79
மூதூர் வாயிற் பனிக்கய மண்ணி
மன்ற வேம்பி னொண்குழை மலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றி னியலி
வெம்போர்ச் செழியனும் வந்தன னெதிர்ந்த
5வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகறவச் சிறிதே.

(பி - ம்.) 2 ‘மிலைந்து’

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) தனது பழைய நகரிவாயிற்கட்குளிர்ந்த பொய்கையின் கண்ணே மூழ்கி மன்றத்திடத்துவேம்பினது ஒள்ளிய தளிரைச் சூடித்தெளிந்த ஓசையையுடைய1 பறைமுன்னாகக் களிறுபோலப் பெருமிதத்தோடுநடந்த வெய்ய போரையுடைய நெடுஞ்செழியனும் வந்தான்;அவனோடு பகைத்த நிலையில்லாத மறவர் பலரே; பகற்பொழுதுமிகச் சிறிதாதலால், அவருட் சிலர் படாதொழியவும்கூடும்-எ-று.

போர் மடந்தையைப் புணர வருகின்ற2 கன்னிப்போர் (பி - ம். கண்ணிப்போர்)ஆதலாற் பனிக்கயமண்ணி யென்றார.

கிணை முன்னர்வருதல், யானைக்கும்,இவனுக்கும் ஒக்கும்.


(கு - ரை.) 1. “என்னு மெல்லையினன்றென வவுணர்கோனெழுந்து, தன்ன தாகியவுறையுள்போய்த் தடம்புன லாடி” (கந்த. சூரபன்மன்வதை16)

2. புறநா. 76 : 4. இவ்வடி ஏழாம் வேற்றுமைத்தொகைக்குமேற்கோள்; தொல். எச்ச. சூ. 17, ந.

3. தெண்கிணை : 78 : 12. சிறந்த ஆடவர்நடைக்குக் களிற்றின் நடை உவமை: “மங்கல மழகளிறனைய செல்கையன்” (சூளா. குமாரகால. 9); “பொன்னாகமு நாகமு நாண நடந்தான்” (கம்ப. கார்முக.32)

(79)


1. யானைக்குமுன் பறைசெல்லுதல் மரபு: “வெரூஉப்பறைநுவலும் பரூஉப்பெருந் தடக்கை, வெருவரு செலவின் வெகுளிவேழம்” (பொருந. 171-2); “நிறையழி கொல்யானைநீர்க்குவிட் டாங்குப், பறையறைந் தல்லது செல்லற்க”(கலித். 56 : 32 - 3); “பாகும் பறையும் பருந்தின்பந்தரும், ஆதுல மாக்களு மலவுற்று விளிப்ப” (மணி.4 : 41 - 2); “பறைநிறை கொல்யானை”, “அறைபறையானை” (முத்தொள்ளாயிரம்)

2. “கடிக்கண்ணி வேந்தரை யாற்றுக் குடிக்கன்னிவாகைகொண்டே, முடிக்கண்ணி மேல்வைத்த மும்மதில்வேந்தன்” (பாண்டிக்கோவை); “காண்டுமிக்காளைதன் கன்னிப் போரெனா” (சூளா. அரசியல்.79); “காகுத்தன் கன்னிப் போரில்” (கம்ப.தாடகை. 77); “கன்னிவேட்டை மகன்போக” (பெரிய.கண்ணப்பர். 47); “மழவிடை கன்னி வேட்டம்வாய்த்துடன் வருக வென்றான்” (சீகாளத்திப்.கண்ணப்பச். 70); “கன்னிப்போர் செய்தருளி”(ஸ்ரீபராந்தகதேவர் மெய்க்கீர்த்தி). கன்னிப் போர்-முதற்போர்.