைய மதிலைச்சூழ்ந்து போர்செய்ய வேண்டுமென்பதுவிதியாதலாலும் இச்செழியன் உழிஞை சூடியவனாதலாலும்இங்ஙனம் போர் செய்வானாயினனென்பதுமொன்று; புறநா.76, 77-ஆம் பாடல்களைப் பார்க்க. (78)
1 சந்து-மூட்டுவாய;் “இருகாலுஞ்சந்துபோனால்” (காளமேகம்) 2 “வம்புநிலை யின்மை” (தொல்.உரி. சூ. 29)
|